Oct 14, 2005
கீரி-பாம்பு சண்டை
பிதாமகனில் சூர்யாவின் பாத்திர அமைப்பு ஒரு அட்டகாசம். டூபாக்கூர் பேர்வழி. இதுப் போல இந்தியாவில் நிறைய காண்பிக்கலாம். முன்பெல்லாம், வட சென்னை மின்ட் தெருவில் கிரெளன் திரையரங்கு அருகில் லேகியம் விற்பார்கள். உலகின் சர்வ லோக நிவாரணியாக அதை விற்பவன் நான்கு முறை இருமிக் கொண்டே கூவி, கூவி விற்பான். கீரி பாம்பு சண்டை காட்டுகிறேன் பேர்வழி என்று ஒரு இத்துப் போன கூடையையும், ஐசியுவிலிருந்து கொண்டு வரப்பட்ட கீரியையும் கொண்டு கூட்டம் சேர்ப்பார்கள், கடைசி வரை பாம்பு கூடையை விட்டு வெளிவராது. கீரி சும்மா இரண்டு தடவை சவுண்ட் விட்டு போய்விடும். இந்த மாதிரி மோடி மஸ்தான் ஆசாமிகள் தொழில்நுட்பம் ஆரம்பித்த பிறகு குறைந்தால் போல் தெரிந்தது. ஆனாலும் ஐஐபிஎம் அந்த குறையினை தீர்த்து வைத்து விட்டது.
ஒரு வாரமாக இந்திய வலைப்பதிவுகள் பற்றி எரிகின்றன. ஐஐபிஎம் என்கிற மேலாண்மை நிறுவனத்தினை நடத்துகிற அரிந்தம் செளத்திரி மீது தான் இவ்வளவு பாய்ச்சலும். ஐஐபிஎம் ஒரு டுபாக்கூர் பல்கலைக்கழகம். எனக்கு வாரத்துக்கு மூன்று பல்கலைக்கழகங்கள் ஹாட்மெயிலில் டாக்டர் பட்டம் தர காத்திருக்கின்றன. அந்த மாதிரி வகையறாதான் ஐஐபிஎம். எல்லா தேசிய நாளிதழ்களிலும் அரைப்பக்க, முழுப்பக்க விளம்பரம் தந்து நீங்கள் சேர்ந்தால், உடனே பில் கேட்ஸ் தன் நாற்காலியினை விட்டு இறங்கி உங்களைத் தான் தலைமை தாங்க சொல்லுவார் என்கிற பில்டப் வேறு. அரிந்தம் செளத்திரி தன்னை மேலாண்மையினைக் காக்க வந்த அவதார புருஷனாய் நினைத்தன் விளைவு தான் இது. மொத்தத்தில் இது ஒரு ஒயிட் காலர் டூபாக்கூர் நிறுவனம்.
கொஞ்ச நேரம் பார்த்த பதிவுகளையெல்லாம் படித்த பின்னர், இது அச்சு அசல் அக்மார்க் டூபாக்கூர். சரி என் பங்குக்கு சும்மா இருப்பானே என்று எனக்கு தெரிந்த தென்னிந்தியாவை முக்கியமாய் சென்னை மற்றும் தமிழகத்தினை பற்றி தெஹல்காவில்தொடர்ந்து எழுதும் வினோஜ் குமாருக்கு தொலைபேசி, இதற்கான சுட்டிகளை அனுப்பி வைத்திருக்கிறேன். பார்ப்போம் என்ன நடக்கிறது என்று
இங்கே தொடங்கியது. இவர் எழுதப் போக, இங்கெல்லாம் பற்றி, எரியத் தொடங்கி, தமிழ் வலைப்பதிவுகளில் பிரகாஷ் ஆரம்பித்து வைத்து, சந்தோஷ் தொடர நானும் எழுதியிருக்கிறேன். இவற்றில் பிடித்தது நண்பர் கிருபா ஷங்கர் போட்ட ஒரு பனியன் வாசகம், உங்களுக்காக கீழே:

ஒரு வாரமாக இந்திய வலைப்பதிவுகள் பற்றி எரிகின்றன. ஐஐபிஎம் என்கிற மேலாண்மை நிறுவனத்தினை நடத்துகிற அரிந்தம் செளத்திரி மீது தான் இவ்வளவு பாய்ச்சலும். ஐஐபிஎம் ஒரு டுபாக்கூர் பல்கலைக்கழகம். எனக்கு வாரத்துக்கு மூன்று பல்கலைக்கழகங்கள் ஹாட்மெயிலில் டாக்டர் பட்டம் தர காத்திருக்கின்றன. அந்த மாதிரி வகையறாதான் ஐஐபிஎம். எல்லா தேசிய நாளிதழ்களிலும் அரைப்பக்க, முழுப்பக்க விளம்பரம் தந்து நீங்கள் சேர்ந்தால், உடனே பில் கேட்ஸ் தன் நாற்காலியினை விட்டு இறங்கி உங்களைத் தான் தலைமை தாங்க சொல்லுவார் என்கிற பில்டப் வேறு. அரிந்தம் செளத்திரி தன்னை மேலாண்மையினைக் காக்க வந்த அவதார புருஷனாய் நினைத்தன் விளைவு தான் இது. மொத்தத்தில் இது ஒரு ஒயிட் காலர் டூபாக்கூர் நிறுவனம்.
கொஞ்ச நேரம் பார்த்த பதிவுகளையெல்லாம் படித்த பின்னர், இது அச்சு அசல் அக்மார்க் டூபாக்கூர். சரி என் பங்குக்கு சும்மா இருப்பானே என்று எனக்கு தெரிந்த தென்னிந்தியாவை முக்கியமாய் சென்னை மற்றும் தமிழகத்தினை பற்றி தெஹல்காவில்தொடர்ந்து எழுதும் வினோஜ் குமாருக்கு தொலைபேசி, இதற்கான சுட்டிகளை அனுப்பி வைத்திருக்கிறேன். பார்ப்போம் என்ன நடக்கிறது என்று
இங்கே தொடங்கியது. இவர் எழுதப் போக, இங்கெல்லாம் பற்றி, எரியத் தொடங்கி, தமிழ் வலைப்பதிவுகளில் பிரகாஷ் ஆரம்பித்து வைத்து, சந்தோஷ் தொடர நானும் எழுதியிருக்கிறேன். இவற்றில் பிடித்தது நண்பர் கிருபா ஷங்கர் போட்ட ஒரு பனியன் வாசகம், உங்களுக்காக கீழே:

Subscribe to Posts [Atom]