Dec 1, 2005
நானிலு
தெலுங்கு கவிதைத் தளத்தின் அதி நவீன கவிதை வடிவம் "நானிலு". நான்கைந்தாண்டுகளுக்கு முன் "தெலுங்கு பல்கலைக்கழகத்தின்" முன்னாள் துணை வேந்தரும் மத்திய சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான முனைவர். என். கோபி அவர்களால முதன் முதலாய் வடிவமைக்கப்பட்ட "நானிலு" வெகு எளிதாய் புரிந்து கொள்ளப்படும் தன்மையிலேயே தெலுங்கு இலக்கிய உலகின் இன்னொரு பரிமாணமாய் தன்னை நிலைப்படுத்திக் கொண்டிருக்கிறது.
இந்த நாலடிக் கவிதைகள் இலக்கிய இலக்கண வரையறைகளூக்கப்பாற்பட்டவை. ஹைகூக் கவிதைகள் போல இறக்குமதி செய்யப்பட்டதல்ல என்பது (?!!) இக்கவிதைகளின் தனித்தன்மையென பேசப்படுகிறது. ஆனாலும், ஹைகூ போல் நானிலு வகைக்கும் வரிசையாய் பல கவிஞர்கள்........... பல்லாயிரம் கவிஞர்கள்...... பல நூல்கள் என வரவுகள். நானிலு கவிதைகளின் சில அடையாளங்கள்... நான்கு வரிகள். சுமார் பத்து முதல் இருபது வார்த்தைகள். முதல் இரு வரிகளில் ஒரு செய்தி....தகவல் அல்லது குறீயிடாக அமைத்து அடுத்த இருவரிகள் அதைச் சார்ந்தோ எதிர்த்தோ தொடர்புபடுத்தியோ அமைவது இதன் பிரதான அடையாளம். மரபு, புது, ஹைகூ என எல்லாவகைக் கவிதை வடிவங்களுமே மேற்சொன்ன அடையாளம் கொண்டதாகவே அமைகிறதென்றாலும் "நானிலு" கவிதைகளில் பொருள் சார்பு சற்று அழுத்தமாய் விழுகிறது. அணுகுமுறை அதாவது வெளிப்பாடு அதி எளிமையாயினும் பொருட்செறிவு வீரியமானது.
தெலுங்கு கவிதைக்களத்தில் ஒரு நவீன கவிதை முயற்சியை துணிவுடன் மேற்கொண்டு ஒரு "ட்ரெண்ட் செட்டர்" ஆன திரு. கோபி அவர்களின் முதல் சீடர் திரு. எஸ்.ஆர்.பல்லம். கவிஞர் பல்லத்தின் தொகுப்பிலிருந்து தன் குருவுக்கு காணிக்கையாய் படைத்த நானிலுக்களில் சில
விளக்குடன்
ஒப்பிடத்தேவையில்லை
மண்ணெண்ணெய்க்கு
தாரைவார்க்காமாலிருந்தால் போதும்
சொல்வது
புரியாததற்கு
மொழி மட்டுமல்ல
மனமும் காரணம்தான்
யாத்திரை என்றால்
பயணமல்ல
உன்னுள்ளேயே
நீ செல்லும் பிரவாகம்
அரிசிமணி மீது
சித்திரம் அழகுதான்
அது சோற்றுப்பருக்கையாகும்போது
இன்னும் அழகு
நன்றி: திசைஎட்டும் அக்-டிசம்பர் 2005 இதழ்
தெலுங்கு தெரிந்த நம் கவிஞர் / வலைப்பதிவாளர் மதுமிதா இந்த கவிதைப்போக்கினைப் பற்றி மேலதிக தகவல்கள் தந்தால் நன்றாக இருக்கும்
இந்த நாலடிக் கவிதைகள் இலக்கிய இலக்கண வரையறைகளூக்கப்பாற்பட்டவை. ஹைகூக் கவிதைகள் போல இறக்குமதி செய்யப்பட்டதல்ல என்பது (?!!) இக்கவிதைகளின் தனித்தன்மையென பேசப்படுகிறது. ஆனாலும், ஹைகூ போல் நானிலு வகைக்கும் வரிசையாய் பல கவிஞர்கள்........... பல்லாயிரம் கவிஞர்கள்...... பல நூல்கள் என வரவுகள். நானிலு கவிதைகளின் சில அடையாளங்கள்... நான்கு வரிகள். சுமார் பத்து முதல் இருபது வார்த்தைகள். முதல் இரு வரிகளில் ஒரு செய்தி....தகவல் அல்லது குறீயிடாக அமைத்து அடுத்த இருவரிகள் அதைச் சார்ந்தோ எதிர்த்தோ தொடர்புபடுத்தியோ அமைவது இதன் பிரதான அடையாளம். மரபு, புது, ஹைகூ என எல்லாவகைக் கவிதை வடிவங்களுமே மேற்சொன்ன அடையாளம் கொண்டதாகவே அமைகிறதென்றாலும் "நானிலு" கவிதைகளில் பொருள் சார்பு சற்று அழுத்தமாய் விழுகிறது. அணுகுமுறை அதாவது வெளிப்பாடு அதி எளிமையாயினும் பொருட்செறிவு வீரியமானது.
தெலுங்கு கவிதைக்களத்தில் ஒரு நவீன கவிதை முயற்சியை துணிவுடன் மேற்கொண்டு ஒரு "ட்ரெண்ட் செட்டர்" ஆன திரு. கோபி அவர்களின் முதல் சீடர் திரு. எஸ்.ஆர்.பல்லம். கவிஞர் பல்லத்தின் தொகுப்பிலிருந்து தன் குருவுக்கு காணிக்கையாய் படைத்த நானிலுக்களில் சில
விளக்குடன்
ஒப்பிடத்தேவையில்லை
மண்ணெண்ணெய்க்கு
தாரைவார்க்காமாலிருந்தால் போதும்
சொல்வது
புரியாததற்கு
மொழி மட்டுமல்ல
மனமும் காரணம்தான்
யாத்திரை என்றால்
பயணமல்ல
உன்னுள்ளேயே
நீ செல்லும் பிரவாகம்
அரிசிமணி மீது
சித்திரம் அழகுதான்
அது சோற்றுப்பருக்கையாகும்போது
இன்னும் அழகு
நன்றி: திசைஎட்டும் அக்-டிசம்பர் 2005 இதழ்
தெலுங்கு தெரிந்த நம் கவிஞர் / வலைப்பதிவாளர் மதுமிதா இந்த கவிதைப்போக்கினைப் பற்றி மேலதிக தகவல்கள் தந்தால் நன்றாக இருக்கும்
Subscribe to Posts [Atom]