Nov 30, 2007
இண்டர்வல்
Nov 27, 2007
[பொது] பிடித்தொன்போது
- என்னைச் சுற்றி வந்திருக்கும் காதலுக்கு, சொல்லியனுப்பு [வரிகள் மாறி இருக்கலாம்] என துவங்குகிறது அந்தப் பாட்டு. காதலிக்க நேரமில்லை என்று விஜய் தொலைக்காட்சியில் வரப்போகும் ஒரு தொடரின் ஆரம்பப் பாட்டு. மஹதி்யின் குரலாகதான் இருக்க வேண்டும். யாரந்த நாயகி [வேண்டாம் சொல்லாதீர்கள், நான் ரசித்த பெரும்பாலான சின்னத்திரை நாயகிகளின் வாழ்வு தற்கொலையில் அல்பாயுசில் முடிந்திருக்கிறது - உ.ம். ஷாலினி, வைஷ்ணவி] திரைப்பாடல்களை விட அருமையாக இருக்கிறது. அதே வரிசையில், நண்பர் யுகபாரதி எழுதிய மதுரை தொடரின் பாடலும்[சீறும் சிலம்பெடுத்து....] கலவரமாக, அருமையாக இருக்கிறது
- பொல்லாதவனில் வரும் கருணாஸின் "மச்சி நீ கேளேன், நீ கேளேன், டேய் நீ கேளேன்" ரொம்ப நாட்களுக்கு பிறகு ரசித்து பார்த்த பக்கா அக்மார்க் லோக்கல் காட்சி. கொண்டித்தோப்பில் செல்வம் டீக்கடை என்ற ஒரு டீக்கடை ஒன்று இருந்தது. நானும் நண்பர்களும் பெரும்பாலும், இரவு அங்குதான் டீ குடிப்போம். மச்சி, வர்ற அவசரத்துல காசு கொண்டார்ல, நீ குடேன் அப்புறம் தரேன் என பேசி பேசி, ஒருத்தர் மாற்றி ஒருத்தர் டீ குடித்திருக்கிறோம். அந்த காலங்கள் நினைவுக்கு வந்தது
- மூன்று வருடங்களுக்கு முன்பு நானும், சாரு நிவேதிதாவும் எங்கேயாவது சாப்பிட [குடிக்க அல்ல] போகலாம் என நினைத்து கே.கே.நகர் அஞ்சுகத்தில் சாப்பிட்டு வீடு திரும்பும்போது அந்த சின்னத்திரை நடிகரை எதிரில் பார்த்தேன். ATM அளவுக்கு ESP சக்திகள் இல்லாமல் போனாலும், சில உள்ளுணர்வுகள் பலிக்கும், அந்த வகையில் அந்த நடிகர் செம ரவுண்டு வருவார் என்று அன்றே உள்ளுக்குள் சொல்லிக் கொண்டேன். அந்த நடிகர் - டேனியல் பாலாஜி பொல்லாதவனில் பின்னி பெடலடெடுத்திருக்கிறார் [அந்த குத்துப்பாட்டு கொஞ்சம் ஒவர் மச்சி]
- வெட்டியாய் சனியன்று சானல் மாற்றிய போது கிரண் டிவியில் பிரபு தேவாவின் அலாவுதீன். அது ஒரு மொக்கையான படம் என்பதில் இருவேறு கருத்துகள் கிடையாது. ஆனால், நான் தீவிர பிரபு தேவா ரசிகன், நடனம் மட்டுமல்ல, நடிப்பிலும், நம்மாளு சில சமயங்களில் வெளுத்து வாங்கியிருப்பார். நடிகர் பிரபுதேவாவின் அந்திம காலத்தில் நடித்த படம், ட்ரைய்லரிலேயே பல நாள் ஒடிய படம். ஆனாலும், ஆஷிமா / பிரபு தேவா / மணிவண்ணணுக்காக உட்கார்ந்து பார்தேன். இன்னமும் பிரபு தேவா நடித்த படங்களின் இடம் காலியாக இருக்கிறது.
- அடுத்த வாரிசு என்றொரு ரஜினி படம். அப்படத்தில் சம்பந்தா சம்பந்தமில்லாமல், ஆனால் கேட்டால் ரிபீட்டு என்பது மட்டுமே சொல்லக்கூடிய ஒரு பாடல், "பேசக் கூடாது, வெறும் பேச்சில் அல்ல", ரஜினியும், சுமிதாவும் ஆடும் பாடல். பார்த்த அன்றிலிருந்து ஹம்மிங்கில் அதுதான் ஒடுகிறது. யாரிடத்திலாவது எம்பி3 இருப்பின் மின்னஞ்சலில் அனுப்புங்கள், என்னுடைய ஒரு நாள் பாவ/புண்ணியங்கள் உங்கள் அக்கவுண்டில் கிரெடிட் ஆகும்
- End of Faith - Sam Harris, Super Crunchers: How everything in the world can be predicted - Ian Ayers, Blue Ocean Strategy - Chan Kim & Renee Mauborgne, Making Globalization work - Joshph Stiglitz போன்றவை தான் நான் இப்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகங்கள். ஒவ்வொன்றும் வெவ்வேறு தளத்தில் இருந்து படித்துக் கொண்டிருப்பவை. Freakonomicsஇன் தொடர்ச்சியாக Under cover Economist - Tim Harford பதிவினை படித்து வருகிறேன். மிகவும் சுவாரசியமான பதிவு. தமிழில் சமீபத்தில் உண்மையில் எந்த புத்தகமும் படிக்கவில்லை. தொடர்ச்சியாக படித்து வருவதெனின், இரா.முருகன், திணமணி கதிரில் எழுதி வரும் non fiction தொடர். தொடர்ச்சியாக படிப்பதன் மூலம் என்னுடைய பல நம்பிக்கைகளையும்/அவ நம்பிக்கைகளையும் கேள்விக்குள்ளாக்கிக் கொண்டிருக்கிறேன்
- கலைஞர் தொலைக்காட்சியில் பொறுமையாக உட்கார்ந்து அஜீத் பேட்டி பார்த்தேன். மனிதருக்கு நல்ல தெளிவும், பொறுமையும், கவனித்து பேசுதலும், சமூகம் பற்றிய கேள்விகளும், பிம்பமாய் இருப்பதின் வேதனைகளும் என ஒட்டு மொத்தமாக நிதானமாக இருப்பது கைவந்திருக்கிறது. ஒரு வெகுஜன நாயகனுள் இருப்பது வியக்க வைக்கிறது. மற்ற படி, பில்லா ட்ரைய்லர் உண்மையிலேயே மிரட்டலாய் இருக்கிறது. காக்க காக்க, கஜினிக்கு பிறகு தமிழில் இவ்வளவு ஸ்டெயிலிஷாக ஒரு படம் பண்ண முடியுமா என்று கேட்க வைத்திருக்கிறார் விஷ்ணுவர்தன். விஷ்ணுவின் திறமை மீதும், film making மீதும் [மறக்க முடியுமா - தீப்பிடிக்க தீப்பிடிக்க] பெருமளவு நம்பிக்கையிருக்கிறது. நயன்தாராவின் உடையமைப்புகள் என்னவோ X-Men னில் ஹாலி பேரியின் உடையமைப்புகளை நினைவுறுத்தினாலும், நன்றாக பொருந்தியிருக்கிறது. ஆரம்பமெல்லாம் நல்லா வைச்சு, பினிஷிங்ல சொதப்பாம இருக்கணும்
- கபாபிஷ் என்றொரு தந்தூரி உணவகம், திருமலை பிள்ளை சாலையில் இருக்கிறது. அங்கே கிடைக்கும் வெஜ் தந்தூரி கபாபும், அசைவ கபாபுகளும் கொள்ளையடிக்கின்றன. விஜய ராகவா சாலையிலிருக்கும் ஒரு பஞ்சாபி உணவகத்தில் கிடைக்கும் ஜேடு சூப்பும், உப்புப் போட்ட லஸ்ஸியும் சாப்பிடாமல் சென்னையில் இருப்பது வீணே. மற்ற படி, நண்பரோடு வாரத்துக்கு ஒரு முறை டீக்கடை என்று நாங்கள் செல்லமாக அழைக்கும் வடபழனி கீரின் பார்க்கில் குடிக்கும் அந்த மசாலா டீ பண்ணும் கைகளுக்கு ராஜாவாக இருந்தால் மோதிரம் போட்டிருப்பேன். இப்போதைக்கு ஒழுங்காக பில்லையும், டிப்ஸையும் மட்டும் கட்டுகிறேன்
- பெண்ணிய வாதிகள் கொலை வெறியோடு வாசலில் முற்றுகையிட ஒரு வாய்ப்பு: ஒரு நாயகியை தேவதையாய் உணருவது எப்போது? - எனக்கு
- சம்திங் சம்திங் படத்தில் உன் பார்வையில் பைத்தியமானேன் பாடலில் இரண்டாவது இண்டர்லூடில் திரிஷா பச்சை நிற நீளப்பாவாடையோடு வரும் போது,
- தீபாவளி படத்தில் காதல் காதல் வைத்து காத்திருந்தேன் பாடலில் பாவனா, சின்னப்பிள்ளைகளுக்கு பாடம் கற்றுக் கொடுக்கும் போது,
- செந்தூரப்பூவே என தொடங்கும் 16 வயதினிலே பாடலில், ஸ்ரீதேவி கண்ணசைக்கும் போது,
- உனக்காகவே வாழ்கிறேனில் நதியா மலையிறங்கும் போது,
- கஜினியில் அசின் சூர்யா வெளிநாட்டுக்காரர்களுக்கு வழி சொல்லும்போது, முகத்தை சுளிக்கும் போது,
- பிதாமகனில் லூசாப்ப்பா நீ, என லைலா கேள்வி கேட்கும் போது
- ரன்னில் மீரா ஜாஸ்மின் கிளைமாக்ஸுக்கு முன்பு சுவரில் பாதி முகத்தினை காண்பிக்கும் போது என நீள்கிறது பட்டியல். அது என்னமோ தெரியவில்லை, ஊரே மாய்ந்து மாய்ந்து கொண்டாடும்/டிய சிம்ரன், மீனா, ரம்பா, இப்போது நமீதா, ஸ்ரேயா, சிநேகா பார்த்தால் எனக்கொன்றும் தோன்றவில்லை. வயசாகி விட்டது என்பது உண்மையாகவும் இருக்கலாம். இதையெல்லாம் தாண்டி ஞாயிறன்று பாக்யராஜின் ரகசிய போலிஸ் 100, மறைந்த சுமிதா "நடித்த" படங்களில் ஒன்று. இதற்கு முன் அவர் நடித்த படம் அலைகள் ஒய்வதில்லை என்று நினைக்கிறேன்.
