Mar 24, 2009
கோவாலு ஏன் ஐபிஎல் பார்ப்பதில்லை?
கோவாலுவினை நேற்றைக்கு பார்த்த போதும், கவிஞனாக தான் இருந்தான். இந்த வாக்கியம் ரொம்ப முக்கியம். ஏனெனில், கடந்த மூன்று மாதங்களாக கோடம்பாக்கத்தில் கோவாலுவினை காணவில்லை. தமிழ்நாட்டின் தன்னிரகற்ற கவிஞன் காணாமல் போனது, கோடம்பாக்கத்தினை உலுக்கியது, லெமென் ப்ரதர்ஸின் உலுக்கலை விட அதிகம். கடந்து 3 மாதங்களாக ஏன் பெரியாட்களின் படங்கள் எதுவும் வரவில்லை - காரணம் கோவாலு பாட்டெழுதவில்லை. கோவாலு ஏன் காணாமல் போனான்? அதற்கு பின் என்ன நடந்தது என்பது தான் இவ்வறிப்பின் நோக்கம்.
கோவாலுவிற்கு தமிழ்நாட்டின் பெரும் கவிஞர் என்கிற பட்டம் மட்டும் போதவில்லை. கோவாலு யாரென்று தெரியாதவர்கள் முழுவிவரத்தையும் இங்கே படித்து தெரிந்து கொள்ளுங்கள். படித்தாலும் உங்களால் கோவாலுவினை புரிந்து கொள்ள முடியாமல் போனால், சீக்கிரமாய் H1B விசாவிற்கு அப்ளை செய்து அயல்நாடு போய் சேருங்கள், தமிழ்நாட்டில் உங்களால் கோவாலுவினை தெரியாமல் வாழ இயலாது.அப்போது தான் நண்பர் ஒருவர் வீட்டில் கிரிக்கெட் பார்த்தான். கோவாலு அதற்குமுன் பார்த்த கிரிக்கெட்டெல்லாம் பட்டோடி காலத்தியது. அந்த கிரிக்கெட் கலைப்படங்களையே ஸ்லோ மோஷனில் பார்ப்பதுபோல இருக்கும். ஆனால், ஐபிஎல் கிரிக்கெட் கோவாலுவினை அசத்தியது. கிரிக்கெட்டினை விட சியர்லீடர்ஸ் முதல் சில ஆட்டங்களில் “தாராளமாக” ஆடியது, கோவாலுவின் ரசனைக்கு உகந்ததாக இருந்தது. அதற்குள்ளாகவே கலாச்சார காவலர்கள் முரண்டு பண்ணியதால், முழு சட்டையும், ஸ்கர்ட்டும் அணிந்தபோது, கோவாலு சியர்லீடர்ஸின் சுதந்திரம் பறிபோனது பற்றி, பிப்ரவரி 29ம் தேதி மட்டுமே வரும் 16 பக்க ஆங்கில சிற்றிதழில் அட்டை தவிர்த்து 12 பக்கத்தில் “Cheerleaders Vs Poor Leaders" என்கிற பெயரில் ஒரு முழு நீளக் கட்டுரை எழுதியிருந்தான்.
ப்ரீத்தி ஜிந்தா வீரர்களை கட்டிப்பிடித்து உற்சாகப்படுத்தியபோது கோவாலுவிற்கு ஜில்லிட்டது. கிரிக்கெட் மயிராய் போனால் போச்சு, ஆனால் ப்ரீத்தி ஜிந்தா, ஷில்பா ஷெட்டி போன்ற பாலிவுட் தேவதைகளோடு எப்படியாவது தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளலாம் என்கிற எண்ணமே கோவாலுவிற்கு உற்சாகம் தந்தது.
இன்னமும் எத்தனை நாள் தான் தெலுகு, மலையாள தமிழ் கதாநாயகிகளை வர்ணித்து பாட்டெழுதிக் கொண்டு, ஆடியோ ரிலிஸ் விழாக்களிலும், பட்டிமன்றத்திலும் தலைக் காட்டிக் கொண்டிருப்பது. அது தவிர என்ன பேசினாலும், கோவாலுவின் நிஜமான புகழ் சென்னை 600 024 தாண்டி போகவில்லை. ஆனாலும், கோவாலு பேச்சினை கேட்டு காசு போட கரும்பு விற்ற காசோடு, மஞ்சள் பையினை கக்கத்தில் அடுக்கிக் கொண்டு, கோவாலுவையும் ஒரு யுகப்புருஷனாக நம்பும் ஒரு கூட்டமும் இருக்கதான் செய்தது. கோவாலு முடிவு செய்தான். கிரிக் இன்போ தளத்தினையும், கிரிக்கெட் நிர்வாணா தளத்தையும் தலைகீழாக நெட்ரூ பண்ணினான்.
இனி கவிதை விட்டு நாம் கிரிக்கெட்டினுள் புகுவோம் என்று யோசித்தான். முதல் T-20 உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு வெற்றி தேடிக் கொடுத்த ஸ்ரீசாந்த் கேட்ச் பிடித்தப் போது போட்டிருந்த ப்ரென்சி பனியன் சைஸ் வரைக்கும் கோவாலுவால் சொல்ல முடிந்தது. கேட்பவர்கள் அரண்டார்கள். படித்தவர்கள் மிரண்டார்கள். ராமசந்திர குஹா, திலிப் பரமேஸ்வரன் போன்றவர்கள் கோவாலு இருக்கும் வரை கிரிக்கெட் பற்றி பேசுவதில்லை என்று முடிவெடுத்தார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
கவிதைன்னா எதுகை மோனை, கிரிக்கெட்னா பேட்டிங், போலிங். சிக்ஸ் அடிக்கிறவன் சிங்கம். போர் அடிக்கிறவன் புலி. விக்கெட் எடுக்கிறவன் வீரன். டைவ் அடிக்கிறவன் தலைவன். தப்பு பண்றவனை தெய்வன் தண்டிக்காம போகலாம், ஆனா கண்டிப்பா தேர்டு அம்பயர் தண்டிப்பான். சினிமாவும் 21/2 மணி நேரம், அதை போலதான் ஐபிஎல்லும், 4 மணி நேரத்துல ஆக்ஷன், சென்டிமெண்ட், நட்பு, கோவம், பாசம்ன்னு லைவ்வா பார்க்கறோம். இப்படியெல்லாம் பேசி, சுற்றிலும் இருப்பவர்களை ஐபிஎல் கிரிக்கெட் சினிமாவை விட சூப்பரான விஷயம் என்று மொத்தமாக தானும், தன்னை சுற்றியுள்ளவர்களையும் நம்ப வைத்தான்.
விஜய் தான் சென்னை சூப்பர் கிங்ஸின் அம்பாசிடர் என்பதால், விஜய் வழியாக இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசனோடு பேசி, எப்படியாவது அடுத்தவன் காசினை சென்னை சூப்பர் கிங்ஸில் போட்டு, தானும், ஷில்பா ஷெட்டி மாதிரியான ஸ்டேக்ஹோல்டர் ஆகும் கனவும் கோவாலுவிற்கு இருந்தது. அன்றைக்கு பார்த்து வந்த கனவில் ஒரு பக்கம் ஷில்பா ஷெட்டி, இன்னொரு பக்கம் ப்ரீத்தி ஜிந்தா மற்றும் சியர்லீடர்ஸ் என ’மகளிர் மட்டும்’ நாசராய், காளை மாடு ஒண்ணு, கறவை மாடு பத்து என உளற ஆரம்பித்தான். பக்கத்தில் படுத்திருந்த அடிவருடிகள், அண்ணன் தூங்கும்போது கூட கவிதை பாடுகிறார் என குதூகலமடைந்தனர். கம்பன் வீட்டு கட்டுத்தறிதான் கவிபாடும், ஆனால், தலைவரின் கனவே கவி பாடுகிறதே, ஆக இனி முதல் தமிழ் கவி கோவாலுவாக தான் பூர்வஜென்ம வாசனைகளோடு இருக்க வேண்டும் என்று 2x2 கக்கூஸின் வெளியிலிருந்து தீர்மானம் போட்டார்கள். தீர்மானம் போட்ட கையோடு டீ குடிக்க போய் தீர்மானம் எழுதிய தாளில் பஜ்ஜி கசக்கினார்கள்.
இப்படியாக லலித் மோடிக்கு பிறகு தான் தான் ஐபிஎல்லின் ஏகபோக சக்ரவர்த்தியாக கண்ணாடியின் முன் நின்று உருவேற்றிக் கொண்டிருந்தபோது தான் அந்த செய்தி தாக்கியது. இந்தியாவில் தேர்தலும், ஐபிஎல்லும் ஒரே வேளையில் வருவதால், தேர்தலுக்காக ஐபிஎல்லின் தேதிகளை தள்ளி வைக்கச் சொன்னார்கள்.
