Jan 27, 2005
கிராமப்பொருளாதாரம் - என் கருத்துக்கள்
பத்ரியின் பதிவில் பதிந்த சற்றே நீளமான பின்னூட்டமிது. மற்றவர்களின் கருத்துக்காக இங்கே முன் வைக்கிறேன்.
-------------------------
கிராம பொருளாதாரத்தை மேம்படுத்துவதுப் பற்றி நீங்கள் பேசி வருவது நிறைவான விஷயம். நான் பதியப்போகிற விசயம் எந்தளவிற்கு உங்களின் பதிவோடு ஒத்துப்போகும் எனத்தெரியவில்லை. ஆனாலும், நீங்கள் சொல்வதைப் போலவே இது ஒரு விவாதத்தில் முடியக்கூடிய விசயமில்லை. அடிப்படை வசதிகள், கல்வி, சுகாதாரம் போன்றவை மிக அவசியம். அதில் ஜெயஸ்ரீ, கார்த்திக் கருத்துகளுடன் ஒத்துப் போகிறேன்.
நான் சொல்லவிழைவது இந்தியாவில் உள்ள பெரிய நிறுவனங்கள் இதனை ஒரு பெரும் காரியமாக எடுத்துக்கொண்டு அதில் முழு முனைப்போடு இறங்கியிருக்கின்றன. இது எத்தனை பேருக்கு தெரியும். இதனால், இந்தியா மாறிவிட்டது என்று பொருள் அல்ல. நாம் மாற்றவேண்டியவை, முன்னெடுத்து செல்ல வேண்டியவை நிறைய உண்டு. அதில் எனக்கு கருத்து வேறுபாடுகளில்லை. இங்கே நான் பதிய விரும்புவது, தற்போது நடைமுறையில் உள்ள முயற்சிகளும் அதன் பலன்களும் மட்டுமே.
அமுல்:
அமுல் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அமுலின் முக்கியமான விற்பனையாளர்கள், குஜராத் மற்றும் சுற்றியுள்ள மாநிலங்களிலுள்ள சிறு விவசாயிகள், ஆடு, மாடு வளர்ப்பவர்கள். இன்று இந்தியாவில் ஒரு இன்றியமையாத பிராண்டாக அது மாறியுள்ளது என்பது ஒரு கூட்டுறவினால் என்பது மெச்சத்தக்கது. கூட்டுறவு அமைப்பில் சில, பல குறைபாடுகள் இருக்கலாம், அதில் எனக்கு கருத்து வேறுபாடுகளுண்டு. ஆனாலும், இது ஒரு முக்கியமான பாதை.
ஐஐடியின் என்-லாக்
சென்னை ஐஐடியின் என்-லாக் பற்றி அறிந்திருப்பிர்கள் என்று நினைக்கிறேன். என் - லாக் செய்வது ஒரு மிக முக்கியமான பணி என்பது என் எண்ணம். ஒரு பன்னூடக கியாஸ்கை (Multimedia & Browsing Kiosk) ஒவ்வொரு கிராமங்களில் உருவாக்குவதன் மூலம் ஒரு வலைப்பின்னலை சத்தமில்லாமல் செய்துக் கொண்டிருக்கிறது. ஒரு கியாஸ்கினால் பெரிய வேலை வாய்ப்புகள் வாராது என்பது ஒரு சாரரின் கருத்து. என்னைப் பொருத்தவரை, அது மிகச் சிறந்த ஒரு முன்மாதிரி. இணையம், மின்னஞ்சல், வெப்கேம் மற்றும் பிற தகவல் சாதனங்களின் மூலமாக ஒரு கிராமத்தையும் (அல்லது பல கிராமங்களையும்) , அந்த கிராமத்திற்குத் தேவைப்படும் விசயங்களையும் ஒருங்கிணைக்க இதனால் முடியும். எல்லாவிதமான தகவல்களையும் இதன் மூலம் விநியோகிக்க முடியும். ஏறக்குறைய, 11/2 வருடங்களுக்கு முன்பே, வெப்கேமின் வழியே மருத்துவ ஆலோசனைகளையும், விவசாய சார்புள்ள விசயங்களையும் இந்த கியாஸ்கள் செய்து வருகின்றன என்பது உண்மையிலேயே நிறைய பேருக்கு வியப்பூட்டும் செய்தியாக இருக்கும்.