Blogged with Flock
Labels: உணவு, சினிமா, தமிழ்ப்பதிவுகள், புத்தகம், பெண்கள், ரசனை, ரசித்தவை
Nov 26, 2007
[இந்தியா] சமச்சீரின்மை - ட்ரைய்லர் 8
"சியாட்டல் இந்தியர்கள் தத்தம் பால்கனிகளில் அகல் விளக்கேற்றி தீபாவளி கொண்டாடுகிறார்கள். பார்க்க ஆனந்தமாய் இருக்கிறது. இன்ஜினியர் கணவர்கள் விளக்கு தவறி விழுந்து தீ பற்றிக் கொள்ளுமோ, ஃபையர் என்ஜின் வருமோ என்று பயந்து, கடுங்குளிரிலும் பால்கனியை காவல் காத்ததும் பார்க்க நேர்ந்தது."
கிறுக்கல்களிலிருந்து
இந்த ஒரு பத்திக்கு பின்னாடி இருக்கும் சமூக, குடும்ப, பொருளாதார சமரசங்கள் பற்றி தனியாக ஒரு கட்டுரை எழுதலாம்.
இந்த பதிவின் உரிமம் மற்றும் முக்கியமான டிஸ்கி
போன distributed / cloud computing கட்டுரையினை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து internal circulation விடலாமா, என்னுடைய மேலதிகாரிக்கு காட்டி நல்ல பெயர் வாங்கலாமா, இதை நான் தான் ஏழுதினேன் என்று சொல்லி இமேஜ் பில்ட்-அப் கொடுத்து கொள்ளலாமா என்று தனியஞ்சல் அனுப்புவர்களுக்கான ஒரே பதில் - இந்த பதிவு எழுதும் வரை தான் எனக்கு சொந்தம். எப்போது ப்ளாக்கரில் உள்ளே போனதோ அப்போதே இது பொது சொத்து. உங்களால் முடிந்தால் இது நாராயணன் எழுதியது என்று கிரெடிட் கார்டு கம்பெனிகள் Terms & Conditions சொல்வது போல, ஏரியல் 6 பாயிண்டில் போட்டால் போதும். மற்றபடி எவ்விதமான அனுமதியும் தேவையில்லை.
நேற்று அமெரிக்காவிலிருந்து பேசிய ஒரு நண்பர், நான் கேட்கின்ற கேள்விகளை தொகுத்து வைத்து முடிவாக நான் எழுதும் தொடரினையும் சேர்த்து, அவரின் ஆராய்ச்சிக்கு பயன்படுத்த போகிறேன் என்று சொன்னார், ஆராய்ச்சிக்கு உதவும் அளவிற்கு என் எழுத்து இருப்பதாக இன்னமும் நம்பவில்லை. கேட்டவுடன் என்னுடைய அறையிலேயே ஒரு DB Dance [டெட் பாடி டான்ஸ் அல்லது ஒத்தையடி] ஆடிவிட்டேன், எல்லாம் நேரம்தான்.
அமெரிக்காவும் அள்ளக்கைகளும்
இந்த மாதிரியான ஒரு தெலுங்கு டப்பிங் பட தலைப்பு கொடுக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால் தான் மேலே சொன்னது. பெரும்பாலான இந்தியர்களுக்கு அமெரிக்கா ஒரு பூலோக சொர்க்கம். பெரும்பாலான நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் ஆர்டர் எடுத்து செய்தல் என்பது வருமானம் மட்டுமல்ல, நிறுவனத்தின் மதிப்பினையும் சார்ந்த விஷயம். உண்மையில் அமெரிக்காவில் என்ன நடக்கிறது என்பதை எவ்விதமான பந்தாவும் இல்லாமல் பார்த்தால், அந்த நாடு கொஞ்சம் கொஞ்சமாக செத்துக் கொண்டிருக்கிறது. இந்த ஒரு வாக்கியம் பல்வேறு விதமான அதிர்வுகளை கிளப்பும் என்று தெரிந்தாலும், உண்மை அதுதான். சமச்சீரின்மை பற்றி எழுத தொடங்கியவுடனேயே வெறுமனே இந்தியாவினை மட்டும் பற்றி படிக்காமல் ஒரு மாதமாக உலகம் முழுவதும் என்ன நடக்கிறது என்பதை பற்றி தொடர்ச்சியாக படித்துக் கொண்டிருக்கிறேன் [நான் படித்து மண்டை குழம்புவது போதாது என்று நீங்களூம் குழம்ப, இதே பதிவில் வலப்புறத்தில் நான் டெலிசியஸில் சேமிக்கும் உரல்கள் போதும், உங்களை சித்ரவதை செய்ய]
இது தாண்டி, இந்தியாவிலும், ஆசியாவிலும் மட்டும் தான் சமச்சீரின்மை இருக்கிறது என்கிற கனவில் வாழ்பவர்களுக்கு, அமெரிக்காவில் இருக்கும் நண்பர்கள் நல்லதாய் ஒரு கட்டுரை எழுதினால் நன்றாக இருக்கும்.
சீனாவும் சில கேள்விகளும்
உலகமெங்கும் சீனா பற்றிய நம்பிக்கையும் / பயமும் ஒரு சேர இருக்கிறது. சீனாவின் ஷென்ஷென், ஷாங்காய், பீஜிங் பற்றிய படங்கள், உலகமயமாக்கலினால் நடந்த நண்மைகளையும், அடிப்படை கட்டமைப்பு வசதிகளின் விஸ்தீரணத்தையும் பறைச்சாற்றி கொண்டிருக்கின்றன. 10% GDP நாடு என்கிற அந்தஸ்து வேறு உண்டு. ஆனால், உண்மையிலேயே சீனா முன்னேறிக் கொண்டிருக்கிறதா ?
In a little-noticed mid-summer announcement, the Asian Development Bank presented official survey results indicating China’s economy is smaller and poorer than established estimates say. The announcement cited the first authoritative measure of China’s size using purchasing power parity methods. The results tell us that when the World Bank announces its expected PPP data revisions later this year, China’s economy will turn out to be 40 per cent smaller than previously stated.பார்க்க: பினாசியல் டைம்ஸின் இன்றைய கட்டுரைThis more accurate picture of China clarifies why Beijing concentrates so heavily on domestic priorities such as growth, public investment, pollution control and poverty reduction. The number of people in China living below the World Bank’s dollar-a-day poverty line is 300m – three times larger than currently estimated.
.......................................
The new, more accurate statistics describing a smaller, poorer China strengthen this argument. The ADB’s announcement also indicates that the number of dollar-a-day poor in India is closer to 800m than the current estimate of 400m.
These PPP adjustments affect poverty measures because the World Bank’s dollar-a-day poverty line is a PPP dollar poverty line. Reducing PPP consumption estimates drops large numbers of additional households below the poverty line.
For China, the correction needs to be made back to the 1980s and 1990s, when instead of World Bank estimates of roughly 300m people below the dollar-a-day poverty line, the number was more likely more than 500m. China has made enormous strides in lifting its population out of poverty – but the task was perhaps more gargantuan than most people thought and progress has been overstated by bank estimates.
மேலும் கொஞ்சம் கேள்விகள்
- சராசரியான வருமானம் என்பதை எவ்விதமான டேட்டாவினை வைத்து கணக்கெடுக்கிறோம். ஒரு சம்பளம் வாங்குபவனின் நிலைமைக்கும், தொழில் முனைவனுக்கும், தரகு தொழிலை முழுநேரமாக பார்த்து ஒரு dealக்கு காசு வாங்கும் நபருக்குமான இடைவெளியினை எப்படி சராசி வருமானம் நிர்ணயிக்கிறது ?
- அதிகமாக நீங்கள் எப்படி சம்பாதிப்பீர்கள் ? அதிகமாக உழைத்தால் தானே. அப்போது அதிகமாக சம்பாதிக்கிறவன் ஏன் அதிகமாக வரி கட்ட வேண்டும். உழைப்பினையும், வியர்வையினையும் சிந்தி உழைக்கிறவனுக்கான தண்டனையா அது ? ஏன் ஏழைகளுக்கு இலவசமாக கொட்டி கொடுக்கிறார்கள் எல்லா நாட்டிலும், GDP வழியாக பார்த்தால் ஏழைகளின் productivity என்பதும், பணக்காரர்களின் productivity என்பதும் வெவ்வேறானவை, அப்படியிருக்க, அதிகமான productivityயும், உழைப்பினையும், வருமானத்தையும் தரும் பணக்காரார்களுக்கு ஏன் அதிகமாக வரி விதிக்க வேண்டும் ? அதிகமாக சம்பாதிப்பது தப்பா ? ஆக நாம் கடினமாக உழைப்பவர்களின் உழைப்பினையும், வியர்வையினையும் அரசு என்கிற கட்டமைப்பு உதாசீனப்படுத்துகிறதா ? [இது ஒரு நண்பர் கேட்ட கேள்வி]
- இந்து / கிறிஸ்துவ / இஸ்லாமிய அடிப்படைவாதம் என்பது வெறுமனே அடிப்படைவாதிகளாக மாறியவர்களினால் மட்டுமே உண்டாகியதா இல்லை, இம்மதங்களில் இன்னமும் இருக்கும் religiously moderate மக்களால், கவனிக்கப்படாததால் உண்டாகியதா ?
- ஆதிவாசிகள், பழங்குடிகள், மலைவாசிகள் நாகரீகமற்றவர்கள் என்று நாகரீகத்தினை நாம் உலகமெங்கும் புகுத்தியபின் அவர்கள் வாழ்வில் கிடைத்த பெரும் மாற்றமென்ன ? வெறுமனே உணவுக்காக மட்டும், விலங்குகளை வேட்டையாடியவர்களுக்கும், McDonalds Tandori Chicken Tikka விற்காக தினமும் உயிரினங்களை கொல்லும் நமக்குமான வித்தியாசமென்ன ? எந்தவிதத்தில் நாம் நாகரீகத்தில் உயர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்கிறோம் ?
- மதம் என்பது ஒரு நம்பிக்கையெனில், அறிவியலின் கோட்பாடுகளும் நம்பிக்கை தானே ?
- ஏன் இரட்டை செல் பேசிகள் வடக்கில் அதிகமாகவும், தெற்கில் குறைவாகவும் இருக்கிறது ?
- இந்தியாவில் ஏன் பல் மருத்துவ படிப்பின் விலை சடாலென உயர்ந்திருக்கிறது ?
- இறக்குமதி செய்யப்பட்ட விஸ்கி,பிராந்தி, ஒயின், ரம், ஜின் இந்தியாவில் அனுமதிக்கப்படும் போது, ஏன் கள், சுண்டக்கஞ்சி போன்றவை கிரிமினலாக்கப்படுகின்றன ?
Blogged with Flock
Labels: இந்தியா, உலகம், சமச்சீரின்மை, சமூகம், தமிழ்ப்பதிவுகள், மதம்
Nov 20, 2007
[இந்தியா] சமச்சீரின்மை - ட்ரைய்லர் 7
தகவல் அறியும் சட்டம் (Right to Information Act) வந்தவுடனேயே, இந்தியாவில் transparency வந்துவிடும் என தைய தக்கா என குதித்தவர்களுக்கு இரண்டு வாரங்களுக்கு முந்திய ஒரு உச்ச நீதி மன்ற தீர்ப்பு ஆப்படித்திருக்கிறது. அந்த தீர்ப்பில் குடிமகனாகிய நான் அரசின் திட்டங்களையும், திட்ட முனைவுகளையும் எதிர்த்து கேள்வி கேட்க முடியாது என்று ஒரேயடியாக போட்டிருக்கிறது. இது ஒரு பக்கம்.
