Mar 29, 2005
ஆசிய பூகம்பம் (ட்சுனாமி) - 4
No Tsunami. இதுவரை நான் பார்த்த எல்லா சேனல்களும், ட்சுனாமி ஏற்படும் சாத்தியக்கூறினை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டே வருகின்றன. பிபிசியில் சொன்னப்படி பார்த்தால், பூகம்பம் நிகழ்ந்த, 1 மணிநேரத்திற்க்குள் ட்சுனாமி வெளிப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இதுவரை உலகம் முழுக்க எவ்விதமான கடல் உயர்வோ, பேரலைகளோ, கடல் பரப்பில் மாற்றங்களோ நிகழவில்லை. முழுவதுமாக ஒதுக்கிவிட முடியாவிட்டாலும், கொஞ்சம் சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம் என்றுதான் தோன்றுகிறது.இந்திய அரசும், பல மாநிலங்களும் சொல்வது இதுதான்.No Panic. Precaution is better than anything.
அமெரிக்க ஜியொலெஜிக்கல் சொசையிட்டியின் படி, 8.7 ரிக்டர் ஸ்கேலில் நிகழ்ந்திருக்கிறது இது. இதனை தொடர்ந்து, அரைமணி நேர இடைவெளியில் இன்னொரு நில அதிர்வு 6.0 ரிக்டர் ஸ்கேலில் நடந்திருக்கிறது. சேனல்கள் சொல்வது போல் இது 8.2 ரிக்டர் அளவு அல்ல என்று தெரிகிறது.
ஜெ.ராம்கி சென்னை கடற்கரைக்கு சென்று வந்திருந்தார். பேட்ரோல் வண்டிகள், தொடர்ந்து முன்னெச்சரிகைகள் கொடுத்த வண்ணமிருக்கின்றன. சாந்தோமில் ப்ளாட்பாரத்தில் மக்கள் கூட்டம் ஒதுங்கியிருக்கிறது. துணைமேயர் வந்து பேசியிருக்கிறார். கடலூர் கலெக்டர் ககன்தீப் சிங் ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில் எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும், எவ்விதமான நில அதிர்வும், கடல் மட்ட உயர்வுமில்லை என்று சொன்னார்.
மாறுதலாய், அரசியல்வாதிகளின் பேட்டிகளை ஒளிபரப்பாமல், பல்துறை சார்ந்த (கடலாராய்ச்சி, வானியல், கடற்படை) நிபுணர்களை கலந்தாலோசித்து விஷயங்களையும், விவரங்களையும் தெரிவு படுத்திய என்.டி.டிவி, ஹெட்லையன்ஸ் டுடே போன்றவைகளை பாராட்ட வேண்டும்.
ஆனாலும், அடுத்த சில நாட்கள் கொஞ்சம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும் என்று உள்மனது எச்சரிக்கிறது.
இது காசிக்கு,
http://earthquake.usgs.gov/recenteqsww/rss.html - இந்த சுட்டி, அமெரிக்க ஜியோலாஜிகல் சொசையிட்டியின் RSS சுட்டி, இதில் நேற்றைய, ஒரு வாரத்திய விவரங்கள் கிடைக்கும், எங்கேனும் ஒரத்தில் தமிழ்மணத்தில் இருப்பின், உபயோகமாய் இருக்குமென்று தோன்றுகிறது.
அமெரிக்க ஜியொலெஜிக்கல் சொசையிட்டியின் படி, 8.7 ரிக்டர் ஸ்கேலில் நிகழ்ந்திருக்கிறது இது. இதனை தொடர்ந்து, அரைமணி நேர இடைவெளியில் இன்னொரு நில அதிர்வு 6.0 ரிக்டர் ஸ்கேலில் நடந்திருக்கிறது. சேனல்கள் சொல்வது போல் இது 8.2 ரிக்டர் அளவு அல்ல என்று தெரிகிறது.
ஜெ.ராம்கி சென்னை கடற்கரைக்கு சென்று வந்திருந்தார். பேட்ரோல் வண்டிகள், தொடர்ந்து முன்னெச்சரிகைகள் கொடுத்த வண்ணமிருக்கின்றன. சாந்தோமில் ப்ளாட்பாரத்தில் மக்கள் கூட்டம் ஒதுங்கியிருக்கிறது. துணைமேயர் வந்து பேசியிருக்கிறார். கடலூர் கலெக்டர் ககன்தீப் சிங் ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில் எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும், எவ்விதமான நில அதிர்வும், கடல் மட்ட உயர்வுமில்லை என்று சொன்னார்.
மாறுதலாய், அரசியல்வாதிகளின் பேட்டிகளை ஒளிபரப்பாமல், பல்துறை சார்ந்த (கடலாராய்ச்சி, வானியல், கடற்படை) நிபுணர்களை கலந்தாலோசித்து விஷயங்களையும், விவரங்களையும் தெரிவு படுத்திய என்.டி.டிவி, ஹெட்லையன்ஸ் டுடே போன்றவைகளை பாராட்ட வேண்டும்.
ஆனாலும், அடுத்த சில நாட்கள் கொஞ்சம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும் என்று உள்மனது எச்சரிக்கிறது.
இது காசிக்கு,
http://earthquake.usgs.gov/recenteqsww/rss.html - இந்த சுட்டி, அமெரிக்க ஜியோலாஜிகல் சொசையிட்டியின் RSS சுட்டி, இதில் நேற்றைய, ஒரு வாரத்திய விவரங்கள் கிடைக்கும், எங்கேனும் ஒரத்தில் தமிழ்மணத்தில் இருப்பின், உபயோகமாய் இருக்குமென்று தோன்றுகிறது.
Subscribe to Posts [Atom]