Jun 12, 2005
பைனாகுலர் 10350
ஜின்னா பாய்!!
ஒரு வழியாக எதிர்பார்த்தது போல அத்வானி மீண்டும் பா.ஜ.க தலைவராக இருக்க சம்மதித்து தன் ராஜினாமாவினை வாபஸ் வாங்கிவிட்டார். சங் பரிவார், விஹெச்பி கும்பல்கள், பா.ஜ.கவின் புதிய "ஜின்னா பற்றிய அறிக்கையினைக் கண்டு சந்தோஷப்பட்டு தங்கள் ஆதரவினை அளிப்பதாகக் கூறி கடந்த 4-5 நாட்களாக, செய்தித்தாள்களுக்கு போட்டிருந்த தீனியில் மண்ணள்ளிப் போட்டார்கள். பா.ஜ.க வும் தன் பங்குக்கு அத்வானி, ஜின்னாவினைப் பற்றி சொன்ன வார்த்தைகளை எப்படி புரிந்துக் கொள்ள வேண்டும் என்பதை தங்களின் அறிக்கையின் மூலம் வெளியிட்டு, மக்களை தெள்ளத் தெளிவாக சிந்திக்க வழி செய்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணமான ஜின்னா, முஸ்லீம் லீக்கின் தலைவர், பாகிஸ்தானை பிரித்தவர், பிரிவினைவாதி என்றெல்லாம் இன்றைக்கும் எட்டாம் வகுப்பு வரலாற்றுப் புத்தகத்தில் குறிப்பு வருகிறது. நடந்தது என்ன? யார் பிரிவினைவாதத்தினை உண்மையிலேயே உண்டாக்கினார்கள் என்று கொஞ்சம் வரலாற்றினை பின்நோக்கிப் பார்த்தோமானால், உண்மைகள் வெட்ட வெளிச்சமாகலாம். 1946 வரை முஸ்லீம் லீக் கேட்டது, இந்தியாவில் சிறுபான்மையினராய் இருக்கும் முஸ்லீம்களுக்கு, தனி அரசியல் சலுகைகள் (constitutional rights) தரப்படவேண்டும் என்பதுதான். தனி நாடு என்கிற கோரிக்கை எழவில்லை. ஆனால், இதை முழுக்க முழுக்க சொதப்பியது நேருவும், சர்தார் வல்லபாய் படேலும் தான். அவர்களுக்கு முஸ்லீம்களுக்கு தனிப்பட்ட அரசியல் சமூக சலுகைகள் வழங்குவதில் உடன்பாடில்லை. இழுத்தடித்து, இழுத்தடித்து, 1930களின் பிற்பகுதியில் தேர்தலில் வெற்றிக் கொண்டு வந்த ஒரு மாநிலத்திலும், முஸ்லீம்கோடு முன்பு செய்த யோசனைகளைக் காற்றில் பரக்கவிட்டு ஏமாற்றினார்கள். இந்தியா பிளவுண்டதற்கான மிக முக்கியமான காரணம் காங்கிரஸும், நேருவும் தான். வெறுத்துப் போன ஜின்னா, பின்னாளில் முஸ்லிம் த்தோ முஸ்லீம் லீக் மேய்ன் ஆ! [முஸ்லீமாய் இருந்தால், முஸ்லீம்லீக்கோட்டு சேருங்கள்] என்ற கோஷத்தினை எழுப்பி, தனிநாடுக் கேட்டு, பாகிஸ்தானின் முதல் பிரதமராய் இருந்து காசநோய் வந்து செத்துப் போனார். இன்றைய சென்னை பதிப்பு டெக்கான் கிரோனிகளில் இதுப் பற்றிய முழு செய்தி வந்திருக்கிறது.