கோவாலுவிற்கு எரிச்சலாய் வந்தது. என்ன சனநாயக நாடிது. ஒட்டையே 150ரூபாய்க்கும், ஒரு புல் ப்ளேட் பிரியாணிக்கும் விலைக்கு விற்கும் நாடு. டெம்ப்ளேட் போட்டுக் கொடுத்தது போல எல்லா கட்சிக்கும் ஒரே கட்சி அறிக்கை. அதன் தலைவர்கள் வாழ்நாளில் கிராமங்களுக்கு வரும்போதுதான் ஆளும் கட்சியாக இருந்தால் ரோடு போடுவதும், எதிர் கட்சியாக இருந்தால் பாட்டில் அடிப்பதுமாக இருப்பது தான் இந்திய தேசிய அரசியல் பண்பாடு. ஒட்டு போட்டாலும், போடா விட்டாலும் பெரியதாய் ஒன்றும் சந்தோஷம் நடு ரோட்டில் திறந்து கிடைக்கும் பாதாள சாக்கடைப்போல பொங்கி வரப் போவதில்லை. என்ன மயித்துக்கு ஒட்டு போடணும்? மக்கள் ஐபிஎல்லில் சந்தோசமடைகிறார்கள். ஐபிஎல் ஒரு சரணாகதி. ஐபிஎல் கடவுளுக்கு நிகரான விஷயம். ஐபிஎல்லினை தரிசிக்கும் பாக்கியம் பெற்றவர்களுக்கு சொர்க்கம் இறப்புக்கு பின்னில்லை, அவர்கள் வாழும் இடமே சொர்க்கமாக மாறி போகும்.
4 மணி நேரம் வாயில் அனகோண்டா போவது கூட தெரியாமல் டிவி பார்க்கிறார்கள். தப்பான அறிவிப்பாக தெரியும் தேர்டு அம்பய்ரினை வாங்கு வாங்கென்று வாங்குகிறார்கள். 22 அடி விஷயத்தினை எல்லாரிடத்திலும் அலசுகிறார்கள். காற்றில் கணக்கு போட்டு ரன் ரேட் சொல்கிறார்கள். எட்ஜ் எடுக்கணும் என்று ஜாகீர் கான் போடும்போதெல்லாம் ப்ரார்த்திக்கிறார்கள். சேவாகின் சுண்டுவிரல் வாஸ்து படி, நிற்கும் போது எங்கிருக்க வேண்டும் என்பது வரைக்கும் எல்லா பத்திரிக்கைகளும் நிபுணர்களிடம் ஆலோசித்து வெளியிடுகிறார்கள். இருக்கக்கூடிய கடன் பிரச்சனைகள், வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம், தீவிரவாதம் என எல்லாவற்றையும் மறந்து கண்களையே சாடிலைட்டாக மாறி பாலுக்கு பால் கமெண்ட்ரி கொடுக்கிறார்கள். இதுவல்லவா மார்க்ஸ், காந்தி கண்ட சமதர்ம சமூகம். பெரும்புள்ளிகளும், சேரி மக்களும் ஒரே விஷயத்தினை பேசுவது வரலாற்றில் எந்த காலத்தில் நடந்திருக்கிறது. ஐபிஎல் ஒரு மாபெரும் சமூக புரட்சி. அண்ணா கண்ட புரட்சி. அண்ணாவின் தம்பிகள் கண்ட புரட்சி. புரட்சி கலைஞரே கண்ட புரட்சி. புரட்சி. புரட்சி. மக்களின் சந்தோஷம்தான் எங்களுக்கு முக்கியம் என பிரகடனப் படுத்தும் எல்லா அரசியல் கட்சிகளுக்கும், ஏன் இது தெரியவில்லை?
இது தான் சந்தோஷம். இதைவிட சந்தோஷம் வேறென்ன. ஐபிஎல்லுக்கு வரும் விளம்பரமே இதற்கு சாட்சி. நூறு கோடி மக்கள், ஒன்றாக ஒரே விஷயத்தினை செய்து பார்த்திருக்கிறீர்களா ? எவ்வளவு முக்கியமான விஷயமிது. நூறு கோடி இந்தியர்கள், அதுவும் உலகமே தலையில் இடிந்து விழுந்தாலும் சச்சின் - சவுரவ் பிரச்சனையினை பேசி கொண்டிருப்பவர்கள். அவர்களின் சந்தோஷத்தில் மண் அள்ளி போடுதல், எவ்வளவு பெரிய அடக்குமுறை. ஹிட்லர் இந்தியாவினை ஆண்டிருந்தாலும் கூட, அவர் பினாமி ஸ்பான்சர் பண்ணியிருக்கும் குழு ஜெயிக்க வைத்து ஆட வைத்திருப்பாரே தவிர, மொத்த ஜபிஎல்லையும் கேன்சல் செய்திருக்க மாட்டார். என்ன அநியாயம். இந்திய அரசு ஹிட்லரை விட மோசமானதா? நாட்டின் தேர்தல் முக்கியமா? அல்லது நாட்டு மக்களின் சந்தோஷம் முக்கியமா? சந்தோஷமில்லாத, துயரத்திலும், நிராகரிப்பிலும் நிகழும் மக்கள் தற்கொலை படைக்கு ஈடானவர்கள் அல்லவா? இதை விட முக்கியம், சென்னையில் மாலையில் மேட்ச் நடந்தால், பார்த்தசாரதி பெருமாளே மாலை உற்சவத்தினை தள்ளி வைத்து விட்டு, சேப்பாக்கம் பக்கம் பார்த்தமாதிரி இருக்கிறார். கடவுளே பார்க்கும் ஒரு விஷயத்தினை என்னதான் பகுத்தறிவு அரசாய் இருந்தாலும், தடை செய்ய முடியுமா என்ன? வேறென்ன வேண்டும் அரசாங்கத்துக்கு. முட்டாள் அரசாங்கம்.
பொங்கோ பொங்கென்று ஆளில்லா வீட்டில், திறந்து விடப்பட்ட கேஸ் சிலிண்டர் போல் பொங்கினான் கோவாலு. வலைப்பதிவுகள், எஸ்.எம்.எஸ்கள், டிவிட்டர், கருத்தரங்கம், நாளிதழ்கள் என எல்லாவற்றிலும் எழுதோ எழுதென்று எழுதினான். இறுதியாக அரசு தன் பிரம்மாஸ்திரத்தினை எடுத்தது. காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் பாதுகாப்பு தரமுடியாது என்று சொன்னது. லலித் மோடி பாவம். சுவிசேஷ்கரின் பிரசகங்கள் போல அவரும் எத்தனை நாள் தான் இந்தியாவில் நடத்துவோம் என்று சொல்லிக் கொண்டிருக்க முடியும். கடைசியில் இந்தியாவிலிருந்து ஐபிஎல்லினை தூக்கியாகி விட்டது. அது இங்கிலாந்தோ, தென்னாப்பிரிக்காவோ, இல்லை வேறு எதாவது ஒரு நாட்டில்.
கோவாலு இந்த ஏமாற்றத்தினை தாங்க முடியாமல் தவிர்த்தான். ஒரு வாய்ப்பு கிடைத்திருந்தால், என்னவெல்லாம் செய்யலாம் என்று யோசித்து வைத்திருந்த அத்தனையும், மார்ச மாத கோன் ஐஸ் போல மொத்தமாக வெளியில் வழிந்து ஒடியது. ஒல்ட் மாங்கும், ஒல்ட் காஸ்க்கும் கோன் ஐஸ்ஸினை விட தாராளமாக கோவாலுவின் உள்ளே ஒடியது. இறுதியில் காலம் வென்றது. காலம் என்று சொன்னது லலித் மோடி ஹிந்துஸ்தான் டைம்ஸில் எழுதிய column. ஐபிஎல் சுதேசிகளுக்கு இல்லாமல் விதேசிகளுக்கு போனது. அன்றைக்கு எடுத்தான் பாரதி மாதிரி கோவாலுவும் ஒரு சபதம் எடுத்தான்.அது இனிமேல் சுதேசி விஷயங்களில் மட்டுமே தான் பங்கு கொள்வது என்பது.
பின் குத்தாத பின்குறிப்பு:
இன்றைக்கும் நீங்கள் கோவாலுவினை சில சமயங்களில் வடக்கு உஸ்மான் சாலை விவேக், வசந்த் & கோ வாசலில் பார்க்கலாம். நீங்கள் தவறாக நினைக்கக்கூடாது. இந்திய மக்களுக்கு என்னவெல்லாம் பொருட்கள் அயல்நாட்டு, உள்நாட்டு, உள்ளூர் நாட்டு, கைநாட்டு நிறுவனங்கள் தருகின்றன என்று பார்ப்பதற்காகவே விளம்பரங்களுக்கு இடையில் கொஞ்சமாய் ஐபிஎல்லையும் பார்க்கிறான் கோவாலு.
இனி கோவாலு பேசுவார். முன்னதாக 36ஆம் வட்டத்தின் சார்ப்பாக இந்த ஒரு கொய்யா பழத்தினையே, பழத்தோட்டமாக நினைத்து கோவாலுவிற்கு பரிசளிக்கிறோம்.