ஈ-சோபால் - ஐடிசி
தனியார் நிறுவனங்களின் மீது வீசப்படும் பெரும் குற்றச்சாட்டுகளில் மிக முக்கியமானது அவர்கள் கிராம சந்தையை(rural market) பற்றி கவலைபடுவது இல்லை (நன்றி: ஜேஸ்ரீ) என்பது தான். ஆனால், உண்மை என்னவென்றால், அரசாங்கத்திற்கு முன்னர், எல்லா வசதிகளையும் முன் எடுத்து செல்பவை தனியார் நிறுவனங்கள். உதாரணத்திற்கு, ஐடிசி யை எடுத்துக்கொள்வோம். ஐடிசியின் ஈ-சோபால் என்ற திட்டத்தில், மகாராஷ்டிரா, உத்தரான்ஞல் போன்ற மாநிலங்களில் மட்டும் 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர். இதுவும் ஏறத்தாழ, என் - லாக் செய்வதுப் போல, ஒரு கியாஸ்க்கை நிறுவி, அதன் முலம் விவரங்களை தருகின்றது. மிக முக்கியமாக இங்கு நீங்கள் கவனிக்க வேண்டியது, அவர்களின் distribution network. ஐடிசியின் விவசாயப் பொருட்களுக்கான சந்தையின் நீட்சிதான் இது. ஈ-சோபாலில் உறுப்பினராக உள்ள விவசாயியின் வீட்டிற்கு உரமுட்டைகளும், விதைகளும், நிலம் சார்ந்த அறிவியலாளரின் குறிப்புகளும், ஆலோசனைகளும் வந்து இறங்குகின்றன. இதற்குமுன் ஒரு விவசாயி, தன் விதைகளையும், பயிர் சார்ந்த பிறப் பொருட்களையும் வாங்க டவுனுக்கோ, பிற சந்தைக்கோ போக வேண்டிய நிலைமை இருந்தது. இது ஒரு மனரீதியான மாற்றமாய் பார்க்கலாம். ஒரு விற்பனையாளன் என்ற நிலை மாறி, இன்றைக்கு, ஐடிசி, அவர்களை தங்கள் வியாபாரத்தின் ஒரு பங்காளியாய் (Channel Partner) பார்ப்பது ஒரு ஆரோக்கியமான மாற்றம். இது என்னளவில் ஒரு மிக முக்கியமான மாறுதல், இதன் மூலம், மிக அத்தியாவசியமான மாறுதல்கள் ஏற்படலாம் என்பது என் எண்ணம்.
பிராஜக்ட் ஷக்தி - HLL
இதைப் போன்றதொரு காரியத்தை, முருகப்பா குழுமத்தின் ஒரு அங்கமான பாரி விவசாயப்பொருட்களின் பிரிவும் செய்கிறது (Parry Agro Division). இதைத்தவிர மும்பாயினை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒரு பெண்களுக்கான் தன்னார்வ நிறுவத்தோடு (பெயர் மறந்துவிட்டது....சில மாதங்களுக்கு முன் பிபிசி - இந்தியா ஷோவில் பார்த்த்து) இந்தியாவின் மிகப்பெரிய வாடிக்கையார் பொருட்களை உற்பத்தி செய்யும் ஹிந்துஸ்தான் லீவர் நிறுவனம் (HLL) கைக்கோர்த்துக் கொண்டுள்ளது. அதன் பணி, ஒவ்வொரு கிராமத்திலும் அல்லது கிராம குழுமத்திலும் ( 10 -15 கிராமங்கள் அடங்கிய ஒரு குழு) உள்ள பெண்களை தயார்படுத்தி ஒரு குழு அமைத்து (Self Help Group) அதன் மூலம் பொருட்களை விற்பனை செய்வது. இந்த அமைப்புக்கு "பிராஜக்ட் ஷக்தி" என்று பெயர். உடனே நாம் அவர்கள் அவர்களின் தயாரிப்புகளைத் தான் விற்பார்கள், இதில் எங்கு பொருளாதார முன்னேற்றத்திற்கான வாய்ப்பு இருக்கிறது என்று, வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு களத்தில் இறங்கிவிட வேண்டியதில்லை. இதன் மூலம் வெளியுலகத் தொடர்புகள் பெருகும். ஒரு கிராமத்தின் உற்பத்தியென்ன, அதை வைத்துக்கொண்டு, கையில் இருக்கக்கூடிய குழுவின் மூலம் எப்படி புதுப் பொருட்களை தயாரிக்கலாம் என்ற சிந்தனைகள் வளர இது உதவும்.