இந்தியாவில் 50 கோடிகளுக்கு மேல் நீங்கள் ஒரு தனியார் / பொது நிறுவனம் (Pvt / Public Ltd) நடத்தினீர்களேயானால், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை உங்களின் தணிக்கையாளர் சான்றிதழ் இல்லாத வரவு செலவு இதர இத்யாதிகளின் விஷயங்களை ஒரு ஆங்கில பத்திரிக்கைக்கும், இரண்டு மொழி ரீதியான பத்திரிக்கைக்கும் தரவேண்டும். ஆனால் அரசோ வருடத்துக்கு ஒருமுறை தான் பட்ஜெட் போடும், போன பட்ஜெட்டில் சொன்னவைகளூக்கும் செய்தவைகளுக்கும் ஜல்லியடித்து விட்டு, இந்த வருட பட்ஜெட்டினை தாக்கல் செய்யும். இதற்கு மேல் யாரும் அதில் கருத்து சொல்ல முடியாது. பட்ஜெட் தாக்கலாகும் நாள் மட்டும் எல்லா சேனல்களிலும் உங்களுக்கு அதிர்ஷ்டமிருப்பின், உங்கள் முகம் தெரிய வாய்ப்பு உண்டு. இதனை தணிக்கை செய்ய Controller of Audits / Accounts [சரியா??] என்ற ஒரு மத்திய அரசு தணிக்கை நிறுவனம் உண்டு.
என்னுடைய கேள்வி, இந்தியாவின் பட்ஜெட் என்பது மக்களின் முக்கியமான ஒரு ஆவணம். இதில் என்ன நடக்கிறது, நடந்து கொண்டிருக்கிறது என்பதை அறியும் உரிமை மக்களை சார்ந்தது. பொதுப்பணித்துறை நிறுவனங்களே குவார்ட்டர் மாற்றி குவார்ட்டர் பங்கு சந்தைக்காக நிதியியல் அறிக்கையினை அறிவிக்கும் போது, இதையெல்லாம் தாண்டி மேலே இருக்கும் அரசாங்கம் இதை செய்ய வேண்டுமா, வேண்டாமா ? அப்படி செய்யாத அரசினை RTI வைத்து கேள்வி கேட்க முடியாது என்பது தான் அந்த தீர்ப்பு. ஏன் குடிமக்களாகிய நமக்கு அரசு என்ன சொல்கிறது, செய்கிறது என்பதை அறிய பல பாடுகள் பட வேண்டி இருக்கிறது.
இன்றைக்கு இணையத்தளங்களின் மூலம், ஏன் அரசு ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு திட்டத்திலும் என்ன நடக்கிறது என்பதை அப்பகுதி மக்களின் சில நபர்களோடு இணையத்தில் போட முடியாது ? அரசியல் சாசன உரிமைப்படி ஒரு குடிமகனாய் உரிமைகள் இருக்கிறது என்று சொன்ன போதிலும், ஏன் ஒரு தகவல் அறிய ரிப்பன் மாளிகை போனால் நாக்கு தள்ளி, லஞ்சம் கொடுத்தாலேயொழிய எதுவும் நடப்பதில்லை. நம்முடைய நிதியமைச்சர், 2010-ஆல் இந்தியாவின் per capita income $4,000 இருக்கும் என்று சொன்னால், நாமும் கேட்டுக் கொண்டு கைதட்டுகிறோம்.
குத்து 2
முந்தாநாள் சென்னை தி.நகர் போக் சாலையில் இருக்கும் கென்சஸ் இன்ன் என்றொரு விடுதியில் அரை நிர்வாண நடனம் நடந்ததாக, பல ஆண்-பெண்கள் எச்சரித்து விடப்பட்டனர். மாட்டிக் கொண்டு கதறி அழுத பெரும்பாலானோர் தகவல் தொழில்நுட்பம், பிபீ.ஓ துறையினை சார்ந்தவர்கள் என்று செய்தி கூறுகிறது. கேட்டால் வரும் ஒரே பதில் வாரமுழுக்க வேலை பார்க்கறோம், ஒரே டென்ஷன்,, அது தான் ரிலாக்ஸ் பண்ணிக்க வந்தோம்.
ஜயா, உங்களுடைய வேலை எத்தகைய கடினமானது. காவல்துறை மேற்பார்வையாளர்கள், 20 மாடியிலிருந்து கொண்டு பெயிண்ட் அடிக்கும் கட்டிட தொழிலாளிகள், பெண் கல்லூரியின் முதல்வர்கள், இதய/சிறுநீரக அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்கள், அவ்வளவு ஏன் மாநிலங்களின் முதலைமைச்சர்கள், கவர்னர்கள், ஏன் மன்மோகன் சிங் செய்யும் வேலையினை விடவா கடினம் ? என்ன வேலை செய்து விட்டீர்கள் என்று களைத்து போய் ஆட்டம் போடுகிறீர்கள் ? தனிநபர் சுதந்திரம் மிக முக்கியம் என வாதிடுபவன் நான், ஆனாலும், இத்தகையோர் அழும் முதலை கண்ணீர் தனிநபர் சுதந்திரக்கானதா என்பது கேள்விக்குரியது.
தகவல் தொழில்நுட்ப துறையினை கரம் கட்டி, ஒரம் கட்டி, மூத்திர சந்தில் நிற்க வைத்து, நையப் புடைத்து, அவர்களும் நாங்க ரொம்ப நல்லவங்க என்று கண்ணாமூச்சி விளையாட்டு விளையாட எனக்கு இஷ்டமில்லை.
குத்து 3
இந்தியாவின் GDP என்பது காலாண்டிற்கு 8.5% வளருவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்தியாவின மொத்த உற்பத்தியில் போன நிதியாண்டில் விவசாயத்தின் பங்கு 2% மட்டுமே. ஊடகங்கள் இந்தியா-பாகிஸ்தான் டெஸ்ட் சீரிஸ் என்னவாகும், கர்நாடகாவில் பி.ஜே.பி, ஜேடிஏஸ்ஸினை பழிவாங்குமா, நந்திகிராம் விவகாரம் வந்தது நல்லது, இந்தியாவிற்கு அமெரிக்க அணுசக்தி கிடைக்க, கம்யுனிஸ்டுகள் தடை சொல்ல மாட்டார்கள் என்று பார்த்து கொண்டிருந்தாலும், யாரும் எவரும் ஒரு மாதத்துக்கு முன்பு மத்திய ப்ரதேசத்திலிருந்து டெல்லிக்கு 18 மாநிலங்களிலிருந்து 25000 நிலமற்ற, நிலம் பிடுங்கப்பட்ட விவசாயிகள் நடத்திய பேரணி[ஜனதேஷ் யாத்ரா] நினைவிருக்காது. SEZ மோகத்திலும், மேற்கத்திய / சீன புலிகளை பார்த்து சூடுப் போட்டு கொள்ளும் இந்திய அரசு பூனைக்கு உண்மையில் கீழே அடித்தளத்தில் என்ன நடக்கிறது என்று தெரிய வாய்ப்பில்லை.
எனக்கென்னமோ இந்த 25000 பேரின் நடை பயணம் ஒரு முன்னெச்சரிக்கை என்று தோன்றுகிறது. இந்திய அரசே இருக்கக்கூடிய 28 மாநிலங்களில் 18க்கும் மேற்பட்ட மாநிலங்களில் சிகப்பு படையென அறியப்படும் நக்சலைட்டுகள், மாவோஸ்டுகள், ஆயுதம் தாங்கிய போராளி குழுக்கள் இருக்கின்றன என்று ஒத்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவின் சமச்சீரின்மை என்பது வெறுமனே நகரங்களில் லெவி ஜீன்ஸ் போடுபவனுக்கும், போடதவனுக்குமான பிரச்சனை என்று over-simplify பண்ண முடியாது. அமெரிக்கா மாதிரியான மேற்கத்திய நாடுகளின் வளர்ச்சிப்பாதையோ, சீனா மாதிரியான அரசின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளடங்கிய [சீனா நாறி கொண்டிருக்கிறது என்பது வேறு விஷயம். அமெரிக்கா டால்ர கீழே போக,போக, இந்தியாவினை விட பெரிய பாதிப்பு சீனாவிற்கு தான் என்பதும், 50% சீன ஏற்றுமதி அமெரிக்காவிற்கு தான் என்பதும் உலகறிந்தது - செய்தி 1, செய்தி 2] வளர்ச்சிப்பாதைக்கும், நமக்கான வளர்ச்சிப்பாதைக்கும் பெருமளவு வேறுபாடுகள் உள்ளன. நமக்கான வளர்ச்சிப்பாதை என்பது உள்ளடக்கியதாக இருக்க வேண்டிய மிகப்பெரிய வரலாற்று சீரமைப்பின் விளிம்பில் நின்று கொண்டு நாம் புகையிலை குதப்பி கொண்டிருக்கிறோம். விவசாயமும், விவசாயிகளையும் ஒரங்கட்ட, ஒரங்கட்ட நாம் ஒரு புகைந்து கொண்டிருக்கும் எரிமலையின் மீது அமர்ந்திருக்கிறோம் என்ற உணர்வு இல்லாமல் இருப்பது ஆச்சர்யத்தினையும், கவலையினையும் அளிக்கிறது.
Labels: இந்தியா, சமச்சீரின்மை, சமூகம், தமிழ்ப்பதிவுகள், பொருளாதாரம், மக்கள்
[தொழில்நுட்பம்] சர்வம் செர்வர் மயம் (Distributed / Cloud Computing)
எனக்கு எவ்விதமான உலாவியிலும் favorites கிடையாது. என்னுடைய favorites எல்லாமே டெலிசியஸ் (del.icio.us) தளத்தில் இருக்கிறது. நீங்கள் இப்போது படித்துக் கொண்டிருக்கும் இந்த தளத்திலும் வலதுப்புறத்தில் நான் தமிழில் எழுதுவதற்காக சேமிப்பதை ஒரு டெலிசியஸ் தொகுதியாக பார்க்க முடியும். இதனால், எனக்கு தேவையான இணையதளங்கள் எதையும் நான் என்னுடைய கணினியில் சேமிப்பதில்லை. எல்லாமே டெலிசியஸில் இருக்கிறது. மொத்த தளங்களின் சேமிப்பு செர்வரில் இருக்கிறது.