கோவாலுவிற்கு தமிழ்நாட்டின் பெரும் கவிஞர் என்கிற பட்டம் மட்டும் போதவில்லை. கோவாலு யாரென்று தெரியாதவர்கள் முழுவிவரத்தையும் இங்கே படித்து தெரிந்து கொள்ளுங்கள். படித்தாலும் உங்களால் கோவாலுவினை புரிந்து கொள்ள முடியாமல் போனால், சீக்கிரமாய் H1B விசாவிற்கு அப்ளை செய்து அயல்நாடு போய் சேருங்கள், தமிழ்நாட்டில் உங்களால் கோவாலுவினை தெரியாமல் வாழ இயலாது.அப்போது தான் நண்பர் ஒருவர் வீட்டில் கிரிக்கெட் பார்த்தான். கோவாலு அதற்குமுன் பார்த்த கிரிக்கெட்டெல்லாம் பட்டோடி காலத்தியது. அந்த கிரிக்கெட் கலைப்படங்களையே ஸ்லோ மோஷனில் பார்ப்பதுபோல இருக்கும். ஆனால், ஐபிஎல் கிரிக்கெட் கோவாலுவினை அசத்தியது. கிரிக்கெட்டினை விட சியர்லீடர்ஸ் முதல் சில ஆட்டங்களில் “தாராளமாக” ஆடியது, கோவாலுவின் ரசனைக்கு உகந்ததாக இருந்தது. அதற்குள்ளாகவே கலாச்சார காவலர்கள் முரண்டு பண்ணியதால், முழு சட்டையும், ஸ்கர்ட்டும் அணிந்தபோது, கோவாலு சியர்லீடர்ஸின் சுதந்திரம் பறிபோனது பற்றி, பிப்ரவரி 29ம் தேதி மட்டுமே வரும் 16 பக்க ஆங்கில சிற்றிதழில் அட்டை தவிர்த்து 12 பக்கத்தில் “Cheerleaders Vs Poor Leaders" என்கிற பெயரில் ஒரு முழு நீளக் கட்டுரை எழுதியிருந்தான்.
ப்ரீத்தி ஜிந்தா வீரர்களை கட்டிப்பிடித்து உற்சாகப்படுத்தியபோது கோவாலுவிற்கு ஜில்லிட்டது. கிரிக்கெட் மயிராய் போனால் போச்சு, ஆனால் ப்ரீத்தி ஜிந்தா, ஷில்பா ஷெட்டி போன்ற பாலிவுட் தேவதைகளோடு எப்படியாவது தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளலாம் என்கிற எண்ணமே கோவாலுவிற்கு உற்சாகம் தந்தது.
இன்னமும் எத்தனை நாள் தான் தெலுகு, மலையாள தமிழ் கதாநாயகிகளை வர்ணித்து பாட்டெழுதிக் கொண்டு, ஆடியோ ரிலிஸ் விழாக்களிலும், பட்டிமன்றத்திலும் தலைக் காட்டிக் கொண்டிருப்பது. அது தவிர என்ன பேசினாலும், கோவாலுவின் நிஜமான புகழ் சென்னை 600 024 தாண்டி போகவில்லை. ஆனாலும், கோவாலு பேச்சினை கேட்டு காசு போட கரும்பு விற்ற காசோடு, மஞ்சள் பையினை கக்கத்தில் அடுக்கிக் கொண்டு, கோவாலுவையும் ஒரு யுகப்புருஷனாக நம்பும் ஒரு கூட்டமும் இருக்கதான் செய்தது. கோவாலு முடிவு செய்தான். கிரிக் இன்போ தளத்தினையும், கிரிக்கெட் நிர்வாணா தளத்தையும் தலைகீழாக நெட்ரூ பண்ணினான்.
இனி கவிதை விட்டு நாம் கிரிக்கெட்டினுள் புகுவோம் என்று யோசித்தான். முதல் T-20 உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு வெற்றி தேடிக் கொடுத்த ஸ்ரீசாந்த் கேட்ச் பிடித்தப் போது போட்டிருந்த ப்ரென்சி பனியன் சைஸ் வரைக்கும் கோவாலுவால் சொல்ல முடிந்தது. கேட்பவர்கள் அரண்டார்கள். படித்தவர்கள் மிரண்டார்கள். ராமசந்திர குஹா, திலிப் பரமேஸ்வரன் போன்றவர்கள் கோவாலு இருக்கும் வரை கிரிக்கெட் பற்றி பேசுவதில்லை என்று முடிவெடுத்தார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
கவிதைன்னா எதுகை மோனை, கிரிக்கெட்னா பேட்டிங், போலிங். சிக்ஸ் அடிக்கிறவன் சிங்கம். போர் அடிக்கிறவன் புலி. விக்கெட் எடுக்கிறவன் வீரன். டைவ் அடிக்கிறவன் தலைவன். தப்பு பண்றவனை தெய்வன் தண்டிக்காம போகலாம், ஆனா கண்டிப்பா தேர்டு அம்பயர் தண்டிப்பான். சினிமாவும் 21/2 மணி நேரம், அதை போலதான் ஐபிஎல்லும், 4 மணி நேரத்துல ஆக்ஷன், சென்டிமெண்ட், நட்பு, கோவம், பாசம்ன்னு லைவ்வா பார்க்கறோம். இப்படியெல்லாம் பேசி, சுற்றிலும் இருப்பவர்களை ஐபிஎல் கிரிக்கெட் சினிமாவை விட சூப்பரான விஷயம் என்று மொத்தமாக தானும், தன்னை சுற்றியுள்ளவர்களையும் நம்ப வைத்தான்.
விஜய் தான் சென்னை சூப்பர் கிங்ஸின் அம்பாசிடர் என்பதால், விஜய் வழியாக இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசனோடு பேசி, எப்படியாவது அடுத்தவன் காசினை சென்னை சூப்பர் கிங்ஸில் போட்டு, தானும், ஷில்பா ஷெட்டி மாதிரியான ஸ்டேக்ஹோல்டர் ஆகும் கனவும் கோவாலுவிற்கு இருந்தது. அன்றைக்கு பார்த்து வந்த கனவில் ஒரு பக்கம் ஷில்பா ஷெட்டி, இன்னொரு பக்கம் ப்ரீத்தி ஜிந்தா மற்றும் சியர்லீடர்ஸ் என ’மகளிர் மட்டும்’ நாசராய், காளை மாடு ஒண்ணு, கறவை மாடு பத்து என உளற ஆரம்பித்தான். பக்கத்தில் படுத்திருந்த அடிவருடிகள், அண்ணன் தூங்கும்போது கூட கவிதை பாடுகிறார் என குதூகலமடைந்தனர். கம்பன் வீட்டு கட்டுத்தறிதான் கவிபாடும், ஆனால், தலைவரின் கனவே கவி பாடுகிறதே, ஆக இனி முதல் தமிழ் கவி கோவாலுவாக தான் பூர்வஜென்ம வாசனைகளோடு இருக்க வேண்டும் என்று 2x2 கக்கூஸின் வெளியிலிருந்து தீர்மானம் போட்டார்கள். தீர்மானம் போட்ட கையோடு டீ குடிக்க போய் தீர்மானம் எழுதிய தாளில் பஜ்ஜி கசக்கினார்கள்.
இப்படியாக லலித் மோடிக்கு பிறகு தான் தான் ஐபிஎல்லின் ஏகபோக சக்ரவர்த்தியாக கண்ணாடியின் முன் நின்று உருவேற்றிக் கொண்டிருந்தபோது தான் அந்த செய்தி தாக்கியது. இந்தியாவில் தேர்தலும், ஐபிஎல்லும் ஒரே வேளையில் வருவதால், தேர்தலுக்காக ஐபிஎல்லின் தேதிகளை தள்ளி வைக்கச் சொன்னார்கள்.
கோவாலுவிற்கு எரிச்சலாய் வந்தது. என்ன சனநாயக நாடிது. ஒட்டையே 150ரூபாய்க்கும், ஒரு புல் ப்ளேட் பிரியாணிக்கும் விலைக்கு விற்கும் நாடு. டெம்ப்ளேட் போட்டுக் கொடுத்தது போல எல்லா கட்சிக்கும் ஒரே கட்சி அறிக்கை. அதன் தலைவர்கள் வாழ்நாளில் கிராமங்களுக்கு வரும்போதுதான் ஆளும் கட்சியாக இருந்தால் ரோடு போடுவதும், எதிர் கட்சியாக இருந்தால் பாட்டில் அடிப்பதுமாக இருப்பது தான் இந்திய தேசிய அரசியல் பண்பாடு. ஒட்டு போட்டாலும், போடா விட்டாலும் பெரியதாய் ஒன்றும் சந்தோஷம் நடு ரோட்டில் திறந்து கிடைக்கும் பாதாள சாக்கடைப்போல பொங்கி வரப் போவதில்லை. என்ன மயித்துக்கு ஒட்டு போடணும்? மக்கள் ஐபிஎல்லில் சந்தோசமடைகிறார்கள். ஐபிஎல் ஒரு சரணாகதி. ஐபிஎல் கடவுளுக்கு நிகரான விஷயம். ஐபிஎல்லினை தரிசிக்கும் பாக்கியம் பெற்றவர்களுக்கு சொர்க்கம் இறப்புக்கு பின்னில்லை, அவர்கள் வாழும் இடமே சொர்க்கமாக மாறி போகும்.