கவின் கேர்
சென்னையைச் சார்ந்த கவின்கேர் நிறுவனம் HLLக்குப் போட்டியாக இன்று சந்தையில் உள்ளது.கவின்கேரின் (Cavin Care) இன்றைய வளர்ச்சிக்கு மிக முக்கியமான காரணம் அவர்கள் மிகத்தீவிரமாய் கிராம சந்தையை குறிவைத்து வியாபாரத்தை அமைத்து.
C.K. பிரஹாலாத் போன்ற மேலாண்மை குருக்கள் கூட மிக முக்கியமான எதிர்காலப் பிரச்சனையாக கிராமப் பொருளாதார முன்னேற்றத்தைத் தான் முன் வைக்கின்றார்கள். இதை எப்படி தீர்ப்பது அல்லது வழிகள் கண்டறிவது என்பதில் தான் எதிர்கால இந்திய சந்தை அடங்கியிருக்கிறது.
இவற்றைப் போல் ஆங்காங்கே சிறிதும் பெரிதுமாய் காரியங்கள் நடக்கின்றன. இவற்றை ஒருங்கிணைத்து இதன் மூலம் ஒரு வணிக சாத்தியமான நிறுவதலை (Business Model) கண்டெடுக்க முடிந்தால், அதன்பின் விசயங்கள் தானாய் நடக்க ஆரம்பித்துவிடும் என்பது என் கருத்து.
இதில் நம்மால் கட்டுப்படுத்த இயலாத விசயமொன்று உண்டென்றால், அது இயற்கை மட்டுமே.
இதற்கு உறுதுணையாயிருந்த தளங்கள்:
N-Logue - http://www.n-logue.co.in/
Shakthi - http://www.blonnet.com/catalyst/2003/05/29/stories/2003052900020100.htm
E-choupal - http://www.echoupal.com/default.asp
EID Parry - http://www.eidparry.com/stories.asp
http://www.washingtonpost.com/ac2/wp-dyn?pagename=article&node=&contentId=A13442-2003Oct11¬Found=true
-------------------------
இந்தப் பதிவினை எழுதத் தூண்டுதலாய் இருந்த பத்ரியின் பதிவு
பத்ரியின் கிராமப் பொருளாதாரத்தை இரட்டிப்பாக்க என்ன செய்ய வேண்டும் - பகுதி 1 | பகுதி 2
-------------------------
கிராம பொருளாதாரத்தை மேம்படுத்துவதுப் பற்றி நீங்கள் பேசி வருவது நிறைவான விஷயம். நான் பதியப்போகிற விசயம் எந்தளவிற்கு உங்களின் பதிவோடு ஒத்துப்போகும் எனத்தெரியவில்லை. ஆனாலும், நீங்கள் சொல்வதைப் போலவே இது ஒரு விவாதத்தில் முடியக்கூடிய விசயமில்லை. அடிப்படை வசதிகள், கல்வி, சுகாதாரம் போன்றவை மிக அவசியம். அதில் ஜெயஸ்ரீ, கார்த்திக் கருத்துகளுடன் ஒத்துப் போகிறேன்.
நான் சொல்லவிழைவது இந்தியாவில் உள்ள பெரிய நிறுவனங்கள் இதனை ஒரு பெரும் காரியமாக எடுத்துக்கொண்டு அதில் முழு முனைப்போடு இறங்கியிருக்கின்றன. இது எத்தனை பேருக்கு தெரியும். இதனால், இந்தியா மாறிவிட்டது என்று பொருள் அல்ல. நாம் மாற்றவேண்டியவை, முன்னெடுத்து செல்ல வேண்டியவை நிறைய உண்டு. அதில் எனக்கு கருத்து வேறுபாடுகளில்லை. இங்கே நான் பதிய விரும்புவது, தற்போது நடைமுறையில் உள்ள முயற்சிகளும் அதன் பலன்களும் மட்டுமே.
அமுல்:
அமுல் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அமுலின் முக்கியமான விற்பனையாளர்கள், குஜராத் மற்றும் சுற்றியுள்ள மாநிலங்களிலுள்ள சிறு விவசாயிகள், ஆடு, மாடு வளர்ப்பவர்கள். இன்று இந்தியாவில் ஒரு இன்றியமையாத பிராண்டாக அது மாறியுள்ளது என்பது ஒரு கூட்டுறவினால் என்பது மெச்சத்தக்கது. கூட்டுறவு அமைப்பில் சில, பல குறைபாடுகள் இருக்கலாம், அதில் எனக்கு கருத்து வேறுபாடுகளுண்டு. ஆனாலும், இது ஒரு முக்கியமான பாதை.