இது தாண்டி, An autobiography of an unknown indian [by Nirad C. Chaudhuri] என்கிற புத்தகம், நாம் பள்ளியில் படித்த சுதந்திரப் போராட்டத்தினை தாண்டி, கண் முன் நடந்த உண்மைகளை அப்பட்டமாக விவரிக்கும். நிராத் செளத்ரி காந்தியினை முற்றுமுதலாய் நிராகரித்தவர். காந்தியினை எதிர்த்துப் பேசினாலே தேச துரோகம் மஹா பாபம் என்று நினைக்கும் நாட்டில் காந்தியின் எளிமைக்காகும் செலவினை எள்ளலாய் சொன்னவர். காந்தியையும், நேருவினையும் அவர்கள் வாழ்ந்த காலத்தில் பார்த்து விமர்சித்து எழுதியவர். கொஞ்ச நாளைக்கு முன் பத்ரியின் பதிவில் இடம்பெற்றிருந்த திரு.கல்யாணத்தின் பதிவின் பின்னூட்டத்திலும் இதனைக் குறிப்பிட்டிருந்தேன். இது தாண்டி, காங்கிரஸ் சுதந்திர இந்தியா என்று பேச்செடுத்ததே 1930க்கு பின்தான், அதுவரை அவர்கள் சுயாட்சி உரிமை என்கிற அளவில் தான் இருந்தார்கள். ஜின்னா பிரிவினைவாதி என்றால், ஜின்னாவினை பிரிவினைக்கு தள்ளிய நேருவினை என்ன சொல்வீர்கள் ?
பார்க்க - நிராத் சொளத்ரியின் புத்தகம் | ஹிந்துவில் வந்த சொளத்ரியின் நேருப் பற்றிய குறிப்பு
பெஸ்ட் கண்ணா பெஸ்ட்
சுஜாதா இப்போது ஒவர் டைம் செய்ய ஆரம்பித்திருக்கிறார் என்று நினைக்கிறேன். விகடனில் ஏற்கனவே எழுதும் கற்றதும் பெற்றதும் தாண்டி, இந்த வாரம் குமுதத்திலும் கேள்வி-பதில் பகுதியொன்றை தொடக்கியிருக்கிறார். குமுதம் என்னென்னமோ செய்கிறது. பாவம் NRS கவலைப் போட்டு ஆட்டுகிறது. விகடனில் ரஜினிப் பற்றிய தொடர் வந்தால், குமுதத்தின் ஜவஹர் பழனியப்பன், ரஜினியின் வீட்டுக்குப் போய் பேட்டியெடுக்கிறார். விகடனில் யுக பாரதியா, குமுதமில் நா. முத்துக் குமார். விகடனில் எஸ்.ராவா, குமுதமில் ஜெயமோகன். இதற்கு நடுவில் 600% வளர்ச்சி [?!!] பெற்று இந்தியாவின் நேஷ்னல் ரீடர்ஷிப் சர்வேயில், "பெஸ்ட் கண்ணா பெஸ்ட்" குங்குமம் நான்காவது இடத்திலிருக்கிறது [55.71 இலட்சம் பிரதிகள்], குமுதம் ஐந்தாவது இடத்திலும் [46.64 இலட்சம் பிரதிகள்], ஆனந்த விகடன் பத்தாவது இடத்திலும் [27.41 இலட்சம் பிரதிகள்] இருக்கிறது. அடுத்தமுறை யாராவது இலவசமாக ஷாம்பூ, சாக்லெட்டுகள் கொடுத்து சினிக்கூத்தினையும், ஜெமினி சினிமாவையும் ஏற்றிவிட்டால் புண்ணியமாக போகும்.
பார்க்க - NRS முடிவுகள்
பாதாளச்சிறையில் 20 வருடங்கள்
சமீபத்தில் படித்து நெகிழ்ந்தது தாஹர் பென் ஜெலோன் எழுதி இம்பேக் டப்ளின் என்கிற இலக்கிய விருதினைப் பெற்ற This Blinding Absence of Light என்கிற புத்தகத்தினைப் பற்றி சாரு நிவேதிதா தன் கோணல் பக்கங்களில் எழுதி இருந்த சுருக்கமான தொகுப்புரை. புத்தகம் படிக்கவில்லையாயினும் இந்த தொகுப்புரையினைப் படித்தவுடன் மனம் கனத்துப் போனது. இருபது வருடங்கள், பாலைவனத்தில் தரைக்கடியில் இருக்கும் பாதாளச்சிறையில், துணையேதுமில்லாமல் இருந்த அரசியல் கைதிகளை சுற்றி சுழலும் உண்மை சம்பவம்.ஆழமான, நம் தர்க்கரீதியான வாழ்வின் சாரங்களைச் சற்றே அசத்திப் பார்க்கும் புத்தகம்.
பார்க்க - சாருவின் தொகுப்புரை | அமெசானின் புத்தகம்
அப்துல் பாய்!!
