Jul 15, 2005
முடிவிலிருந்து ஆரம்பத்திற்கு
Back to square one again.....
இன்றைய பிபிசி தளத்தில் இலங்கையின் உச்ச நீதிமன்றம் இலங்கை அரசுக்கும், புலிகளுக்கும் இடையேயான ட்சுனாமி மீட்பு ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறைவேற்ற தடை செய்துள்ளது. சந்திரிகா அரசு, ஜே.வி.பியின் வற்புறுத்தலை தாண்டி, புலிகளோடு ஒப்பந்தம் போடுவோம் என்று சொன்னபோதே ஏதோ நடக்கப் போகிறது என்று உள்மனசு சொன்னது. இவ்விடைக்கால தடையின் மூலம், அமைதிப் பேச்சுவார்த்தைக்கும், செயல்பாட்டிற்கும் மிகப் பெரிய முட்டுக்கட்டை விழுந்துள்ளது.
இனி புலிகளும், அரசும் ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லிக் கொள்வார்கள். ஏற்கனவே, இலங்கை அரசு புலிகள் ஆயுதங்களோடு உலா வருவதாகவும், புலிகள் அரசு ஆயுதமில்லாத போராளிகளை கொல்வதாகவும் இருபுறமும் குற்றம் சாட்ட ஆரம்பித்து விட்டார்கள். இனி அமைதி பேச்சுவார்த்தை நின்று போய், புலிகள் ஆயுதமேந்தினால், அரசு உடனே உச்சநீதி மன்ற தீர்ப்பினை கைக் காட்டும். புலிகள் அதை அவமதிப்பார்கள். மீண்டும் ஒரு போர்ச்சூழல் உருவாகும். இனி வழக்கம்போல புலி ஆதரவு, எதிர்ப்பு, அரசு எதிர்ப்பு வலைத்தளங்கள் செய்திகளை குவிக்கும்.
கவலையாகவும், வேதனையாகவும் இருந்தாலும், நிலைமை இப்போது back to square one.
இன்றைய பிபிசி தளத்தில் இலங்கையின் உச்ச நீதிமன்றம் இலங்கை அரசுக்கும், புலிகளுக்கும் இடையேயான ட்சுனாமி மீட்பு ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறைவேற்ற தடை செய்துள்ளது. சந்திரிகா அரசு, ஜே.வி.பியின் வற்புறுத்தலை தாண்டி, புலிகளோடு ஒப்பந்தம் போடுவோம் என்று சொன்னபோதே ஏதோ நடக்கப் போகிறது என்று உள்மனசு சொன்னது. இவ்விடைக்கால தடையின் மூலம், அமைதிப் பேச்சுவார்த்தைக்கும், செயல்பாட்டிற்கும் மிகப் பெரிய முட்டுக்கட்டை விழுந்துள்ளது.
இனி புலிகளும், அரசும் ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லிக் கொள்வார்கள். ஏற்கனவே, இலங்கை அரசு புலிகள் ஆயுதங்களோடு உலா வருவதாகவும், புலிகள் அரசு ஆயுதமில்லாத போராளிகளை கொல்வதாகவும் இருபுறமும் குற்றம் சாட்ட ஆரம்பித்து விட்டார்கள். இனி அமைதி பேச்சுவார்த்தை நின்று போய், புலிகள் ஆயுதமேந்தினால், அரசு உடனே உச்சநீதி மன்ற தீர்ப்பினை கைக் காட்டும். புலிகள் அதை அவமதிப்பார்கள். மீண்டும் ஒரு போர்ச்சூழல் உருவாகும். இனி வழக்கம்போல புலி ஆதரவு, எதிர்ப்பு, அரசு எதிர்ப்பு வலைத்தளங்கள் செய்திகளை குவிக்கும்.
கவலையாகவும், வேதனையாகவும் இருந்தாலும், நிலைமை இப்போது back to square one.
Subscribe to Posts [Atom]