Dec 27, 2005
கல்லறை கிராமம்
குஜராத்தின் பஞ்சமஹால் மாவட்டத்திலுள்ள லூனாவாடா கிராமத்தில் ஒரு பெரும் கல்லறை தரைக்கடியில் கண்டறியப்பட்டுள்ளது. எட்டு எலும்புக்கூடுகள் இதுவரை தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. இவையனைத்தும் கோத்ரா ரயிலெறிப்புக்கு பின் நடந்த கலவரத்தில் கொல்லப்பட்டவர்கள் என்று அஞ்சப்படுகிறது. ஆனால், பாதிக்கப்பட்டவர்கள் 21 பேருக்கு மேலும் இருப்பார்கள் என்று கூறுகிறார்கள். குஜராத் போலிஸார் ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.
சிபிஐ இதை பில்கிஸ் பனோவின் வன்புணர்வு வழக்கின் பின்புலத்தில் பார்க்கிறது. 2002-இல் குஜராத் கலவரத்தில் பில்கிஸ் என்கிற ஆறுமாத கர்ப்பிணி வன்புணரப்பட்டார். அவரின் குடும்பத்தில் 17 பேர் வண்புணரப்பட்டதற்கும், கொல்லப்பட்டதற்கும் இருந்த ஒரே சாட்சி. பிஜேபி அரசு இதை ஒரு பழிவாங்கும் நடவடிக்கையாக மட்டுமே பார்க்கிறது.
அங்கிருக்கும் தன்னார்வலர்கள் நீதிமன்றத்துக்கு இவ்விஷயத்தினை எடுத்துப் போவார்கள் என்று தெரிகிறது. தமிழில் ஒரு தினசரியும் இதைப் பற்றி எழுதவில்லை என்பது ஆச்சர்யமாக இருக்கிறது.
பார்க்க - Mass grave discoverd at Gujarat riot site
சிபிஐ இதை பில்கிஸ் பனோவின் வன்புணர்வு வழக்கின் பின்புலத்தில் பார்க்கிறது. 2002-இல் குஜராத் கலவரத்தில் பில்கிஸ் என்கிற ஆறுமாத கர்ப்பிணி வன்புணரப்பட்டார். அவரின் குடும்பத்தில் 17 பேர் வண்புணரப்பட்டதற்கும், கொல்லப்பட்டதற்கும் இருந்த ஒரே சாட்சி. பிஜேபி அரசு இதை ஒரு பழிவாங்கும் நடவடிக்கையாக மட்டுமே பார்க்கிறது.
அங்கிருக்கும் தன்னார்வலர்கள் நீதிமன்றத்துக்கு இவ்விஷயத்தினை எடுத்துப் போவார்கள் என்று தெரிகிறது. தமிழில் ஒரு தினசரியும் இதைப் பற்றி எழுதவில்லை என்பது ஆச்சர்யமாக இருக்கிறது.
பார்க்க - Mass grave discoverd at Gujarat riot site
Subscribe to Posts [Atom]