இங்கே முக்கியமான செய்தி எங்களுடைய அலுவலகத்தினை ஒரு புதிய இடத்திற்கு [தி.நகர்] மாற்றி விட்டோம். விஷயம் அதுவல்ல. நாங்கள் குடியேறியிருக்கும் வீட்டுக்கு சொந்தகாரர் சென்னையின் இஸ்லாமிய கோடிஸ்வரர்களில் ஒருவர். அவருக்கு இதுபோல 150-200 அபார்ட்மெண்ட்கள் சென்னையிலுண்டு. இத்தனை வீடுகளையும் நிர்வகிக்க, வாடகை வசூலிக்க, இன்ன பிற காரியங்கள் பார்ப்பதற்காகவே கல்லூரி சாலைக்கு அருகில் ஒரு தனி அலுவலகமே இயங்குகிறது. சில சட்டரீதியான டாக்குமெண்டுகளைப் பெறுவதற்காக அவ்வலுவலகத்திற்கு போக வேண்டியிருந்தது. நான் பேசிய அலுவலரும் ஒரு முஸ்லிம். அவரின் அறையில் "ட்சுனாமி இறைவன் அளித்த தண்டனை. குற்றமிழைத்ததர்கான பலன்" என்கிற ரீதியில் ஒரு செய்தித்தாளில் வந்த கட்டுரையினை நகலெடுத்து ஒட்டி வைத்திருந்தார். இணையம், நோக்கியா கம்யுனிக்கேட்டர், இனோவா கார் எல்லாம் இருந்தும் இன்னமும் நிறைய மக்கள் மாறவேயில்லை. எங்கே போய் முட்டிக் கொள்ள!
ஒரு வழியாக எதிர்பார்த்தது போல அத்வானி மீண்டும் பா.ஜ.க தலைவராக இருக்க சம்மதித்து தன் ராஜினாமாவினை வாபஸ் வாங்கிவிட்டார். சங் பரிவார், விஹெச்பி கும்பல்கள், பா.ஜ.கவின் புதிய "ஜின்னா பற்றிய அறிக்கையினைக் கண்டு சந்தோஷப்பட்டு தங்கள் ஆதரவினை அளிப்பதாகக் கூறி கடந்த 4-5 நாட்களாக, செய்தித்தாள்களுக்கு போட்டிருந்த தீனியில் மண்ணள்ளிப் போட்டார்கள். பா.ஜ.க வும் தன் பங்குக்கு அத்வானி, ஜின்னாவினைப் பற்றி சொன்ன வார்த்தைகளை எப்படி புரிந்துக் கொள்ள வேண்டும் என்பதை தங்களின் அறிக்கையின் மூலம் வெளியிட்டு, மக்களை தெள்ளத் தெளிவாக சிந்திக்க வழி செய்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணமான ஜின்னா, முஸ்லீம் லீக்கின் தலைவர், பாகிஸ்தானை பிரித்தவர், பிரிவினைவாதி என்றெல்லாம் இன்றைக்கும் எட்டாம் வகுப்பு வரலாற்றுப் புத்தகத்தில் குறிப்பு வருகிறது. நடந்தது என்ன? யார் பிரிவினைவாதத்தினை உண்மையிலேயே உண்டாக்கினார்கள் என்று கொஞ்சம் வரலாற்றினை பின்நோக்கிப் பார்த்தோமானால், உண்மைகள் வெட்ட வெளிச்சமாகலாம். 1946 வரை முஸ்லீம் லீக் கேட்டது, இந்தியாவில் சிறுபான்மையினராய் இருக்கும் முஸ்லீம்களுக்கு, தனி அரசியல் சலுகைகள் (constitutional rights) தரப்படவேண்டும் என்பதுதான். தனி நாடு என்கிற கோரிக்கை எழவில்லை. ஆனால், இதை முழுக்க முழுக்க சொதப்பியது நேருவும், சர்தார் வல்லபாய் படேலும் தான். அவர்களுக்கு முஸ்லீம்களுக்கு தனிப்பட்ட அரசியல் சமூக சலுகைகள் வழங்குவதில் உடன்பாடில்லை. இழுத்தடித்து, இழுத்தடித்து, 1930களின் பிற்பகுதியில் தேர்தலில் வெற்றிக் கொண்டு வந்த ஒரு மாநிலத்திலும், முஸ்லீம்கோடு முன்பு செய்த யோசனைகளைக் காற்றில் பரக்கவிட்டு ஏமாற்றினார்கள். இந்தியா பிளவுண்டதற்கான மிக முக்கியமான காரணம் காங்கிரஸும், நேருவும் தான். வெறுத்துப் போன ஜின்னா, பின்னாளில் முஸ்லிம் த்தோ முஸ்லீம் லீக் மேய்ன் ஆ! [முஸ்லீமாய் இருந்தால், முஸ்லீம்லீக்கோட்டு சேருங்கள்] என்ற கோஷத்தினை எழுப்பி, தனிநாடுக் கேட்டு, பாகிஸ்தானின் முதல் பிரதமராய் இருந்து காசநோய் வந்து செத்துப் போனார். இன்றைய சென்னை பதிப்பு டெக்கான் கிரோனிகளில் இதுப் பற்றிய முழு செய்தி வந்திருக்கிறது.