ஐஐடியின் என்-லாக்
சென்னை ஐஐடியின் என்-லாக் பற்றி அறிந்திருப்பிர்கள் என்று நினைக்கிறேன். என் - லாக் செய்வது ஒரு மிக முக்கியமான பணி என்பது என் எண்ணம். ஒரு பன்னூடக கியாஸ்கை (Multimedia & Browsing Kiosk) ஒவ்வொரு கிராமங்களில் உருவாக்குவதன் மூலம் ஒரு வலைப்பின்னலை சத்தமில்லாமல் செய்துக் கொண்டிருக்கிறது. ஒரு கியாஸ்கினால் பெரிய வேலை வாய்ப்புகள் வாராது என்பது ஒரு சாரரின் கருத்து. என்னைப் பொருத்தவரை, அது மிகச் சிறந்த ஒரு முன்மாதிரி. இணையம், மின்னஞ்சல், வெப்கேம் மற்றும் பிற தகவல் சாதனங்களின் மூலமாக ஒரு கிராமத்தையும் (அல்லது பல கிராமங்களையும்) , அந்த கிராமத்திற்குத் தேவைப்படும் விசயங்களையும் ஒருங்கிணைக்க இதனால் முடியும். எல்லாவிதமான தகவல்களையும் இதன் மூலம் விநியோகிக்க முடியும். ஏறக்குறைய, 11/2 வருடங்களுக்கு முன்பே, வெப்கேமின் வழியே மருத்துவ ஆலோசனைகளையும், விவசாய சார்புள்ள விசயங்களையும் இந்த கியாஸ்கள் செய்து வருகின்றன என்பது உண்மையிலேயே நிறைய பேருக்கு வியப்பூட்டும் செய்தியாக இருக்கும்.
ஈ-சோபால் - ஐடிசி
தனியார் நிறுவனங்களின் மீது வீசப்படும் பெரும் குற்றச்சாட்டுகளில் மிக முக்கியமானது அவர்கள் கிராம சந்தையை(rural market) பற்றி கவலைபடுவது இல்லை (நன்றி: ஜேஸ்ரீ) என்பது தான். ஆனால், உண்மை என்னவென்றால், அரசாங்கத்திற்கு முன்னர், எல்லா வசதிகளையும் முன் எடுத்து செல்பவை தனியார் நிறுவனங்கள். உதாரணத்திற்கு, ஐடிசி யை எடுத்துக்கொள்வோம். ஐடிசியின் ஈ-சோபால் என்ற திட்டத்தில், மகாராஷ்டிரா, உத்தரான்ஞல் போன்ற மாநிலங்களில் மட்டும் 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர். இதுவும் ஏறத்தாழ, என் - லாக் செய்வதுப் போல, ஒரு கியாஸ்க்கை நிறுவி, அதன் முலம் விவரங்களை தருகின்றது. மிக முக்கியமாக இங்கு நீங்கள் கவனிக்க வேண்டியது, அவர்களின் distribution network. ஐடிசியின் விவசாயப் பொருட்களுக்கான சந்தையின் நீட்சிதான் இது. ஈ-சோபாலில் உறுப்பினராக உள்ள விவசாயியின் வீட்டிற்கு உரமுட்டைகளும், விதைகளும், நிலம் சார்ந்த அறிவியலாளரின் குறிப்புகளும், ஆலோசனைகளும் வந்து இறங்குகின்றன. இதற்குமுன் ஒரு விவசாயி, தன் விதைகளையும், பயிர் சார்ந்த பிறப் பொருட்களையும் வாங்க டவுனுக்கோ, பிற சந்தைக்கோ போக வேண்டிய நிலைமை இருந்தது. இது ஒரு மனரீதியான மாற்றமாய் பார்க்கலாம். ஒரு விற்பனையாளன் என்ற நிலை மாறி, இன்றைக்கு, ஐடிசி, அவர்களை தங்கள் வியாபாரத்தின் ஒரு பங்காளியாய் (Channel Partner) பார்ப்பது ஒரு ஆரோக்கியமான மாற்றம். இது என்னளவில் ஒரு மிக முக்கியமான மாறுதல், இதன் மூலம், மிக அத்தியாவசியமான மாறுதல்கள் ஏற்படலாம் என்பது என் எண்ணம்.