என்னுடைய தனிப்பட்ட மற்றும் அலுவலக மின்னஞ்சல்களுக்கு நான் ஜிமையிலை தான் பயன்படுத்துகிறேன். நீங்கள் ஒரு சிறிய நிறுவனமாக (25 ஊழியர்களுக்கு குறைவாக) இருந்தால் கூகிளில் Google for Apps என்ற சேவையினை பயன்படுத்தலாம். இதன் சிறப்பு என்னவென்றால், உங்களுடைய இணையத்தள முகவரியிலேயே (உதா. narain@mycompany.com) உங்களால் மின்னஞ்சல் அனுப்ப முடியும். ஜிமையிலின் இன்னொரு வசதி, அதில் பாப் (POP) மற்றும் ஐமேப் (IMAP) வசதிகள் இருப்பதால், உங்களின் அவுட்லுக் அல்லது தண்டர்பேர்டு மின்னஞ்சல் மென்பொருளில், மொத்த மின்னஞ்சல்களையும் தரவிரக்க முடியும். ஆகவே இணைய இணைப்பு இல்லாமல் இருந்தாலும், உங்களால் மின்னஞ்சல் பார்க்க முடியும். மொத்த மின்னஞ்சல்களும் செர்வரில் இருக்கிறது.
நான் பெரும்பாலும் பயன்படுத்தும் உலாவி "ப்ளாக் (Flock)" பயர்பாக்ஸ் உலாவியின் அடிப்படையினை பயன்படுத்தி செய்யப்பட்டது. பயர்பாக்ஸில் பயன்படுத்தும் பெரும்பாலான நீட்சிகளையும் (add-ons) இதில் பயன்படுத்த முடியும். 20 MB-க்கு குறைவாக உள்ள முக்கியமான கோப்புகளை நான் gSpace என்றொரு நீட்சி கொண்டு என்னுடைய இன்னொரு ஜிமையில் கிளையில் சேமித்து வருகிறேன். முதலில் உங்களின் ஜிமையிலிருந்து இன்னொரு மின்னஞ்சல் அக்கவுண்டினை நீங்களே உருவாக்குங்கள் (உதா. mybackup@gmail.com) பின்பு gSpace நீட்சியில், அந்த அக்கவுண்டின் பாஸ்வெர்டினை கொடுத்து சேமித்து விடுங்கள். அதன்பிறகு எப்போதெல்லாம், உங்களுக்கு ஒரு கோப்பு பின்னாளில் உபயோகப்படும் என்று நினைக்கிறீர்களோ அதை வெறுமனே Drag n Drop (DnD)செய்தால் போதுமானது. அதுவே ஒரு சேர்கோப்பாக உங்களூடைய பேக்-அப் அக்கவுண்டில் சேர்ந்து விடும். இது ஒரு வழி. பெரும்பாலான சிறிய கோப்புகள் செர்வரில் இருக்கிறதூ.
இன்னொரு வழி, இணையத்தில் இருக்கும் இலவச ஆனால் பாதுகாப்பான சேகரிப்பு தளங்கள் (storage accounts) நான் இப்போது பயன்படுத்துவது box.net. நீங்கள் இதில் ஒரு கணக்கினை தொடங்கினால் ஒரு ஜிபி வரை இலவசமாக கிடைக்கும். தேவையான கோப்புகளை வழக்கம்போல DnD செய்ய வேண்டியது தான். பெரும்பாலான பெரும் கோப்புகள் செர்வரில் இருக்கிறது.
எனக்கு எல்லா தூதுவ (Instant Messenger) சேவைகளிலும் ஒரு கணக்கு இருக்கிறது. தனித்தனியாக ஜி-டாக், எம்.எஸ்.என் மெசன்ஞர், யாஹூ மெசன்ஞர், ஏ.ஓ.எல், ஐ.சி.க்யு என பதிவிறக்கி உங்களின் கணினியினை சொதப்புவதை விட மீபோ (Meebo) பயன்படுத்துங்கள். மீபோ என்பது எல்லா தூதுவ சேவைகளையும் உள்ளடக்கிய ஒரு சேவை. இதனை வெறும் உலாவியிலேயே பயன்படுத்த முடியும். இதனால் தேவையற்ற ஸ்பாமர்களை தவிர்க்கலாம். எந்த தூதவனில் இருக்க வேண்டுமோ, அதில் மட்டும் இருந்து விட்டு மற்றவற்றில் இல்லாமல் invisible mode-இல் இருக்க முடியும். தேவையில்லாத எதுவும் உங்களின் கணினியில் இல்லை, அதனால் க்ராஷாகும் வாய்ப்புகள் குறைவு.
நார்ட்டன் ஆன்டி வைரஸ் என்பது அடுத்த சித்ரவதை. ஆனாலும், எல்லா கணினிகளுக்கும் ஆன்டி வைரஸ் தேவை. எல்லாராலும், நார்ட்டன் வாங்க முடியாது. நான் என்னுடைய புது கணினியில் வந்த 60 நாள் இலவச நார்ட்டனை கழட்டி விட்டு, விண்டோஸின் லைவ் கேர் சேவையினை உபயோகிக்கிறேன். முதல் முக்கியமான விஷயம், இது 90 நாட்களுக்கு இலவசம். இன்னொரு மூன்று கணினிகளுக்கும் சேர்த்து வருடத்திற்கு ரூ.2000 க்கு குறைவாகவே ஆகும். ஆக ஒவ்வொரு முறையும் நார்ட்டனை re install பண்ணக்கூடிய பிரச்சனையிலிருந்து தப்புவது மட்டுமல்லாமல், பல்வேறு விதமான ரிஜிஸ்டரி சித்ரவதைகளிலிருந்தும் தப்பலாம். லைவ் கேர் என்பது ஒரு இணைய சேவை, பெரும்பாலான தீர்வுகள் செர்வரில் இருக்கின்றன.
ஒவ்வொரு முறையும் உங்கள் கணினி க்ராஷ் ஆனால், இருக்கக்கூடிய பெரும் பிரச்சனை நீங்கள் சேமித்து வைத்திருந்த பல்வேறு விதமான் பாஸ்வேர்டுகள், மற்றும் கணக்கு எண்கள் தொலைந்து போகக்கூடிய பிரச்சனை. இப்போது பெரும்பாலான இணையத்தளங்கள் ஓபன் ஐடி என்றொரு முறையினையும் பழைய கணக்கியல் முறையோடு சேர்த்து தருகின்றன. எப்படி எங்கே போனாலும், உங்களுக்கு ஒரே ஒரு பெயர் இருக்கிறதோ, அதே போல உங்களின் ஆன்லைன் வாழ்க்கையின் ஒரே பெயர் தான் ஒபன் ஐடி. ஒபன் ஐடி என்பது உண்மையில் ஒரு உரல். இதன்மூலம், எல்லா பாஸ்வேர்டுகளையும் நினைவில் வைத்திருக்கக்கூடிய சித்ரவதையிலிருந்து தப்பிக்கலாம். இன்னொரு வழி பயர்பாக்ஸில் எல்லாவற்றையும் சேமித்து வைத்திருந்தால் FEBE - Firefox Extension Backup Extension என்றொரு நீட்சி இருக்கிறது. இதன்மூலம் எல்லாவற்றையும் ஒரு பேக் அப் எடுத்து அதை gSpace-இல் தட்டி விடுங்கள். நாளை க்ராஷானாலும், முதலில் பயர்பாக்ஸ் அல்லது ப்ளாகினை நிறுவிவிட்டு FEBE நீட்சியினை நிறுவி, சேமித்த பேக்-அப்பினை re-install செய்தால் உங்களுடைய பழைய எல்லா நீட்சிகள், பாஸ்வெர்டுகள் எல்லாம் நிறுவப்பட்டு விடும். எல்லாம் செர்வரோச்சவம்
ட்விட்டர் அல்லது பொவுன்ஸ் என்பது குறுஞ்செய்தி போல, குறும்பதிவு செய்யும் சில தளங்கள். நன்றாக சாப்பிட்டு விட்டு, ஏப்பம் விடும் எல்லா நாட்களிலும், இவற்றில் ஏதேனும் ஒன்றில் ஒரு கணக்கினை தொடங்கி நீங்கள் இன்றைக்கு, இந்த வாரம், இந்த மாதம் செய்ய வேண்டிய, செய்யக்கூடிய, செய்ய நினைத்திருக்கக்கூடிய வேலைகளை சும்மா தட்டிவிடுங்கள். ட்விட்டரில் இருக்கக்கூடிய இன்னொரு வசதி, ட்விட்டர் கணக்கினை உங்களுடைய ஜி-டாக்கில் ஒரு தோழனாக சேர்த்து கொண்டு செய்திகளை தட்டி விடலாம். நான் காலையில் வந்தவுடன் செய்வது எனக்கான தனிப்பட்ட ட்விட்டர் கணக்கில் செய்ய நினைப்பதை தட்டி விடுவது. நாளைக்கு ஒரு வேளை ஏதாவது ஆனாலும், உங்களால், எங்கே வேண்டுமானலும் இருந்து கொண்டு செய்ய வேண்டிய வேலைகளை பார்க்க முடியும். பெரும்பாலான வேலை மதிப்பீடுகள், திட்ட அமைவுகள் செர்வரில் இருக்கிறது.
இதைப் போல ஜிமைல் உபயோகிப்பாளாரானால், கூகிள் கேலண்டர் உபயோகித்து அதன் settings-இல் உங்களின் செல் பேசி எண்ணினை கொடுங்கள். எல்லா சந்திப்புகளையும் ஜிமைல் கேலண்டரில் போட்டு, அதை உங்களுக்கே குறுஞ்செய்தி மூலம் நினைவுறுத்த செய்ய முடியும். இந்தியாவில் இக்குறுஞ்செய்திகள் இலவசமே. ஆகவே எல்லா சந்திப்புகளையும் கேலண்டரில் போடுங்கள். நாளை ஒரு வேளை, உங்களுக்கு நாம் என்ன கடந்த நாலு மாதமாக கிழித்தோம் என்று பார்க்கவேண்டுமானால், இதை பார்த்தால் போதுமானது. எல்லா சந்திப்புகள், திட்ட முனைவுகள், கால நேர மாற்றத்தோடு வரும் நிகழ்வுகள் எல்லாம் செர்வரில் இருக்கிறது.
இவையெல்லாம் உபயோகிக்க தொடர்ச்சியான இணைய இணைப்பு தேவை. நான் இவையெல்லாம் செய்வது disaster recovery strategy மட்டுமல்ல, முக்கியமாக நானொரு நாடோடி. மாதத்திற்கு பாதி நாட்கள் ஊர் சுற்றும் வாய்ப்புகள் இருப்பவன். அவ்வாறான நேரத்தில் என்னுடைய இணையத்தள இணைப்போ, நான் தங்கியிருக்கக்கூடிய ஹோட்டலில் கனெக்டிவிடியோ சரியில்லையெனில், சடாலென சாலையில் இறங்கி கிடைக்கக்கூடிய ஒரு ப்ரெள்சிங் சென்டரில் உட்கார்ந்து கொண்டே எல்லா வேலைகளையும் முடித்து விடுவேன். இதனால் எனக்கு என்னுடைய மடிக்கணினி தான் எல்லா கோப்புகளின் உறைவிடம் என்பது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. ஒரு நாள் வரும், உங்களுடைய கைரேகை மட்டுமிருப்பின் உலகின் எந்த கணினியிலும் உங்களின் எல்லா விவரங்களையும் பார்க்க முடிவதாக, இது வெறுமனே ஐசக் அஸிமோவின் sci-fi கதையல்ல. இன்னமும் ஐந்து வருடங்களில் நடைமுறை சாத்தியப்படும் என்று நம்புகிறேன்.