இது தாண்டி, An autobiography of an unknown indian [by Nirad C. Chaudhuri] என்கிற புத்தகம், நாம் பள்ளியில் படித்த சுதந்திரப் போராட்டத்தினை தாண்டி, கண் முன் நடந்த உண்மைகளை அப்பட்டமாக விவரிக்கும். நிராத் செளத்ரி காந்தியினை முற்றுமுதலாய் நிராகரித்தவர். காந்தியினை எதிர்த்துப் பேசினாலே தேச துரோகம் மஹா பாபம் என்று நினைக்கும் நாட்டில் காந்தியின் எளிமைக்காகும் செலவினை எள்ளலாய் சொன்னவர். காந்தியையும், நேருவினையும் அவர்கள் வாழ்ந்த காலத்தில் பார்த்து விமர்சித்து எழுதியவர். கொஞ்ச நாளைக்கு முன் பத்ரியின் பதிவில் இடம்பெற்றிருந்த திரு.கல்யாணத்தின் பதிவின் பின்னூட்டத்திலும் இதனைக் குறிப்பிட்டிருந்தேன். இது தாண்டி, காங்கிரஸ் சுதந்திர இந்தியா என்று பேச்செடுத்ததே 1930க்கு பின்தான், அதுவரை அவர்கள் சுயாட்சி உரிமை என்கிற அளவில் தான் இருந்தார்கள். ஜின்னா பிரிவினைவாதி என்றால், ஜின்னாவினை பிரிவினைக்கு தள்ளிய நேருவினை என்ன சொல்வீர்கள் ?
பார்க்க - நிராத் சொளத்ரியின் புத்தகம் | ஹிந்துவில் வந்த சொளத்ரியின் நேருப் பற்றிய குறிப்பு
பெஸ்ட் கண்ணா பெஸ்ட்
சுஜாதா இப்போது ஒவர் டைம் செய்ய ஆரம்பித்திருக்கிறார் என்று நினைக்கிறேன். விகடனில் ஏற்கனவே எழுதும் கற்றதும் பெற்றதும் தாண்டி, இந்த வாரம் குமுதத்திலும் கேள்வி-பதில் பகுதியொன்றை தொடக்கியிருக்கிறார். குமுதம் என்னென்னமோ செய்கிறது. பாவம் NRS கவலைப் போட்டு ஆட்டுகிறது. விகடனில் ரஜினிப் பற்றிய தொடர் வந்தால், குமுதத்தின் ஜவஹர் பழனியப்பன், ரஜினியின் வீட்டுக்குப் போய் பேட்டியெடுக்கிறார். விகடனில் யுக பாரதியா, குமுதமில் நா. முத்துக் குமார். விகடனில் எஸ்.ராவா, குமுதமில் ஜெயமோகன். இதற்கு நடுவில் 600% வளர்ச்சி [?!!] பெற்று இந்தியாவின் நேஷ்னல் ரீடர்ஷிப் சர்வேயில், "பெஸ்ட் கண்ணா பெஸ்ட்" குங்குமம் நான்காவது இடத்திலிருக்கிறது [55.71 இலட்சம் பிரதிகள்], குமுதம் ஐந்தாவது இடத்திலும் [46.64 இலட்சம் பிரதிகள்], ஆனந்த விகடன் பத்தாவது இடத்திலும் [27.41 இலட்சம் பிரதிகள்] இருக்கிறது. அடுத்தமுறை யாராவது இலவசமாக ஷாம்பூ, சாக்லெட்டுகள் கொடுத்து சினிக்கூத்தினையும், ஜெமினி சினிமாவையும் ஏற்றிவிட்டால் புண்ணியமாக போகும்.
