Dec 3, 2005
சென்னை வெள்ளம் - updates 2
இப்போது வெளியே மழை பெய்துக் கொண்டிருக்கிறது. என் அடுக்ககத்தின் புகைப்படம் தான் இன்றைக்கு தமிழ்முரசிற்கு தீனி [பார்க்க] பிரகாஷ் போன் செய்து சொன்ன போது "நவரசா" பார்த்துக் கொண்டிருந்தேன். பயமுறுத்தியதால் பாதியிலேயே எழுந்து வந்து, பின் சில நண்பர்களுக்கு தொலைபேசினேன். சாருவோடு பேசியபோது கட்டில் வரை தண்ணீர் இருப்பதாக சொன்னார். இன்னமும் என் தெருவில் முழங்கால் அளவிற்கு தெரு முழுக்க தண்ணீர் இருக்கிறது. எதிரேயிருந்த பெரும்குளத்தின் உடைப்பு இன்னமும் சரி செய்யப்படவில்லை. வளசரவாக்கத்திலும் இதே நிலை.
தமிழ்முரசில் சொல்லியதுப் போல என்னுடைய அடுக்ககத்தின் வீட்டிற்குள் தண்ணீர் வரவில்லை. அது ஒட்டு மொத்த புரூடா. ஆனால், என்னுடைய தெருவிற்கு நேர் எதிர் தெருவான ஏ.வி.எம் அவென்யுவில் வீட்டின் சமையறை வரை தண்ணீர் வந்திருக்கிறது. மக்கள் கட்டிலின் மீது அமர்ந்தபடி காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
சின்மயாநகரும் நூறடி சாலையும் தான் worst affected zone. பல இடங்களில் water world கதைதான். என்னுடைய புளூ டூத் சொதப்பியதால் எடுத்த படங்களை இணைத்துப் போட முடியவில்லை. இப்போது மிதமாக மழை பெய்ய ஆரம்பித்துவிட்டது. இன்னமும் எவ்வளவு நேரம் மழை பெய்யும் என்று சொல்ல முடியாது. ஆனால் இன்னும் இரண்டு நாட்கள் அடித்தால், சென்னை வெனிஸ் ஆகிவிடும். ஏற்கனவே ஏரிகள் நிரம்பி வழிந்து அல்லது திறந்து விடுவதால் ஏரியினை சுற்றியுள்ள பகுதிகள், தாழ்வான பகுதிகள் என்று அனைத்தும் நீரில் முழ்கியுள்ளன. வழக்கம் போல சன் தொலைக் காட்சியும், ஜெயா தொலைக் காட்சியும் உளவியல் வன்முறையையும், அவதூறினையும் பரப்பத் தொடங்கிவிட்டார்கள்.
மின்சாரம் தொடர்ந்து இருந்தால் தொடர்ச்சியாக update செய்கிறேன்.
பிரகாஷின் பதிவு
தமிழ்முரசில் சொல்லியதுப் போல என்னுடைய அடுக்ககத்தின் வீட்டிற்குள் தண்ணீர் வரவில்லை. அது ஒட்டு மொத்த புரூடா. ஆனால், என்னுடைய தெருவிற்கு நேர் எதிர் தெருவான ஏ.வி.எம் அவென்யுவில் வீட்டின் சமையறை வரை தண்ணீர் வந்திருக்கிறது. மக்கள் கட்டிலின் மீது அமர்ந்தபடி காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
சின்மயாநகரும் நூறடி சாலையும் தான் worst affected zone. பல இடங்களில் water world கதைதான். என்னுடைய புளூ டூத் சொதப்பியதால் எடுத்த படங்களை இணைத்துப் போட முடியவில்லை. இப்போது மிதமாக மழை பெய்ய ஆரம்பித்துவிட்டது. இன்னமும் எவ்வளவு நேரம் மழை பெய்யும் என்று சொல்ல முடியாது. ஆனால் இன்னும் இரண்டு நாட்கள் அடித்தால், சென்னை வெனிஸ் ஆகிவிடும். ஏற்கனவே ஏரிகள் நிரம்பி வழிந்து அல்லது திறந்து விடுவதால் ஏரியினை சுற்றியுள்ள பகுதிகள், தாழ்வான பகுதிகள் என்று அனைத்தும் நீரில் முழ்கியுள்ளன. வழக்கம் போல சன் தொலைக் காட்சியும், ஜெயா தொலைக் காட்சியும் உளவியல் வன்முறையையும், அவதூறினையும் பரப்பத் தொடங்கிவிட்டார்கள்.
மின்சாரம் தொடர்ந்து இருந்தால் தொடர்ச்சியாக update செய்கிறேன்.
பிரகாஷின் பதிவு
Subscribe to Posts [Atom]