வானம் எப்படி எல்லா இடங்களிலும் சொந்தமாக இருக்கிறதோ, அதைப் போல ஏன் நம்முடைய computing activities-ம் இருக்கக்கூடாது என்பதில் தொடங்கியது தான் என்னுடைய வழிமுறை. இன்னமும் போக வேண்டிய தூரங்கள் நிறைய இருக்கிறது, ஆனாலும் இந்த பயணத்தில் முதல் சில அடிகளை எடுத்து வைத்திருக்கிறேன் என்பதில் தான் இதன் முக்கியத்துவமும், பயன்பாடும் தெரிகிறது. தெரிய ஆரம்பித்திருக்கிறது.
நான் இப்போது காத்துக் கொண்டிருப்பது மைக்ரோசாப்ட்டின் Unified Communication Strategy பற்றிய பொது சிந்தனையும், மூன்று மாதங்களுக்கு முன்பு கூகிள் கையகப்படுத்திய Grand Central என்கிற சேவையின் உலகளாவிய பயன்பாட்டினையும். இவை வந்தால், ஒரே ஒரு எண் போதும் உங்களின் செல்பேசி, அலுவலக தொலைபேசி, வீட்டு தொலைபேசி, உங்களின் VoIP கணக்கு எண் என எல்லாவற்றையும் ஒருங்கிணைக்க.
தற்போதைக்கு உங்களுடைய செல்பேசியில் ப்ளூடூத் வசதி இருப்பின் அதன்மூலம் மொத்த எண்களையும் உங்களின் கணினிக்கு மாற்றி உங்களின் மின்னஞ்சலில் ஒரு .vcf பேக் அப் வைத்துக் கொள்ளுங்கள். கணினி க்ராஷ் ஆனால் மட்டுமல்ல, செல்பேசி தொலைந்து போனாலும், தகவல்களை மீட்டுக் கொள்ளலாம்.
மேலே சொன்ன தகவல்கள் மட்டுமல்லாமல், பல்வேறு விதமான சேவைகளை பயன்படுத்துகிறேன். கீழ் கண்ட தளங்களிலிருந்து உங்களுக்கு தேவையான சேவைகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்
கோப்புகளை சேமிக்க - அமேசான் எஸ்3
முகவரிகள், தொலைபேசி எண்கள் சேமிக்க - ப்ளோக்ஸோ, ஹைரைஸ்
வலைப்பதிவுகளை படிக்க - கூகிள் ரீடர், ப்ளாக்லைன்ஸ்
வேர்டு, எக்ஸெல், பவர்பாயிண்டு பயன்படுத்த - கூகிள் ஆபிஸ், சோஹோ ஆபிஸ்
ப்ரோஜெக்டு பற்றி கலந்துரையாட - பேஸ்கேம்ப்
உலகம் முழுக்க ஓசியில் பேச - ஸ்கைப், கிஸ்மோ
சேல்ஸ், ப்ரொடக்ஷன் மற்றும் வணிக விவரங்களை பகுத்தறிய - சேல்ஸ்போர்ஸ், டேபுள் டிபி
வரவு செலவு கணக்கு எழுத - எக்ஸ்பென்சர்
Labels: இணையம், கணினி, செயல்முறைகள், டிப்ஸ், தமிழ்ப்பதிவுகள், தொழில்நுட்பம்
Nov 17, 2007
இடைவேளை
சரி பிரச்சனைகள் ஒய்ந்தது என நினைக்குமுன், என்னுடைய புத்தம்புதிய எச்.பி மடிக்கணினி விஸ்டாவோடு க்ராஷாகி மொத்த டேட்டாவும் காணாமல் போனது. புதன்கிழமை காலையிலிருந்து டேட்டாவினை திரும்ப பெறலாம் என உட்கார்ந்து மண்டை காய்ந்தது தான் மிச்சம். பிறகு மீண்டும் விஸ்டாவினைப் போட்டு ஆரம்பிக்கலாம் என install செய்தால், பேட்டரி சொதப்பியது. மின்சார இணைப்பில் இருந்தால் மட்டுமே வேலை செய்ய முடியும் என்கிற நிலையில், மடிக்கணினியின் பேட்டரி 0% என பல்லிளித்தது.
சரிதான், நமக்கு நல்ல நேரம் ஆரம்பித்தாகி விட்டது என்று மனசுக்குள்ளேயே அழுதுக் கொண்டு [4 வருட டேட்டா, மொத்த back-up-ம் சொதப்பிவிட்டது] எச்.பி சேவை மையத்துக்கு கொண்டு போய் மடிக்கணினியினை வாஸ்து பார்த்து உட்கார்ந்த ஒரு நாற்காலியிலிருந்து கொடுத்தால், அங்கே இருக்கும் சேவை பொறியாளார், இப்போது இருக்கும் டேட்டாவுக்கு எவ்விதமான உத்தரவாதமும் தரமுடியாது என கையெழுத்து வாங்க, மீண்டும் உருவாக்கிய அத்தனை கோப்புகளையும் ஒரு ஒன்றயணா பென் டிரைவில் back-up எடுத்து கொடுத்து விட்டு வந்தேன். இரண்டு நாட்களுக்குள் சொல்கிறோம் என்று சொன்னவர்கள் வெள்ளி வரை எவ்விதமான பதிலும் வராமல், மீண்டும் தொடர்பு கொண்டால், நான் கொடுக்காத ஒரு செல் பேசிக்கு என் மடிக்கணினி தயாராகிவிட்டது என குறுஞ்செய்தி கொடுத்திருக்கிறார்கள். கிழிஞ்சது கே.கே.நகர் என மனதுக்குள் முணுமுணுத்துக் கொண்டு போய் மடிக்கணினியினை வாங்கி அலுவகத்திற்கு வந்தால், அலுவலகத்தில் மின்சாரமில்லை.
ஒரு வழியாக எல்லாம் தயாராகி இன்று காலை இணையத்தில் இணைத்தால், விஸ்டாவின் service update, critical updates என ஒட்டு மொத்தமாய் ஒரு 200 MB தரவிறங்கி, அதைப் பார்த்து, ஓட்டி, விலக்கி எல்லாம் செய்து நிமிர்ந்தால் மணி 3.00 இனிமேலும் எழுதவில்லையெனில், வடபழனி கோயில் வாசலில் இருக்கும் மோடி மஸ்தானின் சாபத்துக்கு ஆளாகி, பாக்யராஜ் படங்களில் வரும் முருங்கை மரங்களில், வேதாளமாய் தொங்கிவிடுவோமோ என்கிற பயத்தில் எழுத ஆரம்பித்திருக்கிறேன்.
Lesson Learned: எதையும் உங்கள் கணினியில் வைக்காதீர்கள். எல்லாவற்றையும் cloud computing-இல் வையுங்கள். நான் ஒரே நாளில் மீண்டதற்கான காரணம் distributed server farmகளில் என்னுடைய கோப்புகளை சேர்த்து வைத்திருந்ததுதான்.
மீண்டும் திங்களிலிருந்து ட்ரையலர் ஓடும்
Labels: இந்தியா, கணினி, சேவைகள், தமிழ்ப்பதிவுகள், பொது
Nov 10, 2007
[இந்தியா] சமச்சீரின்மை - ட்ரைய்லர் 6
No minister came forward to calm the nation when India hit 94th rank in the Global Hunger Index. That's out of 118 countries. The daily, DNA, though, did capture the essence of the story with its report: Ethiopians manage hunger better than us. For indeed, they do these days. At least in their score on the GHI Progress Indicator of the International Food Policy Research Institute. Ethiopia worked better at reducing hunger than we did even though worse off in overall ranking. Zimbabwe, facing hyperinflation and worse, still ranks ahead of us at slot 93 in the GHI itself. Gabon, Honduras and Bolivia are also all ahead of us in that list. Pakistan too, is ahead of us in the GHI, at 88. China logs in at 47. All our south asian neighbours do better than us on this index, except Bangladesh. And who knows when they'll overtake us? Even Nepal, one of the poorest countries in Asia, outranks us. None of them boasts an economy growing at 9 per cent a year.
It all happened around the same time. The day the Sensex crossed 19,000, India clocked in 94th in the Global Hunger Index - behind Ethiopia. Both stories did make it to the front page (in one daily at least). But, of course, the GHI ranking was mostly buried inside or not carried at all that day. The joy over the stunning rise of the media's most loved index held on for a bit the next day. The same day, India clocked in as the leading nation in the number of women dying in childbirth. In this list, the second, third and fourth worst countries put together just about matched India's 1.17 lakh deaths of women in childbirth. This story appeared in single column just beneath the Sensex surge.
............................
No minister came forward to calm the nation when India hit 94th rank in the Global Hunger Index. That's out of 118 countries. The daily, DNA, though, did capture the essence of the story with its report: Ethiopians manage hunger better than us. For indeed, they do these days. At least in their score on the GHI Progress Indicator of the International Food Policy Research Institute. Ethiopia worked better at reducing hunger than we did even though worse off in overall ranking. Zimbabwe, facing hyperinflation and worse, still ranks ahead of us at slot 93 in the GHI itself. Gabon, Honduras and Bolivia are also all ahead of us in that list. Pakistan too, is ahead of us in the GHI, at 88. China logs in at 47. All our south asian neighbours do better than us on this index, except Bangladesh. And who knows when they'll overtake us? Even Nepal, one of the poorest countries in Asia, outranks us. None of them boasts an economy growing at 9 per cent a year.
பார்க்க: சாய்நாத்தின் இந்தியா டூகெதர் கட்டுரை
மூன்றாவது இந்திய குடும்ப சுகாதார சர்வேயின் முடிவுகளும், சில ஆரம்பங்களும்

பார்க்க: ப்ரண்ட்லென் செய்தி
முக்கியமான தொழில்கள் (1997 - 2007 )
மருத்துவ தனிப்பிரிவுகளிலேயே, அதீகமாக நோயாளிகள் வரும், அதிக வருமானம் பெறும் நிபுணத்துவம் பெற்ற தொழில்கள் எவை ?
கால் சென்டரின் மூலம் உருவாகும் புதிய தொழில் வாய்ப்புகள் எவை ?
சாதியின் பெயரால் கைகழுவப்பட்ட பல தொழில்களில், எவற்றிலெல்லாம் இன்றைக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் புகுந்திருக்கின்றன ?
கடந்த பத்தாண்டுகளில் உருவாக்கப்பட்ட புது வேலை வாய்ப்புகள் (உ.தா Tele caller) எவையெவை ?
கடந்த பத்தாண்டுகளில் "பெயர்" மாற்றப்பட்ட தொழில்கள் எவை ?