4 மணி நேரம் வாயில் அனகோண்டா போவது கூட தெரியாமல் டிவி பார்க்கிறார்கள். தப்பான அறிவிப்பாக தெரியும் தேர்டு அம்பய்ரினை வாங்கு வாங்கென்று வாங்குகிறார்கள். 22 அடி விஷயத்தினை எல்லாரிடத்திலும் அலசுகிறார்கள். காற்றில் கணக்கு போட்டு ரன் ரேட் சொல்கிறார்கள். எட்ஜ் எடுக்கணும் என்று ஜாகீர் கான் போடும்போதெல்லாம் ப்ரார்த்திக்கிறார்கள். சேவாகின் சுண்டுவிரல் வாஸ்து படி, நிற்கும் போது எங்கிருக்க வேண்டும் என்பது வரைக்கும் எல்லா பத்திரிக்கைகளும் நிபுணர்களிடம் ஆலோசித்து வெளியிடுகிறார்கள். இருக்கக்கூடிய கடன் பிரச்சனைகள், வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம், தீவிரவாதம் என எல்லாவற்றையும் மறந்து கண்களையே சாடிலைட்டாக மாறி பாலுக்கு பால் கமெண்ட்ரி கொடுக்கிறார்கள். இதுவல்லவா மார்க்ஸ், காந்தி கண்ட சமதர்ம சமூகம். பெரும்புள்ளிகளும், சேரி மக்களும் ஒரே விஷயத்தினை பேசுவது வரலாற்றில் எந்த காலத்தில் நடந்திருக்கிறது. ஐபிஎல் ஒரு மாபெரும் சமூக புரட்சி. அண்ணா கண்ட புரட்சி. அண்ணாவின் தம்பிகள் கண்ட புரட்சி. புரட்சி கலைஞரே கண்ட புரட்சி. புரட்சி. புரட்சி. மக்களின் சந்தோஷம்தான் எங்களுக்கு முக்கியம் என பிரகடனப் படுத்தும் எல்லா அரசியல் கட்சிகளுக்கும், ஏன் இது தெரியவில்லை?
இது தான் சந்தோஷம். இதைவிட சந்தோஷம் வேறென்ன. ஐபிஎல்லுக்கு வரும் விளம்பரமே இதற்கு சாட்சி. நூறு கோடி மக்கள், ஒன்றாக ஒரே விஷயத்தினை செய்து பார்த்திருக்கிறீர்களா ? எவ்வளவு முக்கியமான விஷயமிது. நூறு கோடி இந்தியர்கள், அதுவும் உலகமே தலையில் இடிந்து விழுந்தாலும் சச்சின் - சவுரவ் பிரச்சனையினை பேசி கொண்டிருப்பவர்கள். அவர்களின் சந்தோஷத்தில் மண் அள்ளி போடுதல், எவ்வளவு பெரிய அடக்குமுறை. ஹிட்லர் இந்தியாவினை ஆண்டிருந்தாலும் கூட, அவர் பினாமி ஸ்பான்சர் பண்ணியிருக்கும் குழு ஜெயிக்க வைத்து ஆட வைத்திருப்பாரே தவிர, மொத்த ஜபிஎல்லையும் கேன்சல் செய்திருக்க மாட்டார். என்ன அநியாயம். இந்திய அரசு ஹிட்லரை விட மோசமானதா? நாட்டின் தேர்தல் முக்கியமா? அல்லது நாட்டு மக்களின் சந்தோஷம் முக்கியமா? சந்தோஷமில்லாத, துயரத்திலும், நிராகரிப்பிலும் நிகழும் மக்கள் தற்கொலை படைக்கு ஈடானவர்கள் அல்லவா? இதை விட முக்கியம், சென்னையில் மாலையில் மேட்ச் நடந்தால், பார்த்தசாரதி பெருமாளே மாலை உற்சவத்தினை தள்ளி வைத்து விட்டு, சேப்பாக்கம் பக்கம் பார்த்தமாதிரி இருக்கிறார். கடவுளே பார்க்கும் ஒரு விஷயத்தினை என்னதான் பகுத்தறிவு அரசாய் இருந்தாலும், தடை செய்ய முடியுமா என்ன? வேறென்ன வேண்டும் அரசாங்கத்துக்கு. முட்டாள் அரசாங்கம்.
பொங்கோ பொங்கென்று ஆளில்லா வீட்டில், திறந்து விடப்பட்ட கேஸ் சிலிண்டர் போல் பொங்கினான் கோவாலு. வலைப்பதிவுகள், எஸ்.எம்.எஸ்கள், டிவிட்டர், கருத்தரங்கம், நாளிதழ்கள் என எல்லாவற்றிலும் எழுதோ எழுதென்று எழுதினான். இறுதியாக அரசு தன் பிரம்மாஸ்திரத்தினை எடுத்தது. காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் பாதுகாப்பு தரமுடியாது என்று சொன்னது. லலித் மோடி பாவம். சுவிசேஷ்கரின் பிரசகங்கள் போல அவரும் எத்தனை நாள் தான் இந்தியாவில் நடத்துவோம் என்று சொல்லிக் கொண்டிருக்க முடியும். கடைசியில் இந்தியாவிலிருந்து ஐபிஎல்லினை தூக்கியாகி விட்டது. அது இங்கிலாந்தோ, தென்னாப்பிரிக்காவோ, இல்லை வேறு எதாவது ஒரு நாட்டில்.
கோவாலு இந்த ஏமாற்றத்தினை தாங்க முடியாமல் தவிர்த்தான். ஒரு வாய்ப்பு கிடைத்திருந்தால், என்னவெல்லாம் செய்யலாம் என்று யோசித்து வைத்திருந்த அத்தனையும், மார்ச மாத கோன் ஐஸ் போல மொத்தமாக வெளியில் வழிந்து ஒடியது. ஒல்ட் மாங்கும், ஒல்ட் காஸ்க்கும் கோன் ஐஸ்ஸினை விட தாராளமாக கோவாலுவின் உள்ளே ஒடியது. இறுதியில் காலம் வென்றது. காலம் என்று சொன்னது லலித் மோடி ஹிந்துஸ்தான் டைம்ஸில் எழுதிய column. ஐபிஎல் சுதேசிகளுக்கு இல்லாமல் விதேசிகளுக்கு போனது. அன்றைக்கு எடுத்தான் பாரதி மாதிரி கோவாலுவும் ஒரு சபதம் எடுத்தான்.அது இனிமேல் சுதேசி விஷயங்களில் மட்டுமே தான் பங்கு கொள்வது என்பது.
பின் குத்தாத பின்குறிப்பு:
இன்றைக்கும் நீங்கள் கோவாலுவினை சில சமயங்களில் வடக்கு உஸ்மான் சாலை விவேக், வசந்த் & கோ வாசலில் பார்க்கலாம். நீங்கள் தவறாக நினைக்கக்கூடாது. இந்திய மக்களுக்கு என்னவெல்லாம் பொருட்கள் அயல்நாட்டு, உள்நாட்டு, உள்ளூர் நாட்டு, கைநாட்டு நிறுவனங்கள் தருகின்றன என்று பார்ப்பதற்காகவே விளம்பரங்களுக்கு இடையில் கொஞ்சமாய் ஐபிஎல்லையும் பார்க்கிறான் கோவாலு.
Labels: ஐபிஎல், கோவாலு, சமூகம், நையாண்டி
Mar 23, 2009
ஜீன்ஸ், பளாக்பெர்ரி & 5 இலட்சம் பங்குகள்
நிஷிகந்தா முகர்ஜி.
5 அடி. 3 அங்குலம். நேஷனல் லா காலேஜில் கார்ப்பரேட் லா முடித்து 6 வருடங்களாகிறது. மையிட்ட கண்கள். கொஞ்சம் சப்பையான மூக்கு. பார்மல் சட்டையில் மேலிரண்டு பட்டன்கள் திறந்திருந்தன. கொஞ்சம் தேய்ந்து போன லெவிஸ் ஜீன்ஸ். வலது கையில் குட்டியாய் சிலுவை போட்ட ஒரு ப்ரெஸ்லெட். குறைவான முடி. அளவான புன்னகை.நிஷிகந்தா என்று பெயர் வைத்துக் கொண்டு கேட்டால் கிறிஸ்டியன் என்று சொல்வாள். பண ராட்சஸி. அப்பா சுப்ரீம் கோர்ட் வழக்குரைஞர். காசுக்கும், கேளிக்கைக்கும் பஞ்சமில்லாத குடும்பம். 6 மாதத்துக்கு ஒரு முறை ஸுவிஸில் விடுமுறை கொண்டாடும் பெருங்குடும்பம். தம்பி மராத்தி தியேட்டரில் தாடியும், அழுக்கு ஜீன்ஸுமாக கம்யுனிஸம் பேசுவான், பியட் பேபியா வைத்துக் கொண்டு.