பார்க்க - NRS முடிவுகள்
பாதாளச்சிறையில் 20 வருடங்கள்
சமீபத்தில் படித்து நெகிழ்ந்தது தாஹர் பென் ஜெலோன் எழுதி இம்பேக் டப்ளின் என்கிற இலக்கிய விருதினைப் பெற்ற This Blinding Absence of Light என்கிற புத்தகத்தினைப் பற்றி சாரு நிவேதிதா தன் கோணல் பக்கங்களில் எழுதி இருந்த சுருக்கமான தொகுப்புரை. புத்தகம் படிக்கவில்லையாயினும் இந்த தொகுப்புரையினைப் படித்தவுடன் மனம் கனத்துப் போனது. இருபது வருடங்கள், பாலைவனத்தில் தரைக்கடியில் இருக்கும் பாதாளச்சிறையில், துணையேதுமில்லாமல் இருந்த அரசியல் கைதிகளை சுற்றி சுழலும் உண்மை சம்பவம்.ஆழமான, நம் தர்க்கரீதியான வாழ்வின் சாரங்களைச் சற்றே அசத்திப் பார்க்கும் புத்தகம்.
பார்க்க - சாருவின் தொகுப்புரை | அமெசானின் புத்தகம்
அப்துல் பாய்!!
இங்கே முக்கியமான செய்தி எங்களுடைய அலுவலகத்தினை ஒரு புதிய இடத்திற்கு [தி.நகர்] மாற்றி விட்டோம். விஷயம் அதுவல்ல. நாங்கள் குடியேறியிருக்கும் வீட்டுக்கு சொந்தகாரர் சென்னையின் இஸ்லாமிய கோடிஸ்வரர்களில் ஒருவர். அவருக்கு இதுபோல 150-200 அபார்ட்மெண்ட்கள் சென்னையிலுண்டு. இத்தனை வீடுகளையும் நிர்வகிக்க, வாடகை வசூலிக்க, இன்ன பிற காரியங்கள் பார்ப்பதற்காகவே கல்லூரி சாலைக்கு அருகில் ஒரு தனி அலுவலகமே இயங்குகிறது. சில சட்டரீதியான டாக்குமெண்டுகளைப் பெறுவதற்காக அவ்வலுவலகத்திற்கு போக வேண்டியிருந்தது. நான் பேசிய அலுவலரும் ஒரு முஸ்லிம். அவரின் அறையில் "ட்சுனாமி இறைவன் அளித்த தண்டனை. குற்றமிழைத்ததர்கான பலன்" என்கிற ரீதியில் ஒரு செய்தித்தாளில் வந்த கட்டுரையினை நகலெடுத்து ஒட்டி வைத்திருந்தார். இணையம், நோக்கியா கம்யுனிக்கேட்டர், இனோவா கார் எல்லாம் இருந்தும் இன்னமும் நிறைய மக்கள் மாறவேயில்லை. எங்கே போய் முட்டிக் கொள்ள!
Comments:
<< Home
Narain,
//1946 வரை முஸ்லீம் லீக் கேட்டது, இந்தியாவில் சிறுபான்மையினராய் இருக்கும் முஸ்லீம்களுக்கு, தனி அரசியல் சலுகைகள் (constitutional rights) தரப்படவேண்டும் என்பதுதான். தனி நாடு என்கிற கோரிக்கை எழவில்லை.
//
There is more than what you are trying to say. Muslims are averse to following uniform civil code too.
Partition has, in fact, helped us to become a stronger and better developed nation, I think !
Post a Comment
//1946 வரை முஸ்லீம் லீக் கேட்டது, இந்தியாவில் சிறுபான்மையினராய் இருக்கும் முஸ்லீம்களுக்கு, தனி அரசியல் சலுகைகள் (constitutional rights) தரப்படவேண்டும் என்பதுதான். தனி நாடு என்கிற கோரிக்கை எழவில்லை.
//
There is more than what you are trying to say. Muslims are averse to following uniform civil code too.
Partition has, in fact, helped us to become a stronger and better developed nation, I think !
Subscribe to Post Comments [Atom]
<< Home
Subscribe to Posts [Atom]