Blogged with Flock
Labels: இந்தியா, உலகம், சமச்சீரின்மை, சமூகம், தமிழ்ப்பதிவுகள்
[இலங்கை] குமுதம் ரிப்போர்ட்டரில் வந்த நேர்காணல்
இந்தத் தாக்குதல் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? தமிழ்ச்செல்வனுடனான உங்கள் சந்திப்பு பற்றிச் சொல்லுங்கள்...
‘‘புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனைக் கொலை செய்ததன் மூலம் இலங்கை அரசாங்கம் சமாதானத்திற்கான சாத்தியக்கூறுகளைக் கொன்று, குழி தோண்டிப் புதைத்து விட்டது. போர் நிறுத்தக் காலகட்டத்தில் எங்கள் கட்சியின் தூதுக்குழுவின் சார்பில் கிளிநொச்சிக்குச் சென்று, அவரைச் சந்தித்து உரையாடி இருக்கின்றேன். தனிப்பட்ட முறையிலும், ஒருமுறை சந்திக்கும் எவரையும் வசீகரிக்கும் ஆளுமை கொண்டவர் அவர். வடகிழக்கில், தமிழர் தாயகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்களுக்கு அரசியல் முகவரியாக தமிழ்ச்செல்வனின் புன்முறுவல் பூத்த முகமே இருந்து வந்தது என்பதனை நான் நன்கு அறிவேன். தனது தரப்பின் தர்க்க நியாயங்களை மிகச் சிறந்த முறையிலே சர்வதேச சமூகத்திடம் எடுத்து வைப்பதில் சளைக்காதவராக அவர் திகழ்ந்தார்.’’
இனப்பிரச்னைக்குத் தீர்வு எந்தளவில் இருக்கிறது?
‘‘தமிழ்ச்செல்வன் கொலை உள்ளிட்ட எந்தப் பிரச்னைக்கும் ஆதியோடந்தமான பிரச்னை இலங்கை இனப்பிரச்னை. அந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணும் அனைத்து வழிகளையும் இலங்கை அரசாங்கம் அடியோடு மூடி விட்டது. வாரத்துக்கு மூன்று நாட்கள் கொழும்பில் நடத்தப்பட்டு வந்த அனைத்துக் கட்சி கூட்டத்தையும் இலங்கை அரசாங்கம் கடந்த வாரம் காலவரையின்றி ஒத்தி வைத்துவிட்டது. அதை அடுத்துத்தான் இந்தத் தாக்குதல் நடந்திருக்கிறது. இனி அடுத்த ஜனவரிக்குப் பின்னர்தான் அடுத்த கூட்டம் பற்றிய தேதியைப் பேசுவது என்றும் முடிவு செய்திருக்கிறது. இது எதைக் காட்டுகிறதென்றால், அரசியல் தீர்வு காணும் நிலை எதுவும் இலங்கை அரசிடம் இல்லை. முழுக்க முழுக்க யுத்தம் நடத்தவே சிந்திக்கிறார்கள். விடுதலைப்புலிகளுடன் யுத்தம் நடத்துவது ஒரு வழியென்றாலுங்கூட, அதற்காக அரசியல் ரீதியான தீர்வுக்கான நடவடிக்கைகளை நிறுத்தி வைக்கத் தேவையில்லை. ஆகவே, இதை இந்திய அரசாங்கமும் கவனத்தில் கொள்ள வேண்டும்.’’
இலங்கைப் பிரச்னையில் தமிழ்நாட்டின் நிலைப்பாடு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
‘‘தமிழ்நாட்டில் நடப்பது என்ன? தமிழ்ச்செல்வனின் மறைவிற்கு இரங்கல் கவிதை எழுதிய தமிழக முதல்வர் கருணாநிதியை, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கடுமையாகக் கண்டித்துள்ளார். இது எங்களுக்கு மிகுந்த மனவேதனை அளிக்கிறது. இலங்கைத் தமிழர்களின் விவகாரத்தில் ஒரு தீர்க்கமான முடிவைக் கொண்டுவரும் சக்தி தமிழக தலைவர்களிடமும், அவர்கள் மூலமாக சர்வதேச சமூகத்திடமும் மட்டுமே இருப்பதாகப் பார்க்கிறோம். அமெரிக்காவும், ஐரோப்பாவும், ஐக்கிய நாடுகள் சபையும் ஒத்தாசை புரியலாமே தவிர, தீர்க்கமான முடிவெடுக்கும் தகுதியும் தாத்பரியமும் இந்தியாவில்தான் இருக்கிறது. ஆனால், இந்திய அரசியல் தலைவர்கள் விடுதலைப்புலிகளை மையமாக வைத்து இன்னமும் இலங்கைப் பிரச்னையைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஒன்று, விடுதலைப்புலிகளை ஆதரிக்கிறார்கள் அல்லது விடுதலைப்புலிகளை எதிர்க்கிறார்கள். ஆனால் உண்மையான பிரச்னை என்பது இந்த இரண்டு நிலைப்பாடுகளுக்கும் இடையில் இருக்கிறது. அந்த இடைவெளியில்தான் வட இலங்கையிலே வாழும் யாழ்ப்பாணத் தமிழர்களும், தென்னிலங்கையிலே வாழும் இந்திய வம்சாவளித் தமிழர்களும் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.’’
விடுதலைப்புலிகளின் அடுத்த நடவடிக்கை அல்லது நிலைப்பாடு எப்படியிருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
‘‘உடனடியாக கடும் பதிலடி தரப்படும் என்று விடுதலைப்புலிகள் தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டிருக்கிறது. விடுதலைப்புலிகளின் போராட்டம் இன்னும் வலுவாக முன்னெடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் பரபரப்பும் கூடியிருக்கிறது. வருடாவருடம் நவம்பர் மாதம் 27_ம் தேதி நடக்கும் புலிகளின் தலைவர் பிரபாகரனின் ‘மாவீரர் உரை’ இம்முறை கடும் எதிர்பார்ப்புக்குள்ளாகியிருக்கிறது. இத்தகைய தாக்குதல் காரணமாக தொடர் தாக்குதல்கள் நடைபெறுமானால், இவற்றில் சிக்கித் திணறப் போவது, ஏற்கெனவே அதலபாதாளத்தில் விழுந்து பரிதாப வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கக் கூடிய அப்பாவித் தமிழ் மக்கள்தான். இவர்களைக் காப்பாற்றும் தார்மீகப் பொறுப்பு தமிழக அரசியல் தலைவர்களுக்கும், அவர்கள் மூலமாக இந்திய அரசாங்கத்துக்கும் இருக்கின்றதென்பதை இந்தச் சமயத்தில் நான் மிகவும் வலியுறுத்திக் கூற விரும்புகிறேன்.’’
இந்த நேரத்தில் இங்கிலாந்தில் வைத்து கருணா கைது செய்யப்பட்டது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
‘‘கருணா இலங்கையில் இருந்து மாற்றுப் பெயரில் சட்டவிரோதக் கடவுச்சீட்டில் (பாஸ்போர்ட்) ஐரோப்பாவுக்குப் பயணமாகி இங்கிலாந்துக்குச் சென்றிருந்த வேளையில், குடியேற்ற (இமிகிரேஷன்) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்து நாட்டின் குடியேற்றச் சட்டங்களை மீறிவிட்டார் என்பதும், கைது செய்யப்பட்ட நேரத்தில் ஆயுதம் வைத்திருந்தார் என்பதும்தான் உடனடிக் குற்றச்சாட்டாகக் கூறப்படுகிறது. இதற்கப்பால் இலங்கையில் அவர் மீது கடத்தல், படுகொலைகள், கப்பம் பெற்றுக் கொள்ளுதல் ஆகியவை தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு இங்கிலாந்து அரசாங்கம் முயலுமா அல்லது அவர் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.’’
இலங்கை அரசாங்கத்துக்குச் செல்லப்பிள்ளையான கருணா ஏன் போலியான கடவுச்சீட்டில் பயணிக்க வேண்டும்?
‘‘அவர் மீது ஏற்கெனவே பல்வேறு குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. அவர் இப்போது இலங்கை அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டாலுங்கூட ஏற்கெனவே இங்கிலாந்து அரசு விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தடை செய்துவிட்ட நிலையில், அங்கே அவர் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட குற்றவாளி. ஆனால், அவர் இலங்கை அரசாங்கத்தின் உதவியும் ஒத்தாசையும் இல்லாமல் மாற்றுப் பெயரில் கடவுச் சீட்டு பெற்றுச் சென்றிருக்க முடியாது. அவர் மீது கடவுச் சீட்டு குற்றச்சாட்டு முன்வைக்கப்படுமானால், அதில் இலங்கை அரசாங்கமும் கூட்டுக்குற்றவாளியாகக் கருதப்படும் நிலையே இருக்கிறது.’’
விடுதலைப்புலிகள், தாங்கள் போர் தர்மங்களைக் கடைப்பிடிப்பதாகவும் இலங்கை அரசிடம் அத்தகைய போக்கு இல்லையென்றும் குற்றம் சாட்டியுள்ளது பற்றி...
‘‘கடந்த காலங்களிலே எப்படி இருந்திருந்தாலுங் கூட அமைதி உடன்படிக்கைக்குப் பிறகு, இலங்கை ராணுவ நடவடிக்கைகளுக்குப் பதிலடி கொடுக்கும் விடுதலைப்புலிகள், ராணுவத் தொடர்பிலான தளங்களையும் இலக்குகளையும் மட்டுமே தாக்கி அழித்துள்ளார்கள். ஆனால், இலங்கை அரசாங்கம் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே தொடர்ச்சியாக வடகிழக்கின் மீது விமானத் தாக்குதல்களை நடத்திக் கொண்டிருக்கிறது. அதில் பெரும்பாலும் அப்பாவிப் பொதுமக்கள்தான் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள். எறிகணை (மிஸைல்) தாக்குதலையும் நடத்துகிறார்கள். இவற்றையெல்லாம் கண்டுங்காணாதது போலவே இந்தியா உள்பட சர்வதேச சமூகம் இருக்கிறது. இப்படி ராணுவ இலக்கு அல்லாத ஒரு தாக்குதல்தான் தமிழ்ச்செல்வன் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும். இப்படி அரசியல்துறை அலுவலகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலையும் பொதுமக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களிலும் இதுவே இறுதியாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளும் கடமை இந்திய அரசாங்கத்துக்கு இருக்கிறது என, இந்தச் சந்தர்ப்பத்திலே நான் வலியுறுத்திக் கூற விரும்புகிறேன்’’ என்றார் அவர்.