நேரம்: 1.30 பிற்பகல்
சிவாஜி பார்க் எதிரே இருக்கிற பாரிஸ்தாவில்,ஒரு கையில் கேஃபே லேட்டேயும், இன்னொரு கையில் ப்ளாக்பெர்ரியுமாக இருந்தபோது தான் பார்த்தேன்.பக்கத்தில் போன போது கேட்ட முதல் வாக்கியம்
Fuck them straight. I need to close that damn fkin thing by 2.30, before the markets get closed
என்னவென்று தெரிந்து கொள்வதற்கு முன், என்னைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
நான் விவேக். 5 அடி 7 அங்குலம். வாகான உடல்வாகு. மும்பை பாஷையில் மதராஸி. வேலை நிதி சம்பந்தப்பட்டது. ஊழ்ல்கள், பேரங்கள், கறுப்பு பணம் என்பது மாதிரியான ரொம்ப உசத்தியான ஆட்டம் நான் ஆடுவது. தெஹல்கா மாதிரியான பத்திரிக்கைகள் என்னை பவர் ப்ரோக்கர்கள் என்று அழைக்கும். சர்ச் கேட்டில் ஆரம்பித்தால் இருக்கும் எல்லா வங்கி எம்.டி களும், கார்ப்பரேட் உலகத்தின் எல்லா “சி” தலைகளும் என்னை பார்க்க அனுமதி வாங்க வேண்டும்.மொத்தத்தில் எவ்விதமான கெட்ட பழக்கங்களும் எனக்கு இல்லை என்கிற பொய்யினை தொடர்ச்சியாக சொல்லும் கெட்ட பழக்கத்தை விட வேறெதுவுமில்லை. சிவாஜி பார்க்கில் சச்சின் தெண்டுல்கர் விளையாடி புகழ் பெற்ற பிறகு, சச்சினோடு விளையாட கொடுத்து வைக்கவில்லையானாலும், பார்த்து விட்டாவது வரலாம் என்று போன போது தான் நிஷிகந்தாவினை பார்த்தேன். பார்த்தேன் என்பது பொய். ஒரு நிமிடத்தில் மானசீகமாக அவளுடைய அப்பாவின் அனுமதியினை வாங்க கனவில் போய்விட்டு வந்தேன் என்பது தான் உண்மை.
நேரம்: 1.50 பிற்பகல்
”ஹாய் விவேக்”
“ஹாய் நிஷி. கியா சல் ரஹா ஹே”
“முட்டாள். நீ இந்தியில் பேசாதே, எனக்கு இந்தி மறந்துவிடும். என்ன காரியம்”
மேற் சொன்ன மூன்று வாக்கியங்கள் முடிப்பதற்கு எங்களுக்கு 20 நிமிடங்கள் ஆகியது. இருவரும் அவரவர் ப்ளாக்பெர்ரியில் மாறி மாறி பேசிக் கொண்டிருந்தோம்.
நேரம்: 2.10 பிற்பகல்
“நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய் நிஷி”
“ஹைதராபாத் கட்டுமான நிறுவனம். 3 லட்சம் பங்குகள். ப்ரேவேட் ப்ளேஸ்மெண்டு. டெல்லி ஆள். காலையிலிருந்து காசினை வைத்துக் கொண்டு கழுத்தறுக்கிறான். பிரபாதேவியில் ஹோட்டலில் சூட்கேஸ் நிறைய பணம். ரெட்டி தொய்ந்து போன தன் நிறுவனத்தின் பங்கினை தராமல் அடம் பிடிக்கிறான். நிப்டியில் 37 போகிறது. டெல்லிகாரன் 30ல் நிற்கிறான். ரெட்டி 34ல் இருந்து இறங்காமல் அடம்பிடிக்கிறான். அங்கே என்ன விசேஷம்”
“விசேஷம் தான். ஹைதராபாத்? கட்டுமான நிறுவனம் ? சத்யம் பிரச்சனைக்கு பிறகு ஹைதராபாத் என்று யார் சொன்னாலும் காத தூரம் ஒடலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். ஜஸ்ட் ஜோக்கிங். 33 முடியுமா. என்னிடத்தில் ஆள் இருக்கிறான். என்ன அப் ஸ்விங் செய்ய முடியும்”
“33 ரெட்டி வருவான். அப் ஸ்விங் 25% ஒரு வாரம்”
“33 தருகிறேன். 50% அப் ஸ்விங். இரண்டு வாரம். 5 லட்சம் பங்குகள். கேட்டு சொல்”
”ரெட்டி 34லிலேயே நிற்கிறான். என்ன செய்யலாம்”
“அவன் தம்பி மனைவியோடு மத்தியானம் வீட்டில் இருப்பதை நிறுத்த சொல். 33 என் பார்ட்டி ரெடி. எல்லாம் விவசாயிகளின் கடன் மானியத்தில் சம்பாதித்த பணம். தொடர்ச்சியாக வரும். 33லிருந்து ஒரே மாதத்தில் 70வினை தொட வைக்கிறேன். அர்ஜூன் வர்ஷித்தோடு பேசுகிறேன். பயல் காசில் குறி. 5% ஆப் மார்க்கெட் கொடுத்தால் போதும். சந்தையில் விளையாடுவான். மார்ச் முடியும் போது மார்க்கெட் கேப்பிடலைசேஷனை 6 மாத முந்தைய நிலையில் கொண்டு வந்துவிடுவான். நமக்கு 2% என்ன சொல்கிறாய். ரெட்டியோடு தெளிவாக பேசு.”
நேரம்: 2.40 பிற்பகல்
“விவேக். 33 முடித்தாகிவிட்டது. 5 இலட்சம் பங்குகள். காசு எங்கே”
“அந்தேரி கிழக்கில், ஒரு பி.பி.ஒவில் டேட்டா சென்டர்களின் நடுவில் இருக்கிறது. அரசாங்கம் அச்சடித்த அழுக்கு 500 ரூபாய் தாள்கள்”
“எப்போது கிடைக்கும் விவேக். மணி என்ன இப்போது ? மணி 2.45, மொத்தத்தையும் லோக்கன்வாலாவில் இருக்கும் ரெப்ரியா மாலில் கொடுக்க முடியுமா, அடுத்த கால் மணி நேரத்தில்”
“இரு நிஷி கேட்டு சொல்கிறேன்”
நேரம்: 2.50 பிற்பகல்
“நிஷி, நீ சொன்ன இடத்துக்கு பணம் அனுப்பியாகிவிட்டது. என்னுடைய ஆள் உன்னுடைய பார்ட்டியின் இடத்தில் இருக்கிறான். ரெப்ரியா மால். 3வது மாடி.”
”சரி. உனக்கு பிடித்த லெமன் ஹனி டீ குடி. பாத்ரூம் போய்விட்டு வருகிறேன்"
நேரம்: 3.05 பிற்பகல்
என்னுடைய செல்பேசியில் அந்த மெஸேஜ் வந்திருந்தது.
நேரம்: 3.10 பிற்பகல்
”Done Vivek. Everything is pakka. Money is transferred to your Standard Chartered Account. Check Now"
”உன்னை விட வோடாபோனும், ஸ்டான்சார்ட்டும் பாஸ்ட். ஐந்து நிமிடங்களுக்கு முன்னாடியே வந்துவிட்டது.”
”வேறு எவ்வளவு வைத்திருக்கிறான் உன்னாள். அர்ஜூனோடு பேசினேன், இரவு ஐநாக்ஸில் படம் போலாமா என்று கேட்டான். சரியான வழிசல் பார்ட்டி. நீ ஏன் வழிவதில்லை விவேக் ? நான் பார்த்த ஆண்களில் ஐ லவ் யூ சொல்லாத, நைட் ப்ளாட் காலியாக இருக்கிறது என்று கூப்பிடாத சில ஆண்களில் நீயும் ஒருவன். ஒரு வேளை நீ கே-வா”
“டியர். நான் ஸ்ட்ரெய்ட் தான். ஆனால் வேலையையும், வேட்கையையும் வெவ்வேறு இடத்தில் வைத்திருப்பவன். உன்னோடு படுத்தால், புணர்வின் போது கூட எண்கள் கண்களில் வந்து போகும். அதற்கு சென்னை தான் சரி. அத்தை மகள், மாமன் மகள் என ஒரு கூட்டமிருக்கிறது. அங்கே பார்த்துக் கொள்கிறேன். அர்ஜுனிடத்தில் ஒரு ப்ரெஞ்ச் கிஸ்ஸோடு வேலை முடிந்துவிடும். என்ன ஒரே பிரச்சனை. வழிசலாக எஸ்.எம்.எஸ் அனுப்புவான். நாதாரி”
“குட். உன்னுடைய ஒரு பர்சென்ட் பிடித்தமெல்லாம் போக 1,47,350 சரியா”
“நாட் பேட். லா படித்துவிட்டு சரியாக கணக்கு போடுகிறாய்.”