பிராஜக்ட் ஷக்தி - HLL
இதைப் போன்றதொரு காரியத்தை, முருகப்பா குழுமத்தின் ஒரு அங்கமான பாரி விவசாயப்பொருட்களின் பிரிவும் செய்கிறது (Parry Agro Division). இதைத்தவிர மும்பாயினை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒரு பெண்களுக்கான் தன்னார்வ நிறுவத்தோடு (பெயர் மறந்துவிட்டது....சில மாதங்களுக்கு முன் பிபிசி - இந்தியா ஷோவில் பார்த்த்து) இந்தியாவின் மிகப்பெரிய வாடிக்கையார் பொருட்களை உற்பத்தி செய்யும் ஹிந்துஸ்தான் லீவர் நிறுவனம் (HLL) கைக்கோர்த்துக் கொண்டுள்ளது. அதன் பணி, ஒவ்வொரு கிராமத்திலும் அல்லது கிராம குழுமத்திலும் ( 10 -15 கிராமங்கள் அடங்கிய ஒரு குழு) உள்ள பெண்களை தயார்படுத்தி ஒரு குழு அமைத்து (Self Help Group) அதன் மூலம் பொருட்களை விற்பனை செய்வது. இந்த அமைப்புக்கு "பிராஜக்ட் ஷக்தி" என்று பெயர். உடனே நாம் அவர்கள் அவர்களின் தயாரிப்புகளைத் தான் விற்பார்கள், இதில் எங்கு பொருளாதார முன்னேற்றத்திற்கான வாய்ப்பு இருக்கிறது என்று, வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு களத்தில் இறங்கிவிட வேண்டியதில்லை. இதன் மூலம் வெளியுலகத் தொடர்புகள் பெருகும். ஒரு கிராமத்தின் உற்பத்தியென்ன, அதை வைத்துக்கொண்டு, கையில் இருக்கக்கூடிய குழுவின் மூலம் எப்படி புதுப் பொருட்களை தயாரிக்கலாம் என்ற சிந்தனைகள் வளர இது உதவும்.
கவின் கேர்
சென்னையைச் சார்ந்த கவின்கேர் நிறுவனம் HLLக்குப் போட்டியாக இன்று சந்தையில் உள்ளது.கவின்கேரின் (Cavin Care) இன்றைய வளர்ச்சிக்கு மிக முக்கியமான காரணம் அவர்கள் மிகத்தீவிரமாய் கிராம சந்தையை குறிவைத்து வியாபாரத்தை அமைத்து.
C.K. பிரஹாலாத் போன்ற மேலாண்மை குருக்கள் கூட மிக முக்கியமான எதிர்காலப் பிரச்சனையாக கிராமப் பொருளாதார முன்னேற்றத்தைத் தான் முன் வைக்கின்றார்கள். இதை எப்படி தீர்ப்பது அல்லது வழிகள் கண்டறிவது என்பதில் தான் எதிர்கால இந்திய சந்தை அடங்கியிருக்கிறது.
இவற்றைப் போல் ஆங்காங்கே சிறிதும் பெரிதுமாய் காரியங்கள் நடக்கின்றன. இவற்றை ஒருங்கிணைத்து இதன் மூலம் ஒரு வணிக சாத்தியமான நிறுவதலை (Business Model) கண்டெடுக்க முடிந்தால், அதன்பின் விசயங்கள் தானாய் நடக்க ஆரம்பித்துவிடும் என்பது என் கருத்து.
இதில் நம்மால் கட்டுப்படுத்த இயலாத விசயமொன்று உண்டென்றால், அது இயற்கை மட்டுமே.
இதற்கு உறுதுணையாயிருந்த தளங்கள்:
N-Logue - http://www.n-logue.co.in/
Shakthi - http://www.blonnet.com/catalyst/2003/05/29/stories/2003052900020100.htm
E-choupal - http://www.echoupal.com/default.asp
EID Parry - http://www.eidparry.com/stories.asp
http://www.washingtonpost.com/ac2/wp-dyn?pagename=article&node=&contentId=A13442-2003Oct11¬Found=true
-------------------------
இந்தப் பதிவினை எழுதத் தூண்டுதலாய் இருந்த பத்ரியின் பதிவு
பத்ரியின் கிராமப் பொருளாதாரத்தை இரட்டிப்பாக்க என்ன செய்ய வேண்டும் - பகுதி 1 | பகுதி 2
Comments:
<< Home
இன்னாப்பா, எங்க ஐடிசி? அப்புறம், YC தேவைஷ்வரும், ஈ-சோபாலின் MD சிவக்குமாரும் சண்டைக்கு வந்துடப் போறாங்க. அப்புறம் அம்பானிங்க மாதிரி, அரவிந்துக்காக அடிச்சிப்பாங்க.:-)
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home
Subscribe to Posts [Atom]