சில இழப்புகள் அயர்ச்சியைத் தரும்; சில இழப்புகள் ஆத்திரத்தையும் வேகத்தையும் தரும். புலிகளைப் பொறுத்தவரை தமிழ்ச்செல்வனின் இழப்பு இரண்டாவது வகை. ஏற்கெனவே இலங்கையின் அதிஉயர் பாதுகாப்பு வளையத்தில் (ஹை செக்யூரிட்டி ஸோன்) இருக்கும் கொழும்பு ராணுவ விமான தளத்தின் மீது தங்கள் விமானப் படைகளின் மூலம் தாக்குதல் நடத்தியது முதல், தற்போது அனுராதபுரம் படைத்தளத்தைத் தாக்கியது வரை இலங்கையின் எந்தப் பகுதியையும் தாக்கும் வல்லமையும், போர் விமானங்களும் தங்களிடம் இருப்பதை விடுதலைப்புலிகள் ஏற்கெனவே நிரூபித்துள்ளனர். போர் தர்மங்களை மீறி இலங்கையின் தலைநகரான கொழும்பின் எந்தப் பகுதியையும் தாக்க அவர்களுக்கு வெகுநேரம் பிடிக்காது என்பதும், இலங்கைத் தமிழர்களுக்கு மட்டுமல்லாது சிங்களவர்களுக்கும் தெளிவாகவே தெரிந்திருக்கிறது.
அப்படி அவர்கள் தாக்கத் தொடங்கினால், கொழும்பு நிர்மூலமாகிவிடும் என்பதும் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று என்பதால், இலங்கையில் பதற்றம் கூடிக் கொண்டேதான் வருகிறது.
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்
Blogged with Flock
Labels: இலங்கை, ஈழம், உலகம், சமூகம், தமிழ்ப்பதிவுகள், நேர்காணல், மக்கள், விவாதம்
Nov 8, 2007
[இந்தியா] சமச்சீரின்மை - ட்ரைய்லர் 5 [அமெரிக்க நிலைமை]
There are only two economic philosophies in America – trickle down and bottom up. Trickle down means the rich get richer and pay less taxes. Supposedly they use their extra income to invest in America, which makes all of us more productive. But it doesn’t work that way. In a global economy, investments don’t trickle down; they trickles out to wherever on the planet the rich can get the highest return. If trickle down worked as advertised inequality wouldn’t be widening so fast.
Bottom up means giving all Americans what they need to be productive – universal and affordable health coverage, good schools, a chance to attend college, job retraining, affordable child care, and good public transportation to and from the job, for starters. But as we learned a decade ago, this requires money – even more, now. So the question is how the nation can afford it and ALSO give the soon-to-retire baby boomers the Social Security and Medicare they expect, pay for homeland security and national defense, invest in non-fossil based fuel technologies, and repair the nation’s decrepit infrastructure (recall the pipe that blew out in New York last July and the bridge that collapsed in Minneapolis). I haven’t even mentioned the trillion dollars necessary to shield the middle class from the Alternative Minimum Tax. Even if we cut corporate welfare, eliminated subsidies to agribusiness, and banned all earmarks, we wouldn’t have nearly enough.
The only way is to stop obsessing about balancing the budget and start pushing for a serious tax hike on the rich. Yet all Democratic presidential candidates are styling themselves "fiscal conservatives" and none has suggested raising the marginal tax rate on the richest beyond the 38 percent rate it was under Bill Clinton. They may talk bottom-up economics but they're still wedded to trickle down.
மேட்டர் மேலே சொன்னது மட்டுமல்ல, இந்த பதிவின் பின்னூட்டங்களை படியுங்கள், சும்மா சொல்லக்கூடாது, நாம் இந்தியாவில் இருக்கிற கொஞ்சநஞ்ச ஆட்களை வைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தால், மொத்த அமெரிக்காவே சமச்சீரின்மையால் இரண்டாய் பிளந்து வார்த்தையால் வாலிபால் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவில் இருக்கும் நண்பர்கள், சமச்சீரின்மை பற்றி மொத்தமாக படிக்க, இந்த புத்தகத்தினை [The Bottom Billion: Why the poorest countries are falling and what can be done about it - Paul Collier] பாருங்கள்
Blogged with Flock
Labels: அமெரிக்கா, இந்தியா, சமச்சீரின்மை, தமிழ்ப்பதிவுகள், விவாதம்
Nov 7, 2007
[இந்தியா] சமச்சீரின்மை - ட்ரைய்லர் 4
"I am sorry to say this, but we are headed toward really bad days," IEA chief economist Fatih Birol told TIME this week. "Lots of targets have been set but very little has been done. There is a lot of talk and no action." .
The reason for the IEA's alarm is its expectation that economic development will raise global energy demands by about 50% in a generation, from today's 85 million barrels a day to about 116 million barrels a day in 2030. Nearly half that increase in demand will come from just two countries — China and India, which are electrifying hundreds of cities and putting millions of new cars on their roads, most driven by people who once walked, or rode bicycles and buses. By 2030, those two countries will be responsible for two-thirds of the world's carbon gas emissions, which are the primary human activity causing global warming .
India and China have argued against enforcing strict emission controls in their countries, on the grounds that these could hinder their economic growth and prompt a global economic slowdown. But the new IEA report says working with China and India on alternative energy sources and curbing emissions is a matter of global urgency.
டைம் இதழிலிருந்துபயமுறுத்தல் 2
Yet, from the time Sonia Gandhi and the Prime Minister last month pulled back from the political-precipice edge, the US has piled up pressure on New Delhi, leaving no stone unturned to rescue the deal. Remember how President George W. Bush anxiously sought to reach the PM by telephone while the latter was travelling in Africa? This week, US secretary of state Condoleezza Rice called foreign minister Pranab Mukherjee to convey the same message — in the words of her spokesperson, "to urge the Indian government to move forward with this deal."
To personally lobby Indian leaders, the White House sent treasury secretary Henry M. Paulson and former secretary of state Henry Kissinger in recent days. And as if India were a Pakistan, where Washington brokered a Pervez Musharraf-Benazir Bhutto deal to help keep its pet dictator in power, the US is trying to cut a deal between the Congress party and BJP, so as to save another deal dear to it.
By pulling out all the stops, the signs of desperation have become unmistakeable. In fact, since that famous Bush call to Singh, no day has passed without some senior US official, diplomat or congressman telling India why it should seize the deal as a golden opportunity not to be missed. The US ambassador to India, for his part, has seemingly returned to his old marketing job, hawking the deal door-to-door — from South Block offices to the homes of important politicians in town.
ஏசியன் ஏஜ் இதழிலிருந்து- ஏன் திடீரென இந்தியா / சீனா மீது உலகநாடுகளுக்கு இவ்வளவு கரிசனம் ?
- இது பாசமா இல்லை வேஷமா?
- அமெரிக்கா இந்தியா எரிபொருள் உற்பத்தியில் தன்னிறைவு அடைய எதற்கு எவ்வளவு நடவடிக்கைகள் எடுக்கிறது ?
- ஏன் இவ்வளவு பேசும் அமெரிக்கா ஐ.நா சபையில் நமக்கு நிரந்தர உறுப்பினராகும் தகுதியினை பற்றி பேச்சு எடுத்தால் மட்டும் "டமாராகி" காது கொடுக்காமல் இருக்கிறது ?
- இந்தியா என்பது அமெரிக்காவினைப் பொறுத்தவரை நாடா இல்லை சந்தையா ?
- ஏன் அரசாங்களுக்கிடையே நடைபெற்ற அணுசக்தி ஒப்பந்தக் குழுவில், தனியார் அமெரிக்க நிறுவனங்களிலிருந்து நிறைய பேர்கள் வந்தார்கள் ? இந்தியாவின் ordinance Act எப்படி மெதுவாக ஆனால் மிக திறமையாக மாற்றம் செய்யப்பட்டு தனியார் நிறுவனங்கள், ராணுவத்திற்கு தேவையான ஆயுதங்களை தயாரிக்க ஏதுவாக மாற்றப்பட்டிருக்கிறது ?
- ஏன் Punj Llyod, Jai Industries மற்றும் Usha Martin நிறுவனங்களின் பங்குகள் விரைவாக பங்குச் சந்தையில் கைமாறுகின்றன, விலையேறுகின்றன?
Blogged with Flock
Labels: அணுசக்தி, அமெரிக்கா, இந்தியா, எரிபொருள், சமச்சீரின்மை, சமூகம், தமிழ்ப்பதிவுகள், மக்கள்
Nov 6, 2007
[இந்தியா] சமச்சீரின்மை - ட்ரைய்லர் 3
லியாகத் அலி என்றொருவர் பல பெண்களை மயக்கி ஏமாற்றி அவர்களை பாலியல் தொழிலில் தள்ளியதாக குற்றம்சாட்டப்பட்டு காவலில் இருக்கிறார். பாலியல் தொழிலாளிகளை மட்டும் குறி வைக்காமல், அவர் குடும்ப பெண்கள், கல்லூரி பெண்கள், என casual sex workers-ஆக நிறைய பேரினை மாற்றி இருக்கிறார். லியாகத் அலி குற்றவாளி என்பதில் சந்தேகமில்லை, ஆனால், அவருடைய நெட்வொர்க்கில் இருக்கும் பல்வேறு குடும்ப/கல்லூரி பெண்கள் ஏன் casual பாலியல் தொழில் செய்ய வேண்டும். எது அவர்களை இந்நிலைக்கு தள்ளியது - வறுமையா, ஆசையா, இன்பமா, பணமா, சமூகமா ?
காட்சி 2
நண்பரோடு நடந்த ஒரு உரையாடல்
"எப்படி வியாபாரமெல்லாம் போகுது"
'ஹா. நல்லா போகுது, ஆனா ஆளுங்க கிடைக்கிறது தான் கஷ்டமாயிருக்கு."
"ஓ"
"போன வாரம் ஒரு ட்ராப்ட்ஸ்மென் பையனை பார்த்து 6000 சம்பளம் + வண்டி தர்றேன், வாடா-ன்னா, ஒரு வாரம் கழிச்சு போன் பண்றான், நான் ஒரு மொபைல் கம்பெனியில சேல்ஸ் ரெப் வேலைக்கு சேர்ந்துட்டேன்னு"
"அப்படியா. டெக்னிகல் வேலைக்காக ஆள் இல்லை, நிறைய பேர் இருப்பாங்களே, என்ஞினியரிங் முடிச்சுட்டு சும்மா இருக்காங்களே"
"எங்க நாராயண், எல்லாரும் காத்துல கனவு காண்றானுங்க, ஆரம்பத்துலயே 10000 சம்பளம் வேணுமுன்னு எதிர்பாக்கறாங்க. அது நடக்குமா?"
காட்சி 3
பிஸினஸ் - ஸ்டாண்டர்ட்டின் இன்றைய இதழிலிருந்து
Despite the importance given, history is replete with instances where people in the regions and countries with abundant natural resources suffer low levels of living. In India, for example, the 40 per cent of the population of the country living in the six states of Bihar, Chhattisgarh, Jharkhand, Madhya Pradesh, Orissa and Uttar Pradesh generate just about 20 per cent of incomes. Also, while the country has been registering high growth rates, the growth rates registered in these low-income states is much lower. Similar trends are seen in human development indicators. Thus, not only do these states have low incomes, they also have increasing disparities.
காட்சி 4
300 பேர்களை ஏற்றி சொல்லும் பேருந்து ஒரு சிக்னலில் நின்றால், ஆக்ரமிக்கும் இடத்திற்கும், மூணே பேர் போகும் ஒரு இன்னோவா அதில் பாதி இடத்தினை அதை சிக்னலில் அடைத்து கொண்டு நிற்பதற்கும் பின்னுள்ள காரணங்கள் என்ன ? பேருந்து நிலையத்திலோ, ரேஷன் கடையிலோ, பிற இடங்களிலோ வரிசையில் நிற்காத நாம், ஏன் ஏடிஏம்-ல் மட்டும் வரிசையில் நிற்கிறோம் ? வெறுமனே 3000 ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு, ஒண்டு குடித்தனத்தில் கழிப்பறைக்குக் கூட வரிசையில் நிற்கும் சமூகத்தில், ஏன் நடிகைகள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், உயர் பணக்காரர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் ? ஏன் எல்லா department store-களிலும் அத்தியாவசியமான அரிசி, பருப்பு போன்ற பொருட்கள், கடையின் கடைசியில் இருக்கின்றன, ஆனால் snacks, shampoo, health drinks முன்னாடி இருக்கின்றன ? அமெரிக்காவிலோ, சிங்கப்பூரிலோ குப்பையினை ஒழுங்காக போடும் நாம், மீனம்பாக்கம் வந்தவுடன் எப்படி தரையில் எச்சில் துப்புகிறோம் - Is this unlimited freedom or corruption of our own power in a country?
காட்சி 5
சந்தை பொருளாதாரத்தின் அடிப்படை வாடிக்கையாளர்கள் மற்றும் தேவைகள். சந்தை பொருளாதாரத்தினை தலையாய கடமையாக கொண்டிருக்கும் இந்தியாவில் ரவுடிகள், நிழலாளிகள், இடைத்தரகர்கள், அரசியல் தரகர்கள், போன்றவர்களின் தேவை என்ன ? அவர்களுக்கான வாடிக்கையாளர்கள் இல்லாமல், இவர்களின் தேவை இருக்கப் போவதில்லை. அப்படி இவர்களுக்கு தேவையிருப்பின், அத்தேவையினை உருவாக்கும் காரணிகள் எவை? ஏன் நமக்கான ஒரு சூழ்நிலையில் நாம் தரகர்களை நாடிகிறோம், பின்பு இந்தியாவே சரியில்லை என்று புலம்புகிறோம். துப்பாக்கி தூக்குதல் வன்முறையெனில் எதற்காக பிரபலங்களுக்கு 'பாதுகாப்பு' காரணத்திற்காக துப்பாக்கி உரிமம் கொடுக்கிறோம்.
Blogged with Flock
Labels: இந்தியா, சமச்சீரின்மை, சமூகம், தமிழ்ப்பதிவுகள்
[ஈழம்] இன்று சென்னையில் தமிழ்ச்செல்வனுக்கு அஞ்சலி - நிகழ்ச்சி அறிவிப்பு
அஞ்சலி கூட்டத்தில் பேசுபவர்கள்
கொளத்தூர் மணி
இயக்குநர் சீமான்
ஆனூர் ஜெகதீசன்
மற்றும் பலர். வண்டியில் வரும்போது சுவரோட்டி பார்த்ததால், நிறைய பெயர்கள் நினைவில் இல்லை.
இடம்: தியாகராய நகர் மேல்நிலைப்பள்ளி, வெங்கட் நாராயணா சாலை
நேரம்: மாலை 5.00
நீங்கள் யாரும் வந்தாலும், வராவிட்டாலும் கண்டிப்பாக 'ரா' அமைப்பின் காவலர்களும், சி.பி.சி.ஐ.டி காவலர்களும் கண்டிப்பாக கலந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
Blogged with Flock
Labels: அஞ்சலி, இலங்கை, ஈழம், தமிழ்ச்செல்வன்
Nov 5, 2007
[இந்தியா] சமச்சீரின்மை - ட்ரைய்லர் 2
- Why when everybody says that the theater going audience is less, while the price of the ticket is on a constant rise ?
- Why there is a steady incremental decline in Indian agriculture, while more and more industries are turning into a services industry ?
- Why in 30 years, we shifted our mindset from renting our home to family men to bachelors ?
- Why more and more knowledge economy workers are having a strong faith in religion, than before ?
- Why the mass media is more distributed, while the trust and credibility factor shifted to blogs & individual opinions ?
- When technology creates more people jobless, it also enables them re skilling using technology ?
- When was the last time we wrote an physical letter to a friend?
- Why social networks are getting so popular, while the average Joe's spending time with their family is on a steady decline?
- While the family planning is very effective in India, there is a growing, powerful but smaller niche as single parents ?
- Why in one of the part country farmers are willing to give their lands, while the other is fighting for it ?
- Why most of the farmers don't want their next generation to be farming, while the so called "intellectuals" are talking & worrying about agriculture, where 40% of the Indian population by 2020 lives in the urban centers ?
- While there are no unions & groups among knowledge economy workers, their influence spreads like viral, while the typical unions & groups are not able to do anything much in the libralized economy ?
- Why there are regular autos, share autos, call taxis and mini vans, yet the public transport system is chocked and full?
- What happen to Indian politics. How distributed regional parties gaining control of policy decisions affecting the Nation. Why this happened ?
- Why marketing is shifting from mass items to individual focussed selling ?
- How the importance of plastic cards [ATM, Debit / Credit cards, Loyalty cards], alters the perception of money ?
- How notional money is gaining more importance than actual money ?
- Why stock markets are soaring while there is a steady decline in the traditional industries ?
- How VoIP will change the face of Telecoms as an industry worldwide, while Mobile changes the face of Computing as an industry ?
- Why there are more EMI driven offers for family vacation now, than ever before in the history of India ?
- How wealth management become a business by itself, for managing other people's money ?
- How home-working is becoming a trend, killing the traditional office goers worldwide?
- Why there are more educated, intelligent people joining militant groups, than the normal cliched uneducated, poor & jobless youngsters?
- Why opinion columns of business dailies moved from opinionated business to discussing about government policies?
- How development has taken the seat than freebies in electoral campaigns?
- Why there are more "single winner" with "loads of participant" programmes in TVs are getting popular?
- How "fame" is becoming a currency by itself in social treatment?
- Why airlines are comfortable with issuing eTickets than traditional tickets? Is it because of comfortability or business compulsion?
- Why Petrol bunks in India are transforming into smaller shopping outlets?
- Why in spite of technology, only negligible amount of audience are using Electronic Clearance Service facility?
- Can you rattle down all the mobile numbers stored in your mobile ? Why we are getting into "selective amnesia" in certain parts of our life?
- How the pani poori / pav bhaji is considered a snack in the South, while Idly Vada is a regular breakfast and all time available food in North?
- Why we need to save villages, if there are no villagers going to reside, moving towards urban centers?
- What is the future of agriculture - contract farming or imports?
- Why the sales of personal hygiene, sexuality, gossips are on their higher turn, while the so called intellectual, stimulating magazines are on constant decline?
- How come trouser hip sizes like 40 and above is available in regular stores now?
- How come the sales of snacks like Bingo, Lays and others are on a constant increase, while the regular flour and wheat is on a constant decline?
- Why is that there are about 40+ varieties available in Lays?
- Why is the public transportation, public healthcare, public litigation system is in a severe loss, while the same industries in private players are booming and making extra ordinary profits?
- How suddenly there are more fitness & Gyms in India than before ? Why masculine & feminine sexuality is so important?
- Who are you? [No philosophical answers]
- Why is the salary of the people who has power [Ex. Police, Military, Politicians] are always lower than the average Joe?
- Why we should ban large cars & overall cars as a product in the world?
Blogged with Flock
Labels: இந்தியா, உலகம், சமச்சீரின்மை, சமூகம், மக்கள், விவாதம்
Nov 4, 2007
[இந்தியா] சமச்சீரின்மை - ஒரு ட்ரைய்லர்
மேலோட்டமாக பரவலாக படித்ததில் இருக்கும் குற்றச்சாட்டு நாம் மொத்த விவாதத்தையும் IT Vs. Rest என்று பொருள் படுத்தி கொண்டிருக்கிறோமோ என்று தோன்றுகிறது. இந்த சமச்சீரின்மை என்பது அப்படி சுலபமாக கட்டமைக்கமுடியாது. இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. உலகமயமாக்கம், அமெரிக்க மயமாக்கம், சந்தை பொருளாதாரம், பயமுறுத்தும் போர்கள், மாநிலங்களுக்கிடையே நிலவும் போட்டிகள், இந்தியா என்கிற ஒரு டைனோசரின் கஷ்டக் காலம், எல்லை சண்டைகள், வல்லரசு ஆசைகள் என பல விஷயங்கள் இருக்கின்றன. நான் இதை ஒரு "எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம்" பாணியில் எழுத முடியாவிட்டாலும், ஏன் இவ்வளவு வெறித்தனமாக நாம் முன்னேறி கொண்டிருக்கிறோம். இது ஏன் 50 வருடங்களாக நடக்கவில்லை. சந்தையினை வெளிநாட்டு நிறுவனங்களுக்கும், சாப்ட்வேருக்கும் திறந்து விட்டதால்தான் ஜெயிக்கிறோமா என பல கேள்விகள் இருக்கின்றன. இதற்கெல்லாம் பதில் தெரியாமல், அல்லது இதன் பின்புலங்கள் புரியாமல் வெறுமனே ஊருக்கு இளைச்சவன் சாப்ட்வேர் ஆண்டி என்று தர்ம அடி அடிக்காமல் [ஆனாலும் பெரும்பான்மையான சாப்ட்வேர் இந்தியர்களுக்கு தங்களை தாண்டி ஒரு உலகமிருக்கிறது என்பதே தெரியாது அல்லது தெரிந்தாலும், அலட்சியம் செய்கிறார்கள்] கொஞ்சம் விரிவாய் அலசலாம் என்று இருக்கிறேன். நானும் பின்னூட்டம் போடுகிறேன் பேர்வழி என்று "நல்ல பதிவு" என்று attendance register-இல் கையெழுத்து போடுபவர்கள், தேன்கூடு, தமிழ்மணம் பக்கம் போய்விடுங்கள், உங்களுக்கான நிறைய பதிவுகள் அங்கே இருக்கின்றன :)
அதற்கு முன், கொஞ்சம் பரவலான இந்த சுட்டிகளை படித்து விடுதல் நலம். இந்த சுட்டிகளும், இதன் பின்னுள்ள விஷயங்களிலும்தான் நமது விவாதமே கட்டமைக்கப்படும் என்பதால் இதை முதலில் சொல்லிவிடுவது முக்கியம்.
- In God's Name - Economist
- On the legalisation or Not of Marijuana - Freaknomics
- Undebated Challenges - The Nation
- Question of Inequaltiy - Frontline
- Bush, Cheney, Rice and Kucinich on Iran - The Nation
- The secret war on cancer - Freakonomics
- A case for Arab Dignity - Dissident Voice
Blogged with Flock
Labels: அமெரிக்கா, இந்தியா, உலகம், சமச்சீரின்மை, தமிழ்ப்பதிவுகள், பொருளாதாரம், ப்ரீக்னாமிக்ஸ்
Subscribe to Posts [Atom]