நேரம்: 3.40 பிற்பகல்
“ஆனாலும், அநியாயத்துக்கு ஒரு காபியை 70ரூ சொல்கிறார்கள். இந்தியாவில் காஸ்ட் ஆப் லிவிங் அதிகமாகிவிட்டது. சரி நான் கிளம்புகிறேன். ஒரு தென்னிந்திய எம்.பி 3000 கோடி ரூபாய் வைத்திருக்கிறான். என்ன செய்யலாம்”
“விவேக். இப்போது சந்தையில் இறக்கினால் சந்தேகம் வந்துவிடும். வேண்டுமானால் கேஷாக கொடுக்க சொல், மஹாராஷ்டிராவின் ஆரஞ்சு சேனைக்கு தேவைப்படுகிறது. ரிடர்ன், ஜெயித்தால் ரிலையன்ஸில் பேசி மெட்ரோவின் ஒரு பகுதியினை எம்.பியின் கம்பெனிக்கு தர சொல்கிறேன். தோற்றால், போட்ட காசு 2% வட்டியோடு திரும்பி வந்துவிடும். என்ன சொல்கிறாய்”
“கேட்டு சொல்கிறேன்”
“பை”
“பை”
தேவையான பின்குறிப்பு:
A stock market, or equity market, is a private or public market for the trading of company stock and derivatives at an agreed price; these are securities listed on a stock exchange as well as those only traded privately. The size of the world stock market is estimated at about $36.6 trillion US at the beginning of October 2008. Free Market Economy allows buyers and sellers of the stock to determine the value more perfectly and arriving at fair market value of the corporation.
5 அடி. 3 அங்குலம். நேஷனல் லா காலேஜில் கார்ப்பரேட் லா முடித்து 6 வருடங்களாகிறது. மையிட்ட கண்கள். கொஞ்சம் சப்பையான மூக்கு. பார்மல் சட்டையில் மேலிரண்டு பட்டன்கள் திறந்திருந்தன. கொஞ்சம் தேய்ந்து போன லெவிஸ் ஜீன்ஸ். வலது கையில் குட்டியாய் சிலுவை போட்ட ஒரு ப்ரெஸ்லெட். குறைவான முடி. அளவான புன்னகை.நிஷிகந்தா என்று பெயர் வைத்துக் கொண்டு கேட்டால் கிறிஸ்டியன் என்று சொல்வாள். பண ராட்சஸி. அப்பா சுப்ரீம் கோர்ட் வழக்குரைஞர். காசுக்கும், கேளிக்கைக்கும் பஞ்சமில்லாத குடும்பம். 6 மாதத்துக்கு ஒரு முறை ஸுவிஸில் விடுமுறை கொண்டாடும் பெருங்குடும்பம். தம்பி மராத்தி தியேட்டரில் தாடியும், அழுக்கு ஜீன்ஸுமாக கம்யுனிஸம் பேசுவான், பியட் பேபியா வைத்துக் கொண்டு.
நேரம்: 1.30 பிற்பகல்
சிவாஜி பார்க் எதிரே இருக்கிற பாரிஸ்தாவில்,ஒரு கையில் கேஃபே லேட்டேயும், இன்னொரு கையில் ப்ளாக்பெர்ரியுமாக இருந்தபோது தான் பார்த்தேன்.பக்கத்தில் போன போது கேட்ட முதல் வாக்கியம்
Fuck them straight. I need to close that damn fkin thing by 2.30, before the markets get closed
என்னவென்று தெரிந்து கொள்வதற்கு முன், என்னைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
நான் விவேக். 5 அடி 7 அங்குலம். வாகான உடல்வாகு. மும்பை பாஷையில் மதராஸி. வேலை நிதி சம்பந்தப்பட்டது. ஊழ்ல்கள், பேரங்கள், கறுப்பு பணம் என்பது மாதிரியான ரொம்ப உசத்தியான ஆட்டம் நான் ஆடுவது. தெஹல்கா மாதிரியான பத்திரிக்கைகள் என்னை பவர் ப்ரோக்கர்கள் என்று அழைக்கும். சர்ச் கேட்டில் ஆரம்பித்தால் இருக்கும் எல்லா வங்கி எம்.டி களும், கார்ப்பரேட் உலகத்தின் எல்லா “சி” தலைகளும் என்னை பார்க்க அனுமதி வாங்க வேண்டும்.மொத்தத்தில் எவ்விதமான கெட்ட பழக்கங்களும் எனக்கு இல்லை என்கிற பொய்யினை தொடர்ச்சியாக சொல்லும் கெட்ட பழக்கத்தை விட வேறெதுவுமில்லை. சிவாஜி பார்க்கில் சச்சின் தெண்டுல்கர் விளையாடி புகழ் பெற்ற பிறகு, சச்சினோடு விளையாட கொடுத்து வைக்கவில்லையானாலும், பார்த்து விட்டாவது வரலாம் என்று போன போது தான் நிஷிகந்தாவினை பார்த்தேன். பார்த்தேன் என்பது பொய். ஒரு நிமிடத்தில் மானசீகமாக அவளுடைய அப்பாவின் அனுமதியினை வாங்க கனவில் போய்விட்டு வந்தேன் என்பது தான் உண்மை.
நேரம்: 1.50 பிற்பகல்
”ஹாய் விவேக்”
“ஹாய் நிஷி. கியா சல் ரஹா ஹே”
“முட்டாள். நீ இந்தியில் பேசாதே, எனக்கு இந்தி மறந்துவிடும். என்ன காரியம்”
மேற் சொன்ன மூன்று வாக்கியங்கள் முடிப்பதற்கு எங்களுக்கு 20 நிமிடங்கள் ஆகியது. இருவரும் அவரவர் ப்ளாக்பெர்ரியில் மாறி மாறி பேசிக் கொண்டிருந்தோம்.
நேரம்: 2.10 பிற்பகல்
“நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய் நிஷி”
“ஹைதராபாத் கட்டுமான நிறுவனம். 3 லட்சம் பங்குகள். ப்ரேவேட் ப்ளேஸ்மெண்டு. டெல்லி ஆள். காலையிலிருந்து காசினை வைத்துக் கொண்டு கழுத்தறுக்கிறான். பிரபாதேவியில் ஹோட்டலில் சூட்கேஸ் நிறைய பணம். ரெட்டி தொய்ந்து போன தன் நிறுவனத்தின் பங்கினை தராமல் அடம் பிடிக்கிறான். நிப்டியில் 37 போகிறது. டெல்லிகாரன் 30ல் நிற்கிறான். ரெட்டி 34ல் இருந்து இறங்காமல் அடம்பிடிக்கிறான். அங்கே என்ன விசேஷம்”
“விசேஷம் தான். ஹைதராபாத்? கட்டுமான நிறுவனம் ? சத்யம் பிரச்சனைக்கு பிறகு ஹைதராபாத் என்று யார் சொன்னாலும் காத தூரம் ஒடலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். ஜஸ்ட் ஜோக்கிங். 33 முடியுமா. என்னிடத்தில் ஆள் இருக்கிறான். என்ன அப் ஸ்விங் செய்ய முடியும்”
“33 ரெட்டி வருவான். அப் ஸ்விங் 25% ஒரு வாரம்”
“33 தருகிறேன். 50% அப் ஸ்விங். இரண்டு வாரம். 5 லட்சம் பங்குகள். கேட்டு சொல்”
”ரெட்டி 34லிலேயே நிற்கிறான். என்ன செய்யலாம்”
“அவன் தம்பி மனைவியோடு மத்தியானம் வீட்டில் இருப்பதை நிறுத்த சொல். 33 என் பார்ட்டி ரெடி. எல்லாம் விவசாயிகளின் கடன் மானியத்தில் சம்பாதித்த பணம். தொடர்ச்சியாக வரும். 33லிருந்து ஒரே மாதத்தில் 70வினை தொட வைக்கிறேன். அர்ஜூன் வர்ஷித்தோடு பேசுகிறேன். பயல் காசில் குறி. 5% ஆப் மார்க்கெட் கொடுத்தால் போதும். சந்தையில் விளையாடுவான். மார்ச் முடியும் போது மார்க்கெட் கேப்பிடலைசேஷனை 6 மாத முந்தைய நிலையில் கொண்டு வந்துவிடுவான். நமக்கு 2% என்ன சொல்கிறாய். ரெட்டியோடு தெளிவாக பேசு.”
நேரம்: 2.40 பிற்பகல்
“விவேக். 33 முடித்தாகிவிட்டது. 5 இலட்சம் பங்குகள். காசு எங்கே”
“அந்தேரி கிழக்கில், ஒரு பி.பி.ஒவில் டேட்டா சென்டர்களின் நடுவில் இருக்கிறது. அரசாங்கம் அச்சடித்த அழுக்கு 500 ரூபாய் தாள்கள்”
“எப்போது கிடைக்கும் விவேக். மணி என்ன இப்போது ? மணி 2.45, மொத்தத்தையும் லோக்கன்வாலாவில் இருக்கும் ரெப்ரியா மாலில் கொடுக்க முடியுமா, அடுத்த கால் மணி நேரத்தில்”
“இரு நிஷி கேட்டு சொல்கிறேன்”
நேரம்: 2.50 பிற்பகல்
“நிஷி, நீ சொன்ன இடத்துக்கு பணம் அனுப்பியாகிவிட்டது. என்னுடைய ஆள் உன்னுடைய பார்ட்டியின் இடத்தில் இருக்கிறான். ரெப்ரியா மால். 3வது மாடி.”
”சரி. உனக்கு பிடித்த லெமன் ஹனி டீ குடி. பாத்ரூம் போய்விட்டு வருகிறேன்"
நேரம்: 3.05 பிற்பகல்
என்னுடைய செல்பேசியில் அந்த மெஸேஜ் வந்திருந்தது.
நேரம்: 3.10 பிற்பகல்
”Done Vivek. Everything is pakka. Money is transferred to your Standard Chartered Account. Check Now"
”உன்னை விட வோடாபோனும், ஸ்டான்சார்ட்டும் பாஸ்ட். ஐந்து நிமிடங்களுக்கு முன்னாடியே வந்துவிட்டது.”
”வேறு எவ்வளவு வைத்திருக்கிறான் உன்னாள். அர்ஜூனோடு பேசினேன், இரவு ஐநாக்ஸில் படம் போலாமா என்று கேட்டான். சரியான வழிசல் பார்ட்டி. நீ ஏன் வழிவதில்லை விவேக் ? நான் பார்த்த ஆண்களில் ஐ லவ் யூ சொல்லாத, நைட் ப்ளாட் காலியாக இருக்கிறது என்று கூப்பிடாத சில ஆண்களில் நீயும் ஒருவன். ஒரு வேளை நீ கே-வா”
“டியர். நான் ஸ்ட்ரெய்ட் தான். ஆனால் வேலையையும், வேட்கையையும் வெவ்வேறு இடத்தில் வைத்திருப்பவன். உன்னோடு படுத்தால், புணர்வின் போது கூட எண்கள் கண்களில் வந்து போகும். அதற்கு சென்னை தான் சரி. அத்தை மகள், மாமன் மகள் என ஒரு கூட்டமிருக்கிறது. அங்கே பார்த்துக் கொள்கிறேன். அர்ஜுனிடத்தில் ஒரு ப்ரெஞ்ச் கிஸ்ஸோடு வேலை முடிந்துவிடும். என்ன ஒரே பிரச்சனை. வழிசலாக எஸ்.எம்.எஸ் அனுப்புவான். நாதாரி”
“குட். உன்னுடைய ஒரு பர்சென்ட் பிடித்தமெல்லாம் போக 1,47,350 சரியா”
“நாட் பேட். லா படித்துவிட்டு சரியாக கணக்கு போடுகிறாய்.”
நேரம்: 3.40 பிற்பகல்
“ஆனாலும், அநியாயத்துக்கு ஒரு காபியை 70ரூ சொல்கிறார்கள். இந்தியாவில் காஸ்ட் ஆப் லிவிங் அதிகமாகிவிட்டது. சரி நான் கிளம்புகிறேன். ஒரு தென்னிந்திய எம்.பி 3000 கோடி ரூபாய் வைத்திருக்கிறான். என்ன செய்யலாம்”
“விவேக். இப்போது சந்தையில் இறக்கினால் சந்தேகம் வந்துவிடும். வேண்டுமானால் கேஷாக கொடுக்க சொல், மஹாராஷ்டிராவின் ஆரஞ்சு சேனைக்கு தேவைப்படுகிறது. ரிடர்ன், ஜெயித்தால் ரிலையன்ஸில் பேசி மெட்ரோவின் ஒரு பகுதியினை எம்.பியின் கம்பெனிக்கு தர சொல்கிறேன். தோற்றால், போட்ட காசு 2% வட்டியோடு திரும்பி வந்துவிடும். என்ன சொல்கிறாய்”
“கேட்டு சொல்கிறேன்”
“பை”
“பை”
தேவையான பின்குறிப்பு:
A stock market, or equity market, is a private or public market for the trading of company stock and derivatives at an agreed price; these are securities listed on a stock exchange as well as those only traded privately. The size of the world stock market is estimated at about $36.6 trillion US at the beginning of October 2008. Free Market Economy allows buyers and sellers of the stock to determine the value more perfectly and arriving at fair market value of the corporation.
Labels: சிறுகதை
Mar 7, 2009
சனிமூலை ஆரம்பம்
வாத்தியார் பற்றிய பதிவில், வாத்தியாருக்கு செய்யும் அஞ்சலியாக வாரம் ஒரு பத்தி எழுதுவேன் என்று சொல்லியிருந்தேன். சனிமூலை என பெயரிடப்பட்ட பத்தி இந்த வாரம் முதல். குழப்பங்கள் வராமல் இருக்க அதை ஒரு தனிப்பதிவாகவே போட்டாகிவிட்டது. முதல் போணி இங்கே
Labels: அஞ்சலி, சனிமூலை, சுஜாதா, பத்தி
Mar 6, 2009
தமிழ் சினிமாவின் நகைச்சுவை
த்மிழ் சினிமா 75 ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், அதில் மக்களால் அங்கீகாரம் பெற்று ஆனால், அரசால், துறையால் அங்கீகாரம் பெறாத ஒரே துறை “நகைச்சுவைத் துறை”யாக தான் இருக்கமுடியும். இப்போதைக்கு, தமிழில் 1940களில் ஆரம்பித்து 2009 வரை தமிழ் மக்களை சிரிக்க வைத்த நடிகர்களை பட்டியிலிடுவது தான் முதல் படி. எத்தனையோ நடிகர்கள், எத்தனையோ விதமாக நம்மை சிரிக்க வைத்திருக்கிறார்கள். கலைவாணர், நாகேஷ், சந்திரபாபு, எம்.ஆர்.ராதா போன்றவர்களுக்கு எவ்விதமான மத்தியஅரசு அங்கீகாரமும் தரப்படவில்லை என்பது மிகப்பெரிய அவமானம். மக்களை சிரிக்க வைத்த பல பேருடைய வாழ்க்கை கடைசியில் நாசமாய் போய் முடிந்ததற்கு பல உதாரணங்களை சொல்லலாம் - சந்திரபாபு, சுருளிராஜன். ஆனால், நம்முடைய நடைமுறை வாழ்வின் சிக்கல்களையெல்லாம் சில மணி நேரங்கள் மறந்து நம்மை நம்மையுமறியாமல் வாய் விட்டு சிரிக்க வைத்து, நம்முடைய ஆரோக்கியத்தைப் பேணும் சிரிப்பு டாக்டர்கள். இவர்களுடைய அங்கீகாரம் உலகத்துக்கு முக்கியமானது.
கவிதைக்கும், கதைக்கும், இசைக்கும், பாடலுக்கும் நாம் தரும் முக்கியத்துவம் நகைச்சுவைக்கு நம்மால் தர முடிவதில்லை. ஜோக் தானே என்று அலட்சியமாக சொல்லிவிட்டு நகர்ந்து விடுகிறோம். ஆனால், உண்மையில் மிக கடினமான பணி ஒருவரை சிரிக்க வைப்பதுதான். அழ வைப்பது என்பது மிக சுலபமான ஒன்றாக தான் எனக்கு தோன்றுகிறது.
உண்மையில் டிவிட்டரில் விளையாட்டாய் ஆரம்பித்த பிறகு தான் இதன் முக்கியத்துவமும், மதிப்பும் தெரிந்தது. நண்பர்கள் செய்ய வேண்டியதெல்லாம் இரண்டே இரண்டு தான். பின்னூட்டங்களில் விடுப்பட்டவர்களின் பெயர்களை சேருங்கள். பட்டியல் இடப்பட்டுள்ளவர்களின் புகைப்படங்கள், நகைச்சுவை துணுக்குகள், ஒற்றை வரி புகழ்பெற்ற வசனங்கள், இடம்பெற்ற படங்கள் என தோன்றியவற்றினை தொடர்ச்சியாக பட்டியலிடுங்கள். தெரிந்தே தான் கமல், ரஜினி மற்றும் சிவாஜியினை பட்டியலில் சேர்க்கவில்லை. சிரிப்பினையும், நகைச்சுவையினையேயும் வாழ்க்கையாக கொண்டவர்களை தான் இப்பட்டியலில் சேர்க்க விரும்புகிறேன். சிவாஜியில் ஆரம்பித்து இன்றைய ஜீவா வரை நிறைய பேர் நகைச்சுவை செய்தாலும் அதனை ஒரு Annex ஆக போடலாமேயொழிய முழு முதற் செய்தியாக போட இயலாது.
கணிசமான தகவல்கள் சேர்ந்தபின் இதனை ஒரு தனித்தளமாக போட விரும்புகிறேன். ஏற்கனவே ஒரு தடவை ’வீக்கி’ போட்டு கையை சுட்டுக் கொண்டதால் இந்த முறை எல்லா பரிமாற்றங்களும் பதிவிலேயே நடக்கட்டும். பின்பு இதை என்ன செய்யலாம் என்று யோசிக்கலாம். இயன்றவரை கால வரிசையில் பட்டியலிட்டு இருக்கிறேன். இதிலும் மாற்றங்கள் வரும், அதையும் மாற்றி கால வரிசைப்படி தகவல்களை இணைப்போம்.
ஆண்கள்
கவிதைக்கும், கதைக்கும், இசைக்கும், பாடலுக்கும் நாம் தரும் முக்கியத்துவம் நகைச்சுவைக்கு நம்மால் தர முடிவதில்லை. ஜோக் தானே என்று அலட்சியமாக சொல்லிவிட்டு நகர்ந்து விடுகிறோம். ஆனால், உண்மையில் மிக கடினமான பணி ஒருவரை சிரிக்க வைப்பதுதான். அழ வைப்பது என்பது மிக சுலபமான ஒன்றாக தான் எனக்கு தோன்றுகிறது.
உண்மையில் டிவிட்டரில் விளையாட்டாய் ஆரம்பித்த பிறகு தான் இதன் முக்கியத்துவமும், மதிப்பும் தெரிந்தது. நண்பர்கள் செய்ய வேண்டியதெல்லாம் இரண்டே இரண்டு தான். பின்னூட்டங்களில் விடுப்பட்டவர்களின் பெயர்களை சேருங்கள். பட்டியல் இடப்பட்டுள்ளவர்களின் புகைப்படங்கள், நகைச்சுவை துணுக்குகள், ஒற்றை வரி புகழ்பெற்ற வசனங்கள், இடம்பெற்ற படங்கள் என தோன்றியவற்றினை தொடர்ச்சியாக பட்டியலிடுங்கள். தெரிந்தே தான் கமல், ரஜினி மற்றும் சிவாஜியினை பட்டியலில் சேர்க்கவில்லை. சிரிப்பினையும், நகைச்சுவையினையேயும் வாழ்க்கையாக கொண்டவர்களை தான் இப்பட்டியலில் சேர்க்க விரும்புகிறேன். சிவாஜியில் ஆரம்பித்து இன்றைய ஜீவா வரை நிறைய பேர் நகைச்சுவை செய்தாலும் அதனை ஒரு Annex ஆக போடலாமேயொழிய முழு முதற் செய்தியாக போட இயலாது.
கணிசமான தகவல்கள் சேர்ந்தபின் இதனை ஒரு தனித்தளமாக போட விரும்புகிறேன். ஏற்கனவே ஒரு தடவை ’வீக்கி’ போட்டு கையை சுட்டுக் கொண்டதால் இந்த முறை எல்லா பரிமாற்றங்களும் பதிவிலேயே நடக்கட்டும். பின்பு இதை என்ன செய்யலாம் என்று யோசிக்கலாம். இயன்றவரை கால வரிசையில் பட்டியலிட்டு இருக்கிறேன். இதிலும் மாற்றங்கள் வரும், அதையும் மாற்றி கால வரிசைப்படி தகவல்களை இணைப்போம்.
ஆண்கள்
- ’கலைவாணர்’ என்.எஸ்.கிருஷ்ணன்
- ’காகா’ ராதாகிருஷ்ணன்
- டி.ஆர். ராமச்சந்திரன்
- காளி என் ரத்தினம்
- ஏ.கருணாநிதி
- ’புளிமூட்டை’ ராமசாமி
- டி.எஸ்.துரை ராஜ்
- சாரங்கபாணி
- ”அய்யா தெரியாத்தைய்யா” ராமாராவ்
- பாலையா
- அப்ளாச்சாரி
- 'டணால்' தங்கவேலு
- சந்திரபாபு
- எம்.ஆர்.ராதா
- வி.கே.ராமசாமி
- 'குலதெய்வம்’ராஜகோபால்
- நாகேஷ்
- சோ ராமசாமி
- ஐசரி வேலன்
- எம்.ஆர்.வாசு
- 'டைப்பிஸ்ட்' கோபு
- நீலு
- 'கல்லாப்பெட்டி' சிங்காரம்
- சுருளி ராஜன்
- 'வெண்ணிற ஆடை' மூர்த்தி
- 'தேங்காய்' சீனிவாசன்
- 'என்னத்த' கன்னையா
- எஸ்.வி.சேகர்
- ஒய்.ஜி. மகேந்திரா
- மெளலி
- 'ராக்கெட்' ராமநாதன்
- 'லூஸ்' மோகன்
- அனுமந்து
- 'காத்தாடி' ராமமூர்த்தி
- கோவை அனுராதா
- ’பசி’ நாராயணன்
- ‘கறுப்பு’ நாராயணன்
- ’வெள்ளை’ நாராயணன்
- தவக்களை
- வீரப்பன்
- கவுண்டமணி
- செந்தில்
- விசு
- கிஷ்மு
- வினு சக்ரவர்த்தி
- ஹாஜா ஷெரீப்
- பகோடா காதர்
- சாமிக்கண்ணு
- ‘ஜோக்கர்’ துளசி
- சார்லி
- ’சங்கிலி’ முருகன்
- ஜனகராஜ்
- சிவாஜி
- எஸ்.எஸ்.சந்திரன்
- 'தயிர்வடை' தேசிகன்
- 'ஒரு விரல்' கிருஷ்ணாராவ்
- ‘இடிச்சபுளி’ செல்வராஜ்
- உசிலை மணி
- ‘கவிதாலயா’ கிருஷ்ணன்
- ’டெல்லி’ கணேஷ்
- குள்ள மணி
- 'ஒமக்குச்சி' நரசிம்மன்
- 'குண்டு' கல்யாணம்
- 'கிரேசி' மோகன்
- ‘வரதுக்குட்டி’ கோபி
- 'மாது' பாலாஜி
- ‘அடடே’ மனோகர்
- சின்னி ஜெயந்த்
- ராதா ரவி
- பாண்டியராஜன்
- லிவிங்க்ஸ்டன்
- ஜூனியர் பாலையா
- விவேக்
- வடிவேலு
- ‘செம்புலி’ ஜெகன்
- ‘அல்வா’ வாசு
- பாண்டு
- தியாகு
- தாமு
- வெங்கட்
- மயில்சாமி
- வையாபுரி
- மணிவண்ணன்
- சுந்தர்ராஜன் (இயக்குநர்)
- சுந்தர்ராஜன்
- ரமேஷ் கண்ணா
- மனோபாலா
- சந்தான பாரதி
- டி.பி. கஜேந்திரன்
- ’யுகி’ சேது
- ’பயில்வான்’ ரங்கநாதன்
- குமரிமுத்து
- கருணாஸ்
- ’கஞ்சா’ கருப்பு
- ’கிரேன்’ மனோகர்
- ’சிஸர்’ மனோகர்
- ’செல்’ முருகன்
- பாலாஜி
- சிங்கமுத்து
- முத்துக் காளை
- ’அல்வா’ வாசு
- ’போண்டா’ மணி
- 'கிரேசி’ வெங்கட்
- குமரேசன்
- சந்தானம்
- சத்யன்
- சுகுமார்
- எம்.எஸ்.பாஸ்கர்
- கொட்டாச்சி
- பெஞ்சமின்
- இளவரசு
- பிரேம்ஜி அமரன்
- வெங்கட்பிரபு
- மதன்பாப்
- சிட்டிபாபு
- சுமன் ஷெட்டி
- 'சித்தப்பா’ குமாரவேல
- ஸ்ரீ
- அனுமோகன்
- ‘கரட்டாண்டி’ அருண்குமார்
- மண்ணாங்கட்டி
- ‘தம்பி’ ராமைய்யா
- கிங்காங்
- சிவநாராயணமூர்த்தி
- சகாதேவன் - மகாதேவன் சகோதரர்கள்
- ‘காகா’ கோபால்
- பிரம்மானந்தம்
- 'சாப்ளின்’ பாலு
- சுதாகர் (??)
- டி.ஏ. மதுரம்
- அங்கமுத்து
- முத்துலெட்சுமி
- மனோரமா
- சச்சு
- எஸ்.என்.லட்சுமி
- ஏ.எம்.ராஜம்
- எம்.வி. சரோஜா
- சி.டி.ராஜகாந்தம்
- ராகினி
- காந்திமதி
- வடிவுக்கரசி
- ’அச்ச்சச்சோ’ சித்ரா
- பிந்து கோஷ்
- ஊர்வசி
- கொல்லங்குடி கருப்பாயி
- கோவை சரளா
- லலித குமாரி
- ஐஸ்வர்யா
- ஜெயலட்சுமி
- கல்பனா
- ’பரவை’ முனியம்மா
- சொப்னா
- ஆர்த்தி
- தேவதர்ஷினி
- ‘தேனி’ குஞ்சரம்மா
- ஷோபனா
- மீனாட்சி பாட்டி
Labels: சினிமா, தமிழ்நாடு, தமிழ்ப்பதிவுகள், நகைச்சுவை
Mar 5, 2009
நிதி - 108
வேறொரு செயலுக்காக எனக்கு கீழ்க்காணும் ஆங்கில வார்த்தைகளுக்கு சரியான, சுருக்கமான தமிழ் வார்த்தைகள் தேவைப்படுகின்றன. உதவிக்கு முன்கூட்டியே நன்றி.
நேரடியாக எடிட் செய்ய இங்கே போகவும்.
நேரடியாக எடிட் செய்ய இங்கே போகவும்.
Subscribe to Posts